புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும் .

முஸ்லீம் கவுன்ஸில் அறிக்கை

0 1,211

பல தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டில் கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த ஜன­நா­யக விழு­மி­யங்­களை புதிய ஜனா­தி­பதி நிலை­நி­றுத்­துவார் என்­பதே எமது நேர்­மை­யான எதிர்­பார்ப்பு என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு அதன் தலைவர் என்.எம். அமீன் மற்றும் செய­லாளர் எஸ்.ஏ. அஸ்­கர்கான் ஆகியோர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,   சம்­பந்­தப்­பட்ட அனை­வரின் ஒத்­து­ழைப்­பு­டனும் அமை­தி­யான ஒரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு நாங்கள் எதிர்­பார்க்­கிறோம்.

பல தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டில் கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த ஜன­நா­யக விழு­மி­யங்­களை புதிய ஜனா­தி­பதி நிலை­நி­றுத்­துவார் என்­பது எங்கள் உண்­மை­யான விருப்­ப­மாக காணப்­ப­டு­கின்­றது. அனைத்து கட்­சி­களும், வேட்­பா­ளர்­களும் சட்­டத்தின் ஆதி­பத்­தி­யத்தை எற்றுக் கொண்­டுள்­ள­த­னாலும் அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில் மக்­களின் அபி­லா­ஷைகள்  நிறை­வேற்­றப்­ப­டு­வதை புதிய அர­சாங்கம் உறுதி செய்யும்  என்றும் நாங்கள் நம்­பு­கிறோம்.

இலங்கை பல வளங்கள் கிடைக்­கப்­பெற்ற ஒரு நாடாகும். இருப்­பினும், அர­சியல் நன்­மை­களை மதிப்­பிடும் ஒரு கலா­சா­ரத்தின் கார­ண­மாக நமது உண்­மை­யான இலக்­கினை  அடை­வதில் தடை­களை எதிர்­கொள்­கிறோம். இது தேசத்தின் முன்­னேற்­றத்­திற்கு ஒரு தடை­யாக இருந்து வரு­கின்­றது. இலங்­கை­யர்­க­ளான நாங்கள் எல்­லோரும் ஒன்­றாக இணைந்து புதிய ஜனா­தி­பதி அனைத்து தடை­க­ளையும் தாண்டி இடை­வெ­ளி­யினை நிரப்­பு­வ­தற்­காக புதிய மாற்­றங்­களை கொண்­டு­வ­ருவார் என எதிர்­பார்க்­கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் சோக­மான நிகழ்­வு­க­ளா­னது, தீர்க்­கப்­பட முடி­யாத சூழ்ச்­சிகள், குரோ­தங்கள் மற்றும் வர­லாற்று வன்­மு­றைகள் என்­ப­வற்­றினை இதன் பின்­வி­ளை­வாக உரு­வாக்­கி­யது. ஒவ்­வொரு இலங்கை குடி மக­னி­னதும் நீதி, பாது­காப்பு மற்றும் கண்­ணியம் ஆகி­ய­வற்றை நிலை­நி­றுத்தும் திறன் கொண்ட ஒரு தலை­வரே இலங்­கைக்கு தேவை­யாக இருக்­கி­றது. அவர் குடி­மக்கள் அனை­வ­ரி­னதும் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் பாது­காக்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கக் கூடிய ஒரு­வ­ரா­கவும் மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய சூழ்நிலையை உருவாக்கி, ஒன்றாக இணைந்து எல்லோரினதும் கூட்டு நோக்கத்தினை அடைவதற்காக செயற்படக்கூடியவராகவும்  செயற்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.