ஆபத்தான சமிக்ஞை

0 1,037

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­களைத் தொடர்ந்து இலங்கை முஸ்­லிம்கள் ஒரு­வித அச்ச உணர்வில் இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. முஸ்­லிம்­களின் ஆத­ர­வின்­றியும் பெரும்­பான்மை பௌத்த சிங்­கள வாக்­கு­க­ளாலும் அமையப் பெற்ற அர­சாங்கம் என்­ப­தா­லேயே இந்த அச்ச உணர்வு தோன்­றி­யுள்­ளது.

இருந்­த­போ­திலும் புதிய ஜனா­தி­பதி தனக்கு வாக்­க­ளித்த மக்­களை மட்­டு­மன்றி வாக்­க­ளிக்­காத மக்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்வேன் என வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். அவ­ரது வாக்­கு­று­தியை முஸ்­லிம்கள் இன்றும் நம்­பு­கின்­றனர். இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தா­கவே அவ­ரது செயற்­பா­டுகள் அமையும் என்றும் அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

துர­திஷ்­ட­வ­ச­மாக ஜனா­தி­ப­தியும் புதிய அர­சாங்­கமும் முஸ்­லிம்கள் தொடர்பில் நல்­ல­பிப்­பி­ரா­யத்தைக் கொண்­டி­ருப்பின் அதனை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமைச்­ச­ரவை நிய­மனம் அமைந்­தி­ருந்­தது.

எனினும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளிலோ அல்­லது இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளிலோ ஒரு முஸ்­லி­மேனும் உள்­வாங்­கப்­ப­டா­மை­யா­னது வித்­தி­யா­ச­மா­ன­தொரு செய்­தி­யையே இலங்கை முஸ்­லிம்­க­ளுக்குச் சொல்­லி­யுள்­ளது.

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள பத­வி­களில் முஸ்­லிம்­களை உள்­ளீர்க்க முடி­யா­மைக்கு நியா­ய­மான கார­ணங்கள் உள்­ளன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆனாலும் இரா­ஜாங்க அமைச்சுப் பத­வி­களில் ஆகக் குறைந்­தது ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தி­யை­யா­வது உள்­ளீர்த்­தி­ருக்­கலாம் என முன்­வைக்­கப்­படும் விமர்­ச­னங்­களை மறு­த­லிக்க முடி­யா­துள்­ளது.

வாக்­க­ளிக்­காத முஸ்­லிம்­களைத் தவிர்த்து வாக்­க­ளித்த முஸ்­லிம்­க­ளை­யேனும் கெள­ர­விக்கும் வகையில் இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரை நிய­மித்­தி­ருக்க முடியும். அதன் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் நல்­ல­பிப்­பி­ரா­யத்தை வென்று அதனை அடுத்­து­வரும் தேர்­தல்­களில் வாக்­கு­க­ளாக அறு­வடை செய்­தி­ருக்க முடியும். எனினும் அதற்­கி­ருந்த வாய்ப்­பையும் அர­சாங்கம் தவ­ற­விட்­டுள்­ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மனோ­நிலை பெரும்­பான்மைச் சிங்­கள மக்கள் மத்­தியில் ஆழப்­ப­திந்­துள்ள நிலையில், முஸ்­லிம்­களை அமைச்­ச­ர­வையில் உள்­ளீர்ப்­ப­தா­னது பெரும்­பான்­மை­யி­னரை அதி­ருப்­திக்­குள்­ளாக்கும் என அர­சாங்கம் யோசித்­தி­ருக்கக் கூடும். வட மேல் மாகா­ணத்தில் முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக மேற்­கி­ளம்­பி­யுள்ள எதிர்ப்­பலை இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும். எனினும் முழு நாட்டு மக்­க­ளுக்­கு­மான தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி ஒரு சமூ­கத்தை மாத்­தி­ர­மன்றி சக­ல­ரையும் அர­வ­ணைத்துச் செல்­லா­து­விடின் அது அவர் மீதா­னதும் அவ­ரது கட்­சியின் மீதா­ன­து­மான சந்­தே­கப்­பார்­வையை மேலும் நிரூ­பிப்­ப­தா­கவே அமைந்­து­விடும்.

அதே­போன்­றுதான் முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆத­ரவைப் பெற்ற புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் இது­வரை தனக்கு வாக்­க­ளித்த முஸ்­லிம்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான கருத்­துக்­க­ளையும் முன்­வைக்­காது மௌனம் சாதிப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்கள் உள்­ளீர்க்­கப்­ப­டாமை குறித்து முன்னாள் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர மாத்­தி­ரமே குரல் எழுப்­பி­யுள்ளார். அடுத்த தேர்­தல்­க­ளிலும் கள­மி­றங்க வேண்­டு­மாயின் சிங்­கள மக்­களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற அர­சியல் தந்­தி­ரோ­பா­யத்தை சஜித் பிரே­ம­தாச கடைப்­பி­டிக்கக் கூடும். அதற்­காக தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு அநீ­தி­யி­ழைக்­கப்­ப­டும்­போது அதற்காக குரல் கொடுக்க அவர் தயங்கவோ பின்னிற்கவோ கூடாது. இன்றேல் அவரும் இனவாத சக்திகளுக்கும் இனவாத வாக்குகளுக்கும் அடிபணிந்தவராகிவிடுவார். அவ்வாறானததொரு நிலைமை தோற்றம் பெறுமாயின் அது நிச்சயமாக இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானதே. இனவாதத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகம் இனிவரும் நாட்களில் எவ்வாறு எதிர்நீச்சல் அடிக்கப் போகிறது என்பதிலேயே அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.