தேர்தலின் பின்னரான வன்செயல்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

0 1,040

எமது நாட்டின் 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தனது கட­மை­களைப் பொறுப்­பேற்றுக் கொண்டார். என்­றாலும்— ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்று முடிந்­ததன் பின்பும் நாட்டின் பல பகு­தி­களில் வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­வ­தாகத் தேர்தல் வன்­மு­றை­களைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான நிலையம் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­ர­ம­ரத்­ன­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­யுள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்பு நாட்டின் பல இடங்­களில் இடம்­பெறும் சம்­ப­வங்கள் சிறி­ய­தா­யினும் அவை நாட்டின் சமா­தா­னத்­துக்கும், மக்­களின் சக­வாழ்­வுக்கும் பங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் மாற்றம் பெறலாம். அதனால் இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்­தும்­ப­டியும் தேர்தல் வன்­மு­றை­களைக் கண்­கா­ணிக்கும் மத்­திய நிலையம் பதில் பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

தேர்தல் தினத்­தன்றும் அதற்கு மறு­தி­னமும் தேர்தல் வன்­மு­றை­களைக் கண்­கா­ணிக்கும் மத்­திய நிலை­யத்­துக்கு 16 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவை தாக்­குதல், தீயிடல், பட்­டாசு கொளுத்தி அச்­சு­றுத்தல், வீடுகள் மற்றும் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்தல், பொது சொத்­து­க­ளுக்கு சேதம் விளை­வித்தல், தொலை­பே­சி­யூ­டாக கொலை அச்­சு­றுத்தல் என்­ப­ன­வற்­றுடன் தொடர்­பு­டை­ய­ன­வாகும். இவ்­வா­றான சிறு சம்­ப­வங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் பெரி­து­ப­டுத்­தப்­பட்டு பதி­வேற்றம் செய்­யப்­ப­டு­வதால் பாரிய கல­வ­ரங்கள் உரு­வாகும் நிலைமை ஏற்­ப­டலாம். எனவே பொலிஸார் இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி மக்­க­ளி­னதும், சொத்­து­க­ளி­னதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

பண்­டா­ர­கம, வாரி­ய­பொல, வென்­னப்­புவ, செட்­டிக்­குளம், தளு­பன, வெல்­ல­வாய ஆகிய பகு­தி­க­ளிலே இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பொது­ஜன பெர­முன கட்­சியின் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கவே முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்குத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முறைப்­பா­டுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தேர்தல் வன்­மு­றை­களைக் கண்­கா­ணிக்கும் நிலை­யத்தின் தேசிய இணைப்­பாளர் மஞ்­சுள கஜ­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை காலி, இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. காலி  மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மீது கடந்த 16 ஆம் திகதி இரவு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. அத்­தோடு இரத்­தி­ன­புரி மாவட்ட ம், நிவித்­தி­கல கெட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் மீது நேற்று முன்­தினம் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. இரு பள்­ளி­வா­சல்­களும் கற்­க­ளினால் தாக்­கப்­பட்டு கண்­ணாடி ஜன்­னல்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன.

காலி தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யாத நபர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்­டது. இது குறித்த சட்ட நட­வ­டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தது. கெட­னி­கே­வத்த பகு­தியில் பள்­ளி­வாசல் மீது மேற்­கொண்ட தாக்­குதல் தொடர்பில் நிவித்­தி­கல பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் இரு­வரைக் கைது செய்­தனர். சி.சி.ரி.வி. கமெரா காணொலி பதி­வு­களை மையப்­ப­டுத்தி பொலிஸார் அவர்­களைக் கைது செய்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கேகாலை – எட்­டி­யாந்­தோட்டை கணே­பல்ல தோட்­டக்­கு­டி­யி­ருப்­பு­க­ளுக்குள் 18 ஆம் திகதி இரவு பலாத்­கா­ர­மாக உட்­பு­குந்த கும்பல் தமிழ் மக்­களின் வீடு­களைச் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது. ‘நீங்கள் இம்­முறை யாருக்கு வாக்­க­ளித்­தீர்கள்?’ என்று வின­வியே வீடுகள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவர்கள் அநா­க­ரி­க­மான முறையில் செயற்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் எட்­டி­யாந்­தோட்டை பொலிஸில் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் நாட்டின் சில பகு­தி­களில் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் மக்கள் அச்­சு­றுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணைக்குழு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

என்றாலும் தேர்தல் நிறைவுற்று ஜனாதிபதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் உடன் தடுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவினை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்க வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.