இனவாத பிரசாரத்தை முன்னெடுத்த: சிறுபான்மையின அரசியல்வாதிகளுக்கு தென்னிலங்கை மக்கள் சரியான பதிலடி

லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன

0 613

தமது அர­சியல் இலா­பத்­துக்­காக இன­பே­தத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்­தோட்டப் பகு­தி­களில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்த சிறு­பான்மை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தெற்­கி­லுள்ள மக்கள் சரி­யான பதி­ல­டியைக் கொடுத்­துள்­ள­தாக தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் யாபா அபே­கு­ண­வர்­தன, எதிர்­வரும் பொது தேர்­த­லின்­போது சிறு­பான்­மை­யின மக்­களை தம்­முடன் இணைந்து செயற்­ப­டு­மாறு அழைப்பு விடுத்­துள்ளார்.

பத்­த­ர­முல்ல – நெலும் மாவத்­தையில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

நாங்கள் தெரி­வித்­ததை போன்றே 16 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் பெரும்­பான்மை வாக்­கு­களை பெற்று வெற்றி பெற்­றுள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் வடக்கு, கிழக்கு வாக்­கு­களை எம்மால் பெற­மு­டி­யாது என்றும், அங்கு அவர்கள் பெரு­பான்­மையை பெற்று விட்டால் ஏனைய பகு­தி­களில் கிடைக்கும் வாக்­கு­களை கொண்டு வெற்­றி­பெற முடியும் என்­றுமே எண்­ணி­யி­ருந்­தனர். ஆனால் பெரும்­பான்மை மக்கள் அவர்­க­ளுக்கு சிறந்த பதி­ல­டியைக் கொடுத்­துள்­ளனர்.

சிறு­பான்மை இன­வாத அர­சியல் தலை­வர்­களின் பிர­சா­ரங்­க­ளுக்கு தெற்கில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிறு­பான்மை மக்கள் இனி­வரும் காலங்­களில் இன­வா­தி­க­ளுடன் இணைந்­தி­ருக்­காமல் எம்­முடன் இணைந்து செயற்­ப­டுங்கள் என்று நாங்கள் அவர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கின்றோம்.

பொதுத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு ஐ.தே.கவினர் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காமல் உள்­ளனர். மக்­களின் தீர்­மா­னத்­திற்­கி­ணங்க விரைவில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஐ.தே.க. எமக்கு வழங்க வேண்டும். ஐ.தே.க.வின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் தங்­களின் ஓய்­வூ­தி­யத்தை மனதிற் கொண்டு செயற்­ப­டு­கின்­றார்கள். அத்­துடன் எமது மூன்­று­மாத கால ஆட்­சியில் ஏதா­வது தவ­றுகள் இடம்­பெ­றுமா என்று எதிர்­பார்த்­தி­ருக்கும் அவர்கள், அதன்­மூலம் பய­ன­டை­வ­தற்கு கனவு காண்­கின்­றார்கள்.

அத­னால்தான் இவர்கள் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு இணக்கம் தெரி­விக்­காமல் இருக்­கின்­றார்கள்.

தற்­போது எதிர்க்­கட்சித் தலைவர் யார் என்­ப­திலும் ஐ.தே.க.வில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. எம்மை பொறுத்­த­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் யாருக்குப் பெரும்­பான்மை ஆத­ரவு இருக்­கின்­றதோ அவரே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக செயற்­பட வேண்டும். அவ்­வாறு பார்க்­கின்­ற­போது ரணில் விக்­கி­ரம சிங்­க­விற்கே பெரும்­பான்­மை­யான ஆத­ர­வி­ருக்­கின்­றது. அவரே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்­க­மு­டியும். எங்கள் விருப்­பமும் அதுவே.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநுர பிரி­ய­தர்­ஷன யாபா கூறி­ய­தா­வது, ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சிக் காலத்­தின்­போது அமைக்­கப்­பட்ட விசா­ர­ணைப்­பி­ரி­வுகள் தனிப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மீது கொண்­டி­ருந்த குரோதம் கார­ண­மா­கவே ஸ்தாபிக்­கப்­பட்­டன. இந்த விசா­ரணைப் பிரி­வு­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஐ.தே.க. அர­சாங்­கத்­தினர் தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­விற்கு எதி­ராக எவ்­வ­ள­வுதான் சேறு­பூ­சல்­களை மேற்­கொண்ட போதிலும் மக்கள் அவர்­களின் தீர்­மா­னத்தில் உறு­தி­யாக இருந்­துள்­ளனர்.

இனங்­க­ளுக்­கி­டையில் பேதத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் கடந்த அர­சாங்­கத்தில் சிறு­பான்­மை­யின அர­சியல் தலை­வர்கள் செயற்­பட்­ட­மையின் கார­ண­மா­கவே இன்று நாட்­டுக்குள் இன பேதம் ஏற்­பட்­டுள்­ளது . இவர்­களே சிறு­பான்மை மக்கள் மத்­தியில் எம்மை இன­வா­தி­க­ளாகக் காண்­பித்­த­வர்கள்.
அரச ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் மற்றும் இடை­யூ­று­களின் கார­ண­மா­கவே ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பெரும்­பான்­மை­யான அரச ஊழி­யர்கள் ஐ.தே.க.விற்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். ஜனா­தி­பதி கோத்­தா­பய ஒரு­போதும் தன்னை முன்­னி­லைப்­ப­டுத்தி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­க­வில்லை. நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்­புவோம் என்றே அவர் தெரி­வித்து வந்தார்.

சிறந்த முறை­யி­லான பிர­சா­ரங்­களை அவர் முன்­னெ­டுத்­தி­ருந்த அதே­வேளை, மக்­களும் ஐ.தே.க.வின் செயற்­பா­டுகள் தொடர்பில் தெளி­வு­டனே இருந்­துள்­ளனர். இவர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மோச­டிகள் மற்றும் அப்­போ­தைய அமைச்­சர்­களால் வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்கள் தொடர்­பிலும் மக்கள் விழிப்­புடன் இருந்­துள்­ளனர். கடந்த அர­சாங்­கத்தின் போதே எமது பிக்­குகள் பெரு­ம­ளவு கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், பௌத்த மதம் பிர­தான மத­மல்ல என்றும் அமைச்சர் ஒரு­வரால் கூறப்­பட்­டி­ருந்­தது. இதற்­கெல்லாம் மக்கள் தற்­போது அவர்­களின் பதி­ல­டியை வழங்­கி­யுள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­னா­யக்க கூறி­ய­தா­வது,

ஐ.தே.க. அர­சாங்­கத்­தினர் பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து நாட்­டின்­மீது உண்­மை­யான பற்று கொண்­டி­ருந்த தலை­வ­ரான மஹிந்த ராஜபக் ஷவை கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தலின் போது தோல்­வி­ய­டையச் செய்­தனர். ஆனால் இதனால் நாட்­டுக்கு ஏற்­பட்ட பயன்தான் என்ன? மீண்டும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் ஒன்று ஏற்­பட்­ட­துடன் இதனால் சுற்­று­லாத்­து­றையும் பாதிக்­கப்­பட்­டது. இவ்­வா­றான நிலையில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திலும் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த அர­சாங்­கத்தின் சிறு­பான்மை அர­சி­யல்­வா­திகள் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வின்றி நாட்டின் தலை­வரை உரு­வாக்­க­மு­டி­யாது என்ற நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தனர். அதற்கும் தற்­போது பெரும்­பான்மை மக்­களால் பதி­லடி வழங்­கப்­பட்­டுள்­ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவு குறைவதற்கான பிரதான சூத்திரதாரிகளாக சிறுபான்மை அரசியல் தலைவர்களே செயற்பட்டுள்ளனர்.

சிறுபான்மை மக்களை சந்தித்து ஜனாதிபதி கோத்தாபயவையும் அவரை சுற்றி இருப்பவர்களையும் இனவாதிகளாக சித்தி ரித்தனர். இதனாலேயே சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறுவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டிருந்தன. இருந்த போதிலும் நாடுமீது பற்றுக்கொண்ட ஒரு சில சிறுபான்மை மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக நாம் அவர்களை வரவேற்கின்றோம். இனிவரும் காலங்களில் எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறும் நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.