மக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம்.

0 974

நாளை மறு­தினம் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிர­சாரப் பணிகள் நேற்று நள்­ளி­ர­வுடன் நிறை­வுக்கு வந்­துள்­ளன. இந் நிலையில் இன்றும் நாளையும் அமைதி பேணு­வ­தற்­கான காலப்­ப­கு­தி­யாகும். அந்த வகையில் வேட்­பா­ளர்­களும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­களும் இவ்­விரு நாட்­க­ளிலும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருத்தல் அவ­சி­ய­மாகும். குறிப்­பாக சமூக வலைத்­த­ளங்­களை தேவை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து சக­லரும் தவிர்ந்து கொள்ள வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

இன்று சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக மாத்­தி­ர­மன்றி பிர­தான ஊட­கங்கள் வாயி­லா­கவும் தேர்­தலை மையப்­ப­டுத்­திய போலி­யான செய்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இது மக்கள் மத்­தியில் பாரிய குழப்­பங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது. குறிப்­பாக அர­சி­யல்­வா­திகள் கூறாத விட­யங்­க­ளை­யெல்லாம் கூறி­ய­தாக சில ஊட­கங்கள் அறிக்­கை­யிட்டு வரு­கின்­றன. தேர்தல் ஆணைக்­குழு நேற்று நடத்­திய ஊடக சந்­திப்பில் இது­பற்றி விசனம் தெரி­விக்­கப்­பட்­ட­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு இம்­மு­றையே தேர்­தலில் ஊட­கங்கள் அதிகம் பக்­கச்­சார்­பாக நடந்­துள்­ளன. குறிப்­பாக அரச மற்றும் தனியார் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் இது­வி­ட­யத்தில் எல்லை கடந்து செயற்­பட்­டுள்­ளதை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் புள்­ளி­வி­ப­ரங்கள் காட்­டு­கின்­றன. இது இலங்­கையில் ஊட­கத்­து­றையின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­குள்­ளாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.

என­வேதான் இந்த மோச­மான போக்கை எதிர்­கா­லத்­தி­லா­வது கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதே­போன்­றுதான் இத் தேர்­தலில் முஸ்லிம் பெண்கள் வாக்­க­ளிப்­பது தொடர்­பிலும் சில தவ­றான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக முகத்­திரை அணியும் பெண்கள் தேர்­தலில் வாக்­க­ளிக்க முடி­யாது எனும் பிர­சா­ரத்தை சிலர் முன்­னெ­டுத்­துள்­ளனர். இது தவ­றா­ன­தாகும்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவும் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ன­ஜீவன் ஹூலும் தெளி­வு­களை வழங்­கி­யுள்­ளனர்.

”தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்­ள­வர்­க­ளாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால், வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு முகத்தை திறந்து அடை­யா­ளப்­ப­டுத்­தினால் போது­மா­னது” என்று தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ன­ஜீவன் ஹூல் அண்­மையில் காத்­தான்­கு­டியில் நடை­பெற்ற சந்­திப்­பொன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

அதே­போன்­றுதான் ”வாக்குச் சாவ­டி­க­ளுக்கு புர்கா, நிகாப் அணிந்து செல்­வ­தற்கு எது­வித தடை­யு­மில்லை. வாக்­க­ளிப்பு நிலைய அதி­கா­ரி­க­ளுக்கு தமது அடை­யா­ளத்தைக் காட்­டு­வ­தற்­காக மட்டும் அந்த இடத்தில் அவற்றை அகற்­ற­வேண்டும்” என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவும் தெரி­வித்­துள்ளார். வாக்­குச்­சா­வ­டியில் வாக்­க­ளிப்­ப­தற்­காக வரி­சையில் நிற்­கும்­போ­து­கூட முகத்­தி­ரையை அகற்ற வேண்­டிய அவ­சி­ய­மில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இருந்­த­போ­திலும் முஸ்லிம் பெண்கள் வாக்­க­ளிக்க வரும்­போது முகத்­திரை அணி­வதை தவிர்த்துக் கொண்டு, தலையை மாத்­திரம் மறைக்கும் ஆடை­களை அணிந்து வந்தால் அது தேர்தல் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கும் வாக்­கா­ளர்­க­ளுக்கும் உத­வி­யாக அமையும் என்றும் தேர்தல் ஆணைக்­குழு தலைவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் நேற்று வெளி­யிட்ட அறிக்­கையில் முகத்­திரை அணியும் பெண்கள் வாக்­குச்­சா­வ­டிக்குள் நுழை­யும்­போது அவர்­க­ளது முகங்­களை திறந்து, ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி, தேர்தல் பணியில் ஈடு­படும் பணி­யா­ளர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் வாக்குச் சாவ­டிக்குச் செல்­லும்­போது தனி­யாகச் செல்­லாமல் மஹ்­ர­மான ஆணுடன் செல்­லு­மாறும் முடிந்­த­ளவு வாக­னத்தில் செல்­வ­தற்கு ஒழுங்கு செய்து கொள்­ளு­மாறும் வாக்­க­ளித்­த­வுடன் தாம­திக்­காது தத்­த­மது வீடு­க­ளுக்கு திரும்­பு­மாறும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தையும் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்குப் பின்னர் நாட்டின் பல பகு­தி­களில் முகத்­திரை அணிந்து சென்ற பெண்கள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட பல சம்­ப­வங்கள் பதி­வா­னதை நாம் அறிவோம். தேர்தல் தினத்தன்றும் அவ்வாறான அசௌகரியங்கள் ஏற்பட நாம் வழிசமைப்போமாயின் அது தேவையற்ற முரண்பாடுகளுக்கு வித்திடலாம். சில தீய சக்திகள் அதனை சாதகமாக பயன்படுத்தி வன்முறைகளைக் கூட தோற்றுவிக்கலாம். எனவேதான் நமது பெண்கள் இது விடயத்தில் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதற்காக வாக்களிக்கச் செல்லாதிருப்பது அதை விடவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.