பொதுத் தேர்தலில் தேரர்கள் போட்டியிட இடமளிக்காதீர்

மூன்று நிக்காயாக்கள் ஜனாதிபதியை கோர தீர்மானம்

0 1,162

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் எந்­த­வொரு பெளத்த குரு­மா­ருக்கும் போட்­டி­யி­டு­வ­தற்கு இட­ம­ளிக்­க­வேண்டாம் என மூன்று பெளத்த நிக்­கா­யாக்­க­ளையும் சேர்ந்த சிரேஷ்ட பெளத்த குரு­மார்கள் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுப்­ப­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளனர்.

 இதன் முதற்­கட்­ட­மாக அவர்கள் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவைச் சந்­தித்து இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ளனர். பெளத்த குரு­மார்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக, மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகப் பதவி வகிப்­ப­தனால் பெளத்த சாச­னத்­துக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன. பெளத்த மத குருமார் பெளத்த மதத்தைப் போதிப்­ப­வர்­க­ளாக மாத்­தி­ரமே இருக்­க­வேண்டும். எனவே எந்­த­வொரு பெளத்த மத குரு­வுக்கும் தேர்­தலில் போட்­டி­யிட சந்­தர்ப்பம் வழங்க வேண்டாம் என அவர்கள் பிர­த­மரைக் கோரி­யுள்­ளார்கள். 

கடந்த காலங்­களில் பெளத்த குருமார் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகப் பத­வி­யேற்று அவர்கள் மேற்­கொண்ட சில செயற்­பா­டுகள் மக்கள் மத்­தி­யிலே விமர்­ச­னங்­களுக்குள்­ளாகின. அதனால் பெளத்­த­மத குரு­மார்­க­ளுக்கு தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும்.
மூன்று நிக்­கா­யாக்­களின் சிரேஷ்ட பெளத்த குரு­மார்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கைகள் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தாகத் தெரி­வித்த பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ இது தொடர்பில் பல­ரது கருத்­து­களைப் பெற்­றுக்­கொள்­வ­தா­கவும் கூறினார். இதேவேளை இது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.