ராஜபக் ஷாக்கள் முஸ்லிம்களை அரவணைக்க இந்த சந்தர்ப்பத்தையும் தவற விடலாமா?

0 1,305

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை கடந்த வாரம் நிய­மிக்­கப்­பட்­டது. 16 பேரைக் கொண்ட இந்த அமைச்­ச­ர­வையில் டக்ளஸ் தேவா­னந்தா மற்றும் ஆறு­முகன் தொண்­டமான் ஆகியோர் சிறு­பான்­மை­யினர் சார்பில் அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர்.

இதற்கு மேல­தி­க­மாக 35 இரா­ஜாங்க அமைச்­சர்­களும் மூன்று பிரதி அமைச்­சர்­களும் கடந்த புதன்­கி­ழமை (27) நிய­மிக்­கப்­பட்­டனர். எனினும், இந்தப் புதிய அமைச்சர், இரா­ஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் நிய­ம­னத்தில் சிறு­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்த எவரும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­ய­டைந்த கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ் மற்றும் முஸ்­லிம்கள் வாக்­கா­ளிக்­காத நிலையில், அவர்­களை அர­வ­ணைத்தே தனது ஆட்சி அமை­யு­மென புதிய ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் நாடு சுதந்­திரம் பெற்ற பின்னர் முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வ­மின்றி அமைக்­கப்­பட்ட முத­லா­வது அமைச்­ச­ரவை இது­வென அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். இதனால் இந்த விடயம் இன்று பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது.

எனினும், கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த நிலையில் எவ்­வாறு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பத­வி­களை எதிர்­பார்க்க முடியும் எனவும் மற்­று­மொரு தரப்­பினர் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

நாட்டின் முக்­கிய தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் ஒரு சபையே அமைச்­ச­ர­வை­யாகும். பாரம்­ப­ரி­ய­மாக வாரத்தில் ஒரு தடவை ஜனா­தி­பதி தலை­மையில் அமைச்­ச­ரவை கூட்­டங்கள் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும். தேவை­யேற்­படின் விசேட அமைச்­ச­ரவை கூட்­டங்கள் ஜனா­தி­ப­தி­யினால் கூட்ட முடியும்.

நாட்டில் புதிய சட்­டங்கள் எதையும் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தென்றால் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தின் பிற்­பாடே அந்த சட்­ட­மூ­லங்­களை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க முடியும். இவ்­வாறு முக்­கி­யத்­து­வ­மிக்க இந்த அதி­யுயர் சபையில் முஸ்லிம் பிர­தி­நித்­துவம் இல்­லாமல் இருப்­பது இலங்கை வாழ் முஸ்­லிம்கள் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

முஸ்­லிம்கள் பெரு­வா­ரி­யாக சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்­துள்­ளமை தொகுதி அடிப்­ப­டை­யி­லான தேர்தல் முடி­வி­லி­ருந்து ஊகித்­துக்­கொள்ள முடியும். எனினும், முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சிறு பகு­தி­யினர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர். இத­னா­லேயே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பேரு­வளை, ஹாரிஸ்­பத்­துவ (அக்­கு­றணை) மற்றும் வெலி­கம ஆகிய தேர்தல் தொகு­தி­களில் கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்றார்.

இதற்கு மேல­தி­க­மாக அக்­க­ரைப்­பற்று மற்றும் சாய்ந்­த­ம­ருது ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்­காக உழைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு ஆத­ர­வ­ளித்­தது. இதற்­கி­ணங்க அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசர் முஸ்­தபா மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு ஆத­ர­வாக பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இதனால் அமைச்­சர்கள் நிய­ம­னத்­தின்­போது இவர்கள் இரு­வ­ருக்கும் பத­விகள் வழங்­கப்­ப­டலா­மென எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் அது இடம்­பெ­ற­வில்லை. இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஆளும் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான காதர் மஸ்தான் பிபிசி தமி­ழிற்கு கருத்து தெரி­விக்­கையில்,

“முஸ்லிம் ஒரு­வ­ருக்கு அமைச்சுப் பத­வி­யொன்றும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை முஸ்லிம் சமூ­கமும், முஸ்லிம் நாடு­களும் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றன. அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகிய பத­வி­களில் முஸ்லிம் ஒருவர் கட்­டாயம் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இருந்­த­போதும் அனு­ப­வத்தில் மூத்­த­வர்கள் என்ற அடிப்­ப­டை­யில்தான் அமைச்சர் பத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. நானும் இந்த தட­வைதான் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­னவர். ஆளுந்­த­ரப்பில் என்னை விடவும் பல மூத்­த­வர்கள் உள்­ளனர். அதனால், ஆளுந் தரப்பில் முஸ்­லிம்கள் இடம்­பெ­றாமல் போயி­ருக்கக் கூடும்” என்றார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு இந்த அமைச்­ச­ர­வையில் முக்­கிய பதவி வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்­டு­மென முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­த­ரப்­பினர் சமூக ஊட­கங்­களில் குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

“ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த பைஸர் முஸ்­தபா ஏற்­க­னவே அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக இருந்­தவர். எனவே, அவரை அமைச்­ச­ர­வையில் இந்த அர­சாங்கம் இணைத்­தி­ருக்­கலாம். ஆனால், இத­னை­யெல்லாம் செய்­யாமல் முஸ்­லிம்­களை இந்த ஆட்­சி­யா­ளர்கள் பழி­வாங்­கி­யுள்­ள­தா­கவே தெரி­கி­றது” என பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பைசால் காசீம் பிபிசி தமி­ழுக்கு தெரி­வித்தார்.

இதே­வளை, அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பதவி வழங்­கப்­ப­டா­ததால், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பத­விகள் தனக்கு வேண்­டா­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸர் முஸ்­தபா ஏற்­கெ­னவே கூறி­யி­ருந்தார் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான காதர் மஸ்தான் சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் சார்­பாக அர­சி­யலில் நுழைந்த பைசர் முஸ்­தபா, ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடாக 2004ஆம் ஆண்டு கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்றம் நுழைந்தார். எனினும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மையைப் பெற்ற இவ­ருக்குப் பிரதி அமைச்சர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டன.

2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் கண்டி மாவட்ட முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களின் ஊடாகத் தெரி­வான இவர், 2013ஆம் ஆண்டு காலப் பகு­தியில் குறித்த மாவட்ட மக்­களை கைவிட்­டு­விட்டு தனது அர­சி­யலை மத்­திய கொழும்பில் ஆரம்­பித்தார். குறித்த தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­மை­யினால் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும், அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார்.

தெல்­தோட்­டைக்கு தனி­யான பிர­தேச சபை வழங்­கப்­பட வேண்­டு­மென இவர் கண்டி மாவட்ட எம்.பி.யாக இருக்­கும்­போது பாரா­ளு­மன்­றத்தில் குரல் எழுப்­பி­யி­ருந்தார். சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான நக­ர­சபை வழங்­குவேன் என அங்கு இடம்­பெற்ற பொதுக் கூட்­ட­மொன்றில் பகி­ரங்­க­மாக உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்தார். எனினும் இவர் உள்ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்­ச­ராக செயற்­பட்ட காலப் பகு­தியில் குறித்த கோரிக்­கை­களை அவர் நிறை­வேற்றத் தவ­றி­விட்டார் என்ற குற்­றச்­சாட்டு தொடர்ந்து நீடிக்­கி­றது.

உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்­ச­ராக பைஸர் முஸ்­தபா செயற்­பட்ட போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட சில சட்­ட­மூ­லங்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டமை சுட்­டிக்­காட்­டத்­தக்க விட­யமே. இது தவிர ஜனா­தி­பதி தேர்தல் அறி­வித்­ததன் பின்னர் ஒரு அழுத்­த­மான சூழலில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை உடன் நிறை­வேற்­ற­வேண்டும் என்ற கோரிக்­கையை அவர் முன்­வைத்­தி­ருந்தார்.

கடந்த காலங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான சட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போது முன்னாள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் போராடி முஸ்லிம் சமூ­கத்­திற்குப் பல நன்­மை­களை பெற்­றுக்­கொ­டுத்­த­மையை இங்கு ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

அது­போன்ற முஸ்லிம் தலை­வர்­களே அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிப்­பது காலத்தின் தேவை­யாகும். இதே­வேளை, அமைச்சர் பத­வி­க­ளுக்கு முஸ்லிம் ஒரு­வ­ரை­யேனும் இந்த ஆட்­சி­யா­ளர்கள் நிய­மிக்­காமல் விட்­டதன் மூலம், முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது” என முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான பைசல் காசிம் தெரி­வித்தார்.

இதே­வேளை, “அமைச்­ச­ர­வையில் தமி­ழர்கள் இரு­வ­ருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து ஒரு­வ­ரேனும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்­லிம்கள் இரண்டு தரப்­பாகப் பிரிந்து வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஆனால், அந்த இரண்டு தரப்­புக்­களும் பௌத்த சம­யத்தைச் சேர்ந்த வேட்­பா­ளர்­க­ளுக்­குத்தான் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு நாங்கள் ஏன் வாக்­க­ளித்தோம் என்­பதும், மற்­றைய முஸ்லிம் தரப்பு கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஏன் வாக்­க­ளித்­தனர் என்­பதும் அவ­ர­வரின் விருப்­ப­மாகும். அதற்­காக முஸ்லிம் சமூ­கத்தை ஆட்­சி­யா­ளர்கள் பழி­வாங்கக் கூடாது என்றும் பைசல் காசிம் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷவின் முன்­னைய ஆட்­சியில் நடந்த சம்­ப­வங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு கசப்பை ஏற்­ப­டுத்­தி­ருந்­தன. அத­னால்தான் நடந்­து­மு­டிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்­களில் பெரும்­பா­லானோர் கோத்­தா­வுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஆனாலும் முஸ்­லிம்­களின் மன­தி­லுள்ள கசப்பை நீக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்பம் இப்­போது ராஜபக் ஷாக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அதனை அவர்கள் செய்து, முஸ்­லிம்­களின் ஆத­ரவை வென்­றெ­டுக்க வேண்டும்.ஆனால், இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்சுப் பத­விகள் வழங்­காமல் புறக்­க­ணித்தால், அந்த சமூ­கத்தின் மனதில் ஏற்­பட்­டுள்ள கசப்பு மேலும் அதி­க­ரிக்­கவே செய்யும் என்பதே நிதர்சனமாகும்.

ராஜபக் ஷ குடும்பத்தினர் தொடர்பில் முஸ்லிம்களின் மனதிலுள்ள கசப்பை நீக்குவதற் கான நடவடிக்கைகளை அரசாங்கம் உனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் இலகுவில் பாரிய நன்மதிப்பை பெறமுடியும்.

குறிப்பாக விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப் படும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற வேண்டிய தேவையொன்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்குள்ளது.

இது தொடர்பிலான நடவடிக்கை யினை குறித்த கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டும். இதேவேளை, அமைச்சர் பதவி கள் வழங்கப்படவில்லை. என தெரிவித்து முஸ்லிம்கள் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தியடையத் தேவை யில்லை. பதவிகளின்றியும் பல்வேறு விடயங்களை சாதிக்க முடியும். இதனால் முஸ்லிம் சமூகம் ஒதுங்கியிருக்காமல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது முஸ்லிம் சமூகத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.