சர்ச்சைக்குள் சிக்கியுள்ள மிலேனியம் சவால் ஒப்பந்தம்

0 989

ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்று இன்­றுடன் ஒரு மாதம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. என்­றாலும் ஜனா­தி­பதித் தேர்­தலின் சூடு இன்னும் தணி­ய­வில்லை என்றே கூற­வேண்டும். தேர்­த­லின்­போது தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அன்று வேட்­பா­ள­ராக இருந்து வழங்­கிய வாக்­கு­று­தி­களை மக்கள் மறக்­க­வில்லை.

அன்று தேர்தல் மேடை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் ஏரா­ள­மா­னவை. அவற்றில் சில முக்­கி­ய­மா­னவை. அன்று எதி­ர­ணி­யி­ன­ராலும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தரப்­பி­ன­ராலும் விமர்­சிக்­கப்­பட்ட முக்­கிய தலைப்பு மிலே­னியம் சவால் ஒப்­பந்­த­மாகும் என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது.

‘மிலே­னியம் சவால் ஒப்­பந்தம்’ (எம்.சி.சி) நாட்­டுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லா­ன­தாகும். இந்த ஒப்­பந்தம் மூலம் இலங்கை ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஓர் பிராந்­தி­ய­மாக மாறி­விடும். அது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­னது என கோத்­தா­பய ராஜபக் ஷவின் தேர்தல் மேடை­களில் முழங்­கப்­பட்­டது.

இந்த ஒப்­பந்­தத்தில் கையொப்­ப­மி­டு­வ­தற்கு இட­ம­ளிக்­காது அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிப்­ப­தற்கு கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி ஆச­னத்தில் அம­ரச்­செய்ய வேண்டும் என தேர்தல் மேடை­களில் வாக்­கா­ளர்கள் கோரப்­பட்­டார்கள். இன்­றைய அமைச்சர் விமல் வீர­வன்ச மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில என்போர் மிலே­னியம் சவால் ஒப்­பந்­தத்தை கிழித்து எறி­ய­வேண்டும் என்­றார்கள்.

இந்­நி­லையில் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கடந்த வாரம் வெளி­யிட்ட அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களில் மிலே­னியம் சவால் ஒப்­பந்­தமும் அடங்­கி­யி­ருந்­தமை அனை­வ­ரையும் திகைப்­புக்­குள்­ளாக்­கி­யது. ‘மிலே­னியம் சவால் ஒப்­பந்தம்’’ தொடர்பில் ஆராய்­வ­தற்கு மீளாய்வு செய்­வ­தற்கு குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது’ என்­பதே அந்தத் தீர்­மா­ன­மாகும்.

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மிலே­னியம் சவால் ஒப்­பந்தம் ஊடாக 480 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை இலங்கை அர­சாங்­கத்­திற்குப் பெற்­றுக்­கொள்ள அனு­ம­திக்கும் உடன்­ப­டிக்­கை­யாகும்.

இந்த ஒப்­பந்தம் ஜனா­தி­பதித் தேர்தல் மேடை­களில் பல­வாறு விமர்­சிக்­கப்­பட்­டது. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­னது என குற்றம் சுமத்­தப்­பட்­டது. இந்த பிர­சா­ரங்கள் கோத்­தா­ப­யவின் வெற்­றிக்கு சாத­க­மாக அமைந்­தன எனலாம். அவ­ரது வெற்­றிக்கு நாட்டின் பாது­காப்பு என்­பதே முக்­கிய கார­ண­மாக அமைந்­தது.

தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களின் மீள் எழுச்சி, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை விட மிலே­னியம் சவால் ஒப்­பந்­தமே நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் என பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யிலே இந்த ஒப்­பந்­தத்தை மீளாய்வு செய்­வ­தற்­காக அர­சாங்கம் குழு­வொன்­றினை நிய­மிக்கத் தீர்­மா­னித்­துள்­ளது. அவ்­வா­றென்றால் தேர்தல் மேடை­களில் இந்த ஒப்­பந்தம் மீளாய்வு செய்­யப்­ப­டாதே விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இந்த ஒப்­பந்தம் ஆரா­யப்­பட்டு மீளாய்வு செய்­யப்­பட்டு தேர்தல் மேடை­களில் விமர்­சிக்­கப்­பட்­டி­ருந்தால் அதற்­கென ஒரு குழு­வினை நிய­மிக்­கும்­தேவை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­காது.
இவ்­வா­றான நிலைமை மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். மக்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தற்­காக ஓர் சர்­வ­தேச ஒப்­பந்தம் தொடர்பில் நினைத்­த­வா­றெல்லாம் பிர­சாரம் செய்து மக்கள் அச்­ச­மூட்­டப்­பட்­ட­மையை எவ்­வ­கை­யிலும் அனு­ம­திக்­க ­மு­டி­யாது. பொய் பிர­சா­ரங்­களைச் செய்து மேற்­கொள்ளும் அர­சியல் நாட்­டுக்கு நன்மை பயக்­காது.

இந்த ஒப்­பந்­தத்தை மீளாய்வு செய்­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது என்ற அறி­விப்பை கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயர்­நீ­தி­மன்றில் சட்­டமா அதிபர் சார்பில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் பர்­ஸானா ஜெமீல் வெளி­யிட்டார். இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வதன் ஊடாக அர­சி­ய­ல­மைப்பு உறுப்­பு­ரைகள் மீறப்­ப­டு­வ­தாக அறி­விக்­கு­மாறும் அந்த ஒப்­பந்தம் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தடுக்கும் வகை­யி­லான இடைக்­கால தடை­யுத்­த­ரவை பிறப்­பிக்­கக்­கோ­ரியும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மூன்று அடிப்­படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான பரி­சீ­ல­னைகள் நீதி­மன்றில் இடம்­பெற்­ற­போதே மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் இந்த அறி­விப்பை வெளி­யிட்டார்.

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது இந்த ஒப்­பந்­தத்­திற்கு எதி­ராக போர்க்­கொடி ஏந்­திய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில இன்று இந்த ஒப்­பந்தம் 70 வீதம் நாட்­டுக்கு நன்மை பயக்கும் என்று கூறுவது வேடிக்கையானதாகும்.
அரசியல்வாதிகள் முன்வைக்கும் கருத்துகள் எப்போதும் உண்மையானவைகளாக இருக்கவேண்டும். வாக்காளர்களைக் கவர்வதற்காக நினைத்தவாறெல்லாம் கருத்துகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தவேண்டும். மக்கள் ஒரு போதும் ஏமாற்றப்படக்கூடாது. எது எவ்வாறாயினும் மிலேனியம் சவால் ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விதிகள் நீக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவது நன்மையாக அமையும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.