ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார்

அக்குறணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார்

0 1,236

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தேசம் அக்­கு­ற­ணை­யாகும். அக்­கு­ற­ணையில் உள்­ளூ­ராட்சி நிர்­வாகம் அக்­கு­றணை பிர­தேச சபை­யி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அக்­கு­றணை பிர­தேச சபைக்­கென ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பு (PMJD) ஆகிய கட்­சிகள் போட்­டி­யிட்­டன.

30 உறுப்­பி­னர்­களைக் கொண்ட அக்­கு­றணை பிர­தேச சபையின் தேர்தல் முடி­வுகள் இவ்­வாறு அமைந்­தன.

ஐக்­கிய தேசியக் கட்சி 12
ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன 7
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி 4
பிஎம்­ஜேடி 4
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 3

இந்­நி­லையில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும், பிஎம்­ஜே­டியும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கத் தீர்­மா­னித்­தன. மூன்று கட்­சி­களும் இணைந்தும் உறுப்­பினர் தொகை ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு 15 ஆக இருந்­தது. இதே­வேளை அடுத்த தரப்பு எண்­ணிக்­கையும் 15 ஆக இருந்­தது. எனவே நாணய சுழற்சி மூலமே தற்­போ­தைய அக்­கு­றணை பிர­தேச சபை பத­விக்கு வந்­தது.

அக்­கு­றணை பிர­தேச சபையின் தலை­வ­ராக பெரும்­பான்மை இன உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் இஸ்­திஹார் இமா­துதீன் நிய­மிக்­கப்­பட்டார். 

அக்­கு­றணை பிர­தேச சபையின் தலைவர் உட்­பட பிஎம்­ஜேடி கட்­சி­யினர் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரிக்க தீர்­மா­னித்­துள்­ளனர். அது தொடர்பில் அக்­கு­றணை பிர­தேச சபைத் தலைவர் தனது நேர்­கா­ணலின் போது இவ்­வாறு தெரி­விக்­கிறார்.

Q: உங்கள் தீர்­மானம் தொடர்பில் அக்­கு­றணை மக்­களின் ஆத­ரவு இருக்­கி­றதா?

2018 ஆம் ஆண்டு நான் சுயேச்­சை­யாக அக்­கு­றணை பிர­தேச சபைக்குப் போட்­டி­யிட்ட போது எங்­களை ஆத­ரிப்­ப­வர்­களை விட எதிர்ப்­ப­வர்­களே கூடு­த­லாக இருந்­தார்கள். எங்­க­ளுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் வாக்­க­ளித்­தார்கள். சபையில் நல்­லதோர் பெறு­மா­னத்தை எடுப்­ப­தற்­கா­கவே பொது­ஜன பெர­முன அதி­கா­ரத்தைப் பெறு­வ­தற்கு நாம் உத­வினோம்.

2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் பிர­தேச சபை உறுப்­பி­ன­ராக இருக்­கிறேன். அந்தக் காலத்தில் பிஎம்­ஜே­டியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் சேர்ந்து களத்தில் இறங்­கி­யி­ருந்தோம். சுயேச்­சை­யாக முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்­தி­ருந்தோம்.

அந்தக் காலத்­தி­லி­ருந்தே நாங்கள் மாற்­று­மத உறுப்­பி­னர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பினைப் பேணி வந்தோம். அவர்­க­ளுக்கு எம்­மீது நம்­பிக்கை இருந்­தது. இந்த சபையை சிறந்த முறையில் எம்­முடன் இணைந்து முன்­னெ­டுக்க முடியும் என்று அவர்கள் நம்­பி­னார்கள்.

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவினரும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியினரும் என்­னுடன் பேசி­னார்கள். எந்­த­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி சபையின் தலைமைப் பொறுப்பை எனக்குத் தந்­தார்கள். இன்று கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரிப்­ப­தற்கு நாம் மேற்­கொண்ட முடிவு எங்­க­ளது அர­சியல் இருப்பை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கோ அல்­லது தனிப்­பட்ட சுய நலன்­க­ளுக்கோ அல்ல. முழுக்க முழுக்க முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­களைக் கருத்திற் கொண்டு எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மாகும். அக்­கு­றணை மக்கள் எங்கள் தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கி­றார்கள்.

Q: கோத்­தாவை ஆத­ரிக்கும் தீர்­மா­னத்­துக்கு பிஎம்­ஜேடியின் ஏகோ­பித்த ஆத­ரவு கிடைத்துள்­ளதா?

ஆம், இத்­தீர்­மானம் பிஎம்­ஜேடி உயர்­பீ­டத்தில் கலந்­து­ரை­யாடி மேற்­கொள்­ளப்­பட்­டது. நாங்கள் அக்­கு­ற­ணை­யி­லுள்ள சமூக நல இயக்­கங்கள், மார்க்க இயக்­கங்கள், அர­சியல் முதிர்ச்­சி­யுள்­ள­வர்கள், வழி­காட்­டி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டியே இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்டோம்.

Q: ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் ஏதும் ஒப்­பந்­தங்கள் செய்து கொண்­டுள்­ளீர்­களா?

ஆம், அவர்­க­ளுடன் பல­த­ரப்­பட்ட விட­யங்­களை கலந்­து­ரை­யா­டினோம்.
பிர­தேச அர­சியல் தலை­மைத்­துவம் என்ற வகையில் நாம் அவர்­க­ளுடன் பல கோரிக்­கை­களை முன்­வைத்­துள்ளோம். இன்­றைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்­க­ளிடம் பர­வ­லாக விவா­திக்­கப்­ப­டு­வது இவர்கள் ஆட்­சிக்கு வந்தால் முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ரவு வழங்­கப்­ப­டுமா என்­ப­துதான். இது தொடர்பில் நாங்கள் பஷில் ராஜபக் ஷவுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம்.

இன்­றைய அர­சி­யலே இன­வா­தத்­துக்கு வித்­திட்­டுள்­ளது என பஷில் ராஜபக் ஷ கூறினார். இந்த அர­சியல் மூல­மா­கவே இன­வா­தத்தை இல்­லாமற் செய்ய வேண்­டு­மென அவர் கூறினார்.

அன்­றைய ஆட்­சியில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. கொழும்பு நகரம் பாரிய அபி­வி­ருத்­திக்­குள்­ளா­னது. அவ்­வா­றா­ன­வர்­களால் யுத்­தத்தை இல்­லாமல் செய்ய முடி­யாதா! அபி­வி­ருத்­திக்கு தடை­யாக உள்ள இன­வா­தத்­துக்கு தீர்வு வழங்­கு­வ­தாக கோத்­தா­பய ராஜபக் ஷ உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.
அக்­கு­ற­ணையின் முக்­கிய தேவை­களை நிறை­வேற்றித் தர­வேண்டும் என்று ஒப்­பந்தம் செய்­துள்ளோம். கடந்த 25 வருட கால­மாக நாம் வெள்­ளப்­பெ­ருக்­குக்கு உட்­பட்டு வரு­கிறோம். அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கு­றணை நகரம் நவீன நக­ர­மாக மாற்றம் செய்­யப்­படும்.

அக்­கு­றணை சந்தைத் தொகு­தியை நவீன சந்தைத் தொகு­தி­யாக நிர்­மா­ணித்துத் தரு­வ­தற்கும் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

Q:அமைச்சர் ஹலீம் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தார் அல்­லவா?

ஆம், அக்­கு­ற­ணையின் வெள்­ளப்­பெ­ருக்­குக்கு தீர்வு காண்ப­தற்கும் அக்­கு­ற­ணையை நவீன நக­ர­மாக்­கு­வ­தற்கும் அமைச்சர் ஹலீ­மினால் கமிட்டி நிய­மிக்­கப்­பட்­டது. ஆனால் அக்­க­மிட்டி செயற்­ப­டவே இல்லை.

Q: கோத்­தாவை முஸ்­லிம்கள் ஆத­ரிக்க வேண்­டு­மென நீங்கள் கூறும் கார­ணங்கள் என்ன?

ஒரு கட்­சியால் மாத்­திரம் நாட்டை முன்­னேற்ற முடி­யாது. எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் சரி­யான தலை­மைத்­துவம் இருக்க வேண்டும். அப்­போதே நாட்டை முன்­னேற்ற முடியும். அந்த சரி­யான தலை­மைத்­துவ ஆளுமை கோத்­தா­விடம் இருக்­கி­றது.

இலங்­கையில் கெரில்லா இயக்­கத்தை அழித்து யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பெருமை கோத்­தா­வுக்கு இருக்­கி­றது. அவர் சொந்த இரா­ணு­வத்தை வைத்தே யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்தார். அமெ­ரிக்கா கூட பன்னாட்டுப் படை­யினர் மூலமே இவ்­வா­றான கெரில்லா யுத்­தங்­களை முன்­னெ­டுக்­கி­றது. யுத்த வெற்றி முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­வையே சாரும்.

அவர் ஆட்­சிக்கு வந்து ஒரு­வ­ருட காலத்தில் இன­வா­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். அபி­வி­ருத்­திக்கு இடை­யூ­றாக உள்ள இன­வா­தத்தை அனைத்து மக்­களின் ஆத­ர­வுடன் இல்­லாமற் செய்வார். எனவே முஸ்­லிம்கள் அவரை ஆத­ரிக்க வேண்டும்.

Q: அதி­கா­ரத்தைப் பெறு­வ­தற்கு உங்­க­ளுக்கு உத­விய பொது­ஜன பெர­மு­ன­வுக்கு நன்றிக் கடனா உங்கள் ஆத­ரவு?

ஆம், இதுவும் ஒரு கார­ணம்தான். அத்­துடன் எமது பிர­தேச அபி­வி­ருத்தி, முஸ்­லிம்­களின் பாது­காப்பு கரு­தியே நாம் கோத்­தா­ப­யவை ஆத­ரிக்­கின்றோம்.

Q: ஐக்­கிய தேசியக் கட்சி அக்­கு­ற­ணைக்கு செய்­யாத அபி­வி­ருத்­தி­களை ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன செய்யும் எனக் கரு­து­கி­றீர்­களா?

அக்­கு­ற­ணையில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் ஒரு மனப்­பான்மை இருக்­கி­றது. நாம் சேவை செய்­தாலும், செய்­யா­விட்­டாலும் வாக்கு எங்­க­ளுக்­குத்தான் என்ற மனப்­பான்­மைதான் அது. எமது சமூகம் ஏதோ ஒரு கார­ணத்­துக்­கா­கவே வாக்­க­ளிக்­கி­றார்கள். இப்­போது இங்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தளம்பல் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இந்­நிலை மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்­த­லிலும் தாக்­கத்தைச் செலுத்தும்.

நிச்­சயம் பொது­ஜன பெர­முன ஐக்­கிய தேசியக் கட்சி செய்­யாத அபி­வி­ருத்­தி­களைச் செய்யும். இதற்கு உத்­த­ர­வா­த­ம­ளிக்­கின்றோம்.

நாம் ஊரில் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளோம். மக்கள் எங்­களை எதிர்க்­க­வில்லை. எமது கருத்­து­களை நாம் விளக்­கினால் ஆத­ரிக்­கி­றார்கள். எங்­களைப் புரிந்து கொள்­கி­றார்கள்.

Q: கோத்­தா­ப­யவின் மீது பூரண நம்­பிக்கை இருக்­கி­றதா?

அர­சி­யலில் எமக்கு அவ்­வாறு கூற முடி­யாது. நூற்று நூறு எனக் கூற முடி­யாது. நல்­லதோர் தலை­மைத்­துவம் வழங்­கு­வா­ரெ­னவும், முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வா­ரெ­னவும் நம்­பிக்கை இருக்­கி­றது.

Q: தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு அக்­கு­றணை அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளுடன் பேசி­னீர்­களா?

ஐக்­கிய தேசியக் கட்சி அர­சியல் தலை­மைத்­து­வத்­துடன் பேசவில்லை. பிர­மு­கர்­க­ளுடன் பேசினோம். எமது தீர்­மானம் தவ­றா­ன­தென எவரும் கூற­வில்லை.
ஆனால் சமூக வலைத்­த­ளங்­களில் அவ்­வா­றான கருத்­துகள் பதி­யப்­ப­டு­கி­ன்றன. வாலி­பர்­க­ளிடம் கூடிய வர­வேற்­புள்­ளது. காலத்­துக்­கேற்ற தீர்­மானம் என வர­வேற்­கி­றார்கள். ஆரம்­பத்தில் எமது தீர்­மானம் தொடர்பில் அதிர்ச்­சி­ய­டைந்­ததைத் தெரி­வித்த வாலி­பர்கள் நாம் தெளி­வு­ப­டுத்­தி­யதன் பின்பு ஏற்றுக் கொண்­டார்கள்.

Q: உங்கள் எதிர்­கால அர­சியல் பொது­ஜன பெர­மு­ன­வு­டன்தான் தொட­ருமா?

நாட்­டுக்கும், முஸ்லிம் சமூ­கத்­துக்கும் பய­னுள்­ள­தாக இருக்­கு­மென்றால் அவர்­க­ளுடன் தொடர்ந்து பய­ணிப்­ப­தற்கு ஆட்­சே­ப­னை­யில்லை. எமக்கு நம்­பிக்கை இருக்­கி­றது.

4/21 ஆம் திக­திய தாக்­கு­தல்­களின் பின்பு பிஎம்­ஜேடி நீண்ட காலம் கலந்­து­ரை­யா­டி­யது. எமது அர­சியல் கொள்­கைகள் முன்­னெ­டுப்­புகள் குறித்து கவனம் செலுத்­தி­யுள்­ளது. சில ஒழுங்­கு­மு­றை­களை நாம் செய்ய வேண்­டி­யுள்­ளது.

ஏப்ரல் 21 இன் பின்பு முஸ்லிம் சமூ­கத்தின் பயணம் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. எமது அர­சியல் நகர்­வு­களில் நாம் நிதானப் போக்­கினை கடைப்­பி­டிக்­க­வுள்ளோம்; தீர்­மா­னிக்­க­வுள்ளோம்.

Q: கோத்தா பொது­ப­ல­சே­னாவின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறதே?

இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள் கோத்தாவுக்கு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீதும் இருக்கின்றன. விமர்சனம் இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இனவாதம் பேசுபவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் போது அது பூரணமாக மறைக்கப்படுகிறது. நல்லவர்களாகக் காட்டப்படுகிறார்கள். அதே நபர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால் இனவாதிகளாகக் காட்டப்படுகிறார்கள். இதனை எமது சமூகம் கண்டு கொள்வதில்லை.

பொது­ஜன பெர­முன வேட்­பாளர் மீதான குற்­றச்­சாட்­டுகள் முஸ்லிம் சமூ­கத்தைப் பய­மு­றுத்தி வாக்­குகள் பெற்றுக் கொள்­வ­தற்­கா­ன­வை­க­ளாகும்.
அக்­கு­றணை பிர­தேச சபையை அனைத்து இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சபை­யாக மாற்­று­வதே எமது இலக்கு. இந்த எமது தீர்­மானம் வர­லாற்றில் இடம்­பெறும்.

எமது சமூகம் உணர்ச்­சி­வ­சப்­படும் சமூகம். பிர­தி­ப­லனை உட­ன­டி­யாக எதிர்­பார்க்கும் சமூகம். பிர­தி­ப­லன்­களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. அதற்கு காலம் தேவை.-Vidivelli

  • நேர்காணல் ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.