பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்து பிரார்த்திப்போம்

0 1,056

சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு உலக மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொடுக்கவே இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இக் காலப்பகுதியில் பலஸ்தீன மக்களின் அவல நிலை குறித்து நாமும் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

பலஸ்­தீனின் 13 மில்­லியன் சனத் தொகையில் அரை­வா­சிக்கும் அதி­க­மானோர் அக­தி­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இஸ்ரேல் இது­வரை பலஸ்­தீ­னுக்கு வர­லாற்று ரீதி­யாக சொந்­த­மாக 27 ஆயிரம் சதுர அடி பரப்­ப­ள­வுள்ள நிலத்தை அப­க­ரித்­துள்­ளது. இது மொத்த நிலத்தில் 85 வீத­மாகும். மேற்குக் கரையில் மாத்­திரம் 2072 ஏக்கர் விவ­சாய நிலம் இஸ்­ரே­லினால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்­ப­ரப்பில் 37 வீத­மாகும். அங்கு 931.5 ஏக்கர் விவ­சாய நிலம் மாத்­தி­ரமே பலஸ்­தீ­னர்­க­ளுக்குச் சொந்­த­மா­க­வுள்­ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்­ப­ரப்பில் 17 வீத­மாகும்.

2000 முதல் 2018 வரை­யான காலப்­ப­கு­தியில் சுமார் 1 மில்­லியன் மரங்கள் இஸ்­ரே­லினால் பிடுங்­கி­யெ­றி­யப்­பட்­டுள்­ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்­திரம் 7122 மரங்கள் பிடுங்­கப்­பட்­டுள்­ளன.

2017 வரை மேற்குக் கரையில் 435 இஸ்­ரே­லிய சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் நிகழ்ந்­துள்­ளன. இவற்­றுடன் இணைந்து இரா­ணுவ கேந்­திர நிலை­யங்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 2018 இல் மாத்­திரம் மேற்குக் கரையில் இஸ்­ரே­லினால் 9384 புதிய வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கடந்த ஆண்டில் 9 புதிய குடி­யேற்­றத்­திட்­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. 2017 ஆம் ஆண்டு வரை­யான கணிப்­பீ­டு­க­ளின்­படி மேற்குக் கரையில் 653,621 பேர் இஸ்­ரே­லினால் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

பலஸ்­தீனைப் பொறுத்­த­வ­ரையில் மிக மோச­மான முறையில் அடக்­கு­மு­றை­யையும் ஆக்­கி­ர­மிப்­பையும் சந்­தித்­துள்ள பிர­தே­சமே காஸா பள்­ளத்­தாக்­காகும். இரு வாரங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் நடாத்திய வான் தாக்குதல்களில் 34 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்­சா­லை­யாக காஸா அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. காஸாவில் வாழும் 10 வீத­மான மக்கள் மாத்­தி­ரமே சுத்­த­மான குடி நீரைப் பெறு­கின்­றனர். மிகுதி 90 வீத­மானோர் மனிதப் பாவ­னைக்­கு­த­வாத மாச­டைந்த நீரையே பரு­கு­கின்­றனர். அதிலும் பலஸ்­தீ­னர்கள் தமக்குச் சொந்­த­மான நீரை இஸ்­ரே­லி­ட­மி­ருந்தே பணம் கொடுத்து வாங்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். மேற்குக் கரையின் பிர­தான நீர் மூல­மான அகுபர் மலை­யி­லி­ருந்து கிடைக்கும் நீரில் 80 வீதம் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது. அத்­துடன் மேற்குக் கரையில் பலஸ்­தீன நக­ரங்­க­ளுக்­கான நீர் விநி­யோகம் பல நாட்­க­ளுக்கு அல்­லது வாரக் கணக்கில் தொடர்ச்­சி­யாக இஸ்­ரே­லினால் துண்­டிக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு பலஸ்­தீன மக்கள் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­பினால் சொல்­லொணா துய­ரங்­களைச் சந்­தித்து வரு­கின்­றனர். இஸ்ரேல் தனது ஆக்­கி­ர­மிப்­பையும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளையும் நிறுத்­து­வ­தற்குப் பதி­லாக தொடர்ந்தும் தீவி­ர­மாக முன்­னெ­டுத்தே வரு­கி­றது. இதனை உல­கி­லுள்ள எந்­த­வொரு நாட்டினாலும் தட்டிக் கேட்க முடியாத நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னரை விடப் பாரிய உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறார். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் இனிமேல் சட்டவிரோதமானவையாக கருதப்படமாட்டாது எனும் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களில் மென்மைப் போக்கையே கடைப்பிடிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவை பலஸ்தீன விவகாரத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா, இஸ்ரேலின் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்ளப் போகிறது என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

இவ்வாறானதொரு தீர்க்கமான காலப்பகுதியிலேயே இந்த வருட பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் எப்போதுமே பலஸ்தீனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்தக் குரல் தொய்வடைய நாம் இடமளிக்க முடியாது.தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பலஸ்தீன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் அந்தப் புனித மண்ணின் விடுதலைக்காக குரல் கொடுக்கவும் பிரார்த்திக்கவும் நாம் அனைவரும் முன்வர வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.