கோத்தா அமெரிக்க பிரஜையல்ல உரிய ஆவணங்கள் இருக்கின்றன

சட்டத்தரணி அலி சப்ரி

0 1,103

 

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கப் பிர­ஜை­யல்ல, இலங்கை பிரஜை என்­ப­தற்­கான உரிய ஆவ­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் தற்­போது அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை தொடர்­பு­ப­டுத்தி வெளி­யிடும் கருத்­துக்கள் முற்­றிலும் பொய்­யா­ன­தென ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்தார்.

கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐனா­தி­பதி தேர்தல் இடம் பெற­வுள்ள நிலையில் தற்­போது பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­தா­பய  ராஜபக் ஷவை தொடர்­பு­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் தவ­றான  செய்­தி­களை  சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­துள்­ளார்கள்.

ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெற்ற மறுநாள் அதா­வது, 17ஆம் திகதி காலை பொது­ஜன  பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கா செல்­வ­தற்கு விமானப் பய­ணச்­சீட்டை பெற்­றுள்ளார் என்றும், அவர் இது­வ­ரையில் அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை இரத்து செய்­ய­வில்லை, குடி­யு­ரிமை இரத்து செய்­த­வர்­களின் பெயர் விபர பட்­டி­யலில் இவ­ரது பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளமை  அர­சியல் தேவை­களை கருத்திற் கொண்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன.

நவம்பர் மாதம் 17ஆம் திகதி காலை  அமெ­ரிக்கா செல்­வது தொடர்­பான செய்­தியை முதலில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ வெளி­நாட்­டுக்கு செல்ல வேண்­டு­மாயின் அதற்கு  நீதி­மன்­றத்தின் அனு­மதி அவ­சி­ய­மாகும். இன்றும் அவர் தொடர்­பான வழக்கு விசா­ர­ணையில் உள்­ள­தால் அவ­ரது   பிர­யாண கட­வுச்­சீட்டு நீதி­மன்ற வச­முள்­ள­துடன், பயணத் தடையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக வலைத்­த­ளங்­களில் பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­தாக வெளி­யி­டப்­பட்ட  பய­ண­சீட்டு  வழ­மை­யாக அவர் பெற்றுக் கொள்ளும் நிறு­வ­னத்­தி­லி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­தல்ல. மறு­புறம் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் என்று எழு­தப்­பட்­டி­ருப்­ப­திலும்  எழுத்துப் பிழைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே,  இந்தக் குற்­றச்­சாட்டும் பொய்­யா­ன­தென  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­ஜன  பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு  பல சட்ட சிக்கல் நிலை­களை அர­சாங்கம் கடந்த காலங்­களில் ஏற்­ப­டுத்­தி­யது . அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினை தொடர்ந்தே அர­சாங்க தரப்­பினர் அவர் இலங்கை  பிர­ஜை­யல்ல என்ற  வழக்­கினை  நீதி­மன்றில் தாக்கல் செய்­தார்கள். அவ்­வி­ட­யத்­திலும் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­தது.  ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல்  கடந்த மாதம் 07ஆம் திகதி தேர்தல் ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பிக்க முன்னர் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் உட்­பட ஆணைக்­கு­ழுவின் முக்­கிய தரப்­பி­ன­ருக்கு  அமெ­ரிக்க குடி­யு­ரிமை இரத்து செய்­யப்­பட்­ட­மைக்­கான  மூலப் பிர­திகள் அனைத்தும் காண்­பிக்­கப்­பட்­டன. இவ்­வி­ட­யத்தில் ஆணைக்­குழு திருப்­தி­டைந்­ததன் பிறகே  வேட்­பு­மனு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

வேட்­பு­ம­னுத்­தாக்கல் சமர்ப்­பிக்­கப்­பட்ட வேளை அர­சாங்க தரப்­பி­னரும் சிவில். அமைப்­புக்­களும் அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்பில் எவ்­வித கேள்­வி­க­ளையும் எழுப்­ப­வில்லை. மாறாக, தற்­போது  தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள தரு­ணத்தில் மீண்டும் பிரச்­சி­னைகள்  தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன. மக்கள் மனங்­களில் தவ­றான ஒரு நிலைப்­பாட்டை தோற்­று­விக்கும் வித­மா­கவே  இவை காணப்­ப­டு­கின்­றன. இது முற்­றிலும் ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான செயற்­பா­டாகும். தமக்­கான  தலை­வரை நாட்டு மக்கள் தெரிவு செய்­வ­தற்கு இடம­ளிக்க வேண்டும்.

அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை  இரத்து செய்­வ­தற்­கான கோரிக்­கையை  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ 2019.04.17ஆம்  திகதி இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தில் விடுத்தார்.  இந்தக் கோரிக்­கையை மீளாய்வு செய்யும் வித­மாக வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு பணிக்­கப்­பட்­டதை தொடர்ந்து உரிய நட­வ­டிக்­கைகள் சட்ட ரீதியில் முறை­யாக மேற்­கொள்­ளப்­பட்­டன.  2019.05.03ஆம் திகதி  கோத்­தா­பய ராஜபக் ஷ  இலங்கை பிர­ஜையே தவிர அமெ­ரிக்கப் பிர­ஜை­யல்ல என்­ப­தற்­கான ஆவ­ணங்கள் வெளி­வி­வ­கார  அமைச்சின் ஊடாகக் கிடைக்­கப்­பெற்­றன.

2012ஆம் ஆண்டு அமெ­ரிக்க  குடி­யு­ரி­மை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பெற்றுக் கொள்­ளப்­பட்ட அமெ­ரிக்க  நாட்­டுக்­கான கட­வுச்­சீட்டு 2022ஆம் ஆண்டு வரையில் செல்­லு­ப­டி­யா­னது. ஆனால் அந்தக் கட­வுச்­சீட்டு கடந்த ஏப்ரல் மாத காலப்­ப­கு­தியில் இரத்து செய்­யப்­பட்டு மீண்டும் இலங்கை நாட்டு பிரஜை என்­ப­தற்­கான கட­வுச்­சீட்டும் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.  கடந்த காலங்­களில்  கட­வுச்­சீட்டு, ஆள­டை­யாள அட்டை தொடர்பில் எழுப்­பப்­பட்ட தர்க்­கங்கள் அனைத்­திற்கும் சட்­டத்தின் ஊடா­கவே தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை  இரத்து செய்­த­வர்­களின் பெயர் பட்­டி­யலை அமெ­ரிக்க அர­சாங்கம்  ஒவ்­வொரு காலாண்­டிற்கும் வெளி­யிடும். அதில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆதலால் அவர் இன்னும் அமெ­ரிக்க பிரஜை என்ற  கருத்து ஆளும் தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.  பெயர் பட்­டி­யலில் பெயர் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­பது அவ­சி­ய­மல்ல, குடி­யு­ரி­மை­யினை  இரத்து செய்­வ­தற்­கான  அனைத்து மூலப்­பி­ரதி ஆவ­ணங்­களும் எம்­மிடம் உள்­ளன.

பொது­ஜன பெர­மு­னவின்  ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்பில்  தக­வல்­களை பெற்றுக் கொள்­வது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும், நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விற்கும் கடினமான காரியமல்ல. அரசாங்கம் என்ற ரீதியில் அதிகார பூர்வமாகவே செயற்படலாம்.  அமெரிக்க குடியுரிமை விவகாரத்தில் எவ்வித நெருக்கடிகளும் கிடையாது என்பதாலே அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கவில்லை.

அமெரிக்க குடியுரிமை தொடர்பில்  தற்போது அமைச்சரவை உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்  அரசாங்கத்தின் இயலாமையினையே  வெளிப்படுத்துகின்றது. அரசியல் சூழ்ச்சிகளுக்கு  நாட்டு மக்கள்  கவனம் செலுத்த வேண்டாம்.  ஊடகங்கள் ஊடாக அனைத்து ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. தவறான பிரசசாரங்களுக்கு ஏமாற்றமடைய வேண்டாம்.-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.