ஆளுநர் முஸம்மில் திங்களன்று பதவியேற்பு

0 1,216

வடமேல் மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் எதிர்­வரும் டிசம்பர் 2 ஆம் திகதி தனது கட­மை­களைப் பொறுப்­பேற்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வடமேல் மாகாண ஆளு­ந­ராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள மைக்கு எதி­ராக கடந்த 26 ஆம் திகதி முதல் குரு­நாகல் நகரின் பல்­வேறு பகு­தி­களில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ள­மையையடுத்து அவர் பத­வியைப் பொறுப்­பேற்­பதில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆளுநர் முஸம்­மி­லுக்கு எதி­ராக ஒட்­டப்­பட்ட சுவ­ரொட்­டிகள் நேற்றும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. “முஸ்லிம் ஆளுநர் எங்­க­ளுக்கு வேண்டாம் சிங்­க­ள­வர்கள் நாம் வாக்­க­ளித்து இவர்­க­ளிடம் மண்­டி­யி­ட­லாமா?” எனும் வாச­கங்கள் அடங்­கிய சுவ­ரொட்­டி­களே ஒட்­டப்­பட்­டுள்­ளன.

வடமேல் மாகா­ணத்­துக்கு ஆளு­ந­ராக நிய­மனம் பெறு­ப­வர்கள் சில பெளத்த சம்­பி­ர­தா­யங்­களைப் பேண வேண்­டி­யுள்­ள­தாலே முஸ்லிம் ஆளு­ந­ருக்கு எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

குரு­நா­க­லி­லுள்ள எத்­கந்த விகா­ரையில் நடை­பெறும் பெர­ஹரா நிகழ்­வி­னை­ய­டுத்து பெளத்­தர்­களால் செய்­தி­யொன்று ஆளு­ந­ரிடம் கைய­ளிக்­கப்­ப­டு­வது சம்­பி­ர­தா­ய­மாகும். இந்தச் செய்­தியை முஸ்லிம் ஆளு­ந­ரிடம் கைய­ளிப்­பதா? என்றும் அம்­மக்­களால் வின­வப்­ப­டு­கி­றது.

அத்­தோடு ஆளு­நரின் அலு­வ­லகம் அமைந்­துள்ள மாளி­காவ வளா­கத்தில் அரச மர­மொன்றும் இருக்­கி­றது. புதி­தாக நிய­மனம் பெறும் ஆளுநர் அங்கு சில அனுஷ்­டா­னங்­களை மேற்­கொள்­வது சம்­பி­ர­தா­ய­மாகும். இந்த மாளி­காவ அலு­வ­ல­கத்­துக்கும் கண்டி ஸ்ரீ தலதா மாளி­கா­வைக்கும் நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆளுநர் முஸம்மில் சுமு­க­மான சூழ்­நி­லையில் கட­மை­யேற்­ப­தற்­கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை ஆளுநர் முஸம்மிலைத் தொடர்பு கொண்டு வினவியபோது எதிர்வரும் திங்கட்கிழமை 2 ஆம் திகதி முற்பகல் 9.30 க்கு கடமையைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல், யு.எல்.முஸம்மில்

Leave A Reply

Your email address will not be published.