தீவிரவாதத்துக்கு ஒத்துழைத்தோர் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு

0 575

ஏப்ரல் 21 குண்­டு­வெ­டிப்­புடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள், சஹ்­ரா­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள், உதவி செய்­த­வர்கள், தீவி­ர­வா­தத்­துக்கு ஒத்­து­ழைத்தோர் அனை­வரும் பார­பட்­ச­மின்றித் தண்­டிக்­கப்­ப­டு­வ­ரென சிறிய மற்றும் நடுத்­தர தொழிற்­றுறை, தொழில் முயற்சி அபி­வி­ருத்தி, கைத்­தொழில் வளங்கள் முகா­மைத்­துவ அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

அத்­துடன், மக்கள் வழங்­கிய ஆணைக்­கேற்ப, அவர்­களின் நம்­பிக்கை வீண்­போ­காத வகையில் புதிய ஆட்­சியை கொண்டு செல்வோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அமைச்சில் நேற்று கடமைகளை பொறுப்­பேற்­றபின் ஊட­க­வி­யா­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.
ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பா­லான பெரும்­பான்மை மக்­க­ளி­னதும் சிறி­ய­ள­வி­லான சிறு­பான்மை மக்­க­ளி­னதும் ஆத­ர­வுடன் கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக அமோக ஆத­ர­வுடன் வெற்­றி­பெற்­றுள்ளார்.

மக்­களின் விருப்­பத்­திற்கு ஏற்­ற­வ­கையில் அவர்­களின் நலனை கருத்­திற்­கொண்டு நாம் செயற்­ப­டுவோம். அவர்­களின் தேவை­களை நிறை­வேற்றப் பாடு­ப­டுவோம்.

கடந்த நான்­கரை வரு­ட­கால ஆட்­சியில் நடந்த ஊழல்கள், முறை­கே­டுகள் அனைத்­தையும் முறை­யாக விசா­ரித்து குற்­ற­வா­ளி­களை தண்­டிப்போம். அதே­போன்று அமைச்சு, நிறு­வ­னங்­களில் இடம்­பெற்ற மோச­டிகள் குறித்தும் விசா­ரணை செய்து குற்­ற­வா­ளிகள் சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள்.

அமைச்சு, நிறு­வ­னங்கள் தொடர்பில் பொது­மக்கள், தொழிற்­சங்­கங்கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து நிறைய முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. பாராளு­மன்­றத்தில் சட்­ட­மொன்றை நிறை­வேற்றி முறை­யான பொறி­முறை ஊடாக அவற்றை விசா­ரித்து தீர்வு பெறு­வ­தும் எதிர்­கா­லத்தில் நிறு­வ­னங்­களில் முறை­கே­டுகள் இடம்­பெ­றாத வண்ணம் பாது­காப்­பதும் அரசின் நோக்­க­மாகும். அந்­த­வ­கையில் விரைவில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். அத்­துடன் அமைச்சின் எதிர்­கால வேலைத்­திட்­டங்­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஏப்ரல் 21 குண்­டு­வெ­டிப்பு தொடர்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் கேள்­விக்குப் பதி­ல­ளித்த அமைச்சர், குண்­டு­வெ­டிப்­புடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள், சஹ்­ரா­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள், உதவி செய்­த­வர்கள், தீவி­ர­வா­தத்­துக்கு ஒத்­து­ழைத்தோர் அனை­வரும் பார­பட்­ச­மின்றித் தண்­டிக்­கப்­ப­டுவர் என்றார்.

மிலேனியம் ஒப்பந்தத்தில் இந்த அரசாங்கம் ஒருபோதும் கையெழுத்திடாது என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.