ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப சஜித்துடன் அனுர இணைய வேண்டும்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் அழைப்பு

0 1,120

ஊழ­லற்ற நாட்டை கட்­டி­யெ­ழுப்ப அனு­ர­கு­மார திஸா­நா­யக்க சஜித் பிரே­ம­தா­ச­வுடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராம­நா­யக்க அழைப்பு விடுத்தார். மாத்­த­றையில் நேற்று இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் தேர்­த­லாகும். அதனால் இந்த தேர்­தலில் போட்­டி­யி­ருப்­பது சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்­கு­மாகும். ஏனை­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் வாக்­கு­களால் பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கே பாதிப்­பேற்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, மஹேஷ் நேன­நா­யக்க ஆகியோர் சஜித் பிரே­ம­தா­சவைப் போன்று இந்­நாட்டை நேசிப்­ப­வர்கள். நாட்டை ஊழல் மோச­டி­க­ளி­லி­ருந்து பாது­காத்து, எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சுதந்­தி­ர­மான, சிறந்­த­தொரு நாட்டை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற நோக்கம் கொண்­ட­வர்கள். ஆனால் எமது எதிர்­த­்தரப்பில் போட்­டி­யிடும் கோத்­தா­பய ராஜபக் ஷ இந்த விட­யங்கள் அனைத்­துக்கும் முர­ணா­னவர். பல குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளா­னவர். இப்­ப­டிப்­பட்­ட­வரால் நாட்டை கொண்­டு­செல்ல முடி­யாது.

அத்­துடன் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவு எமக்­கி­ருந்­தது. அதனால் 62இலட்சம் வாக்­கு­க­ளைப்­பெற்று மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்றார். ஆனால் இம்­முறை மக்கள் விடு­தலை முன்­னணி தனித்துப் போட்­டி­யி­டு­கின்­றது. இந்த தேர்­தலில் வெற்­றி­பெறப் போவது சஜித் அல்­லது கோத்­தா­பய. நாட்டை குடும்ப ஆட்­சி­யி­லி­ருந்து பாது­காக்­கவும் மோச­டி­க­ளி­லி­ருந்து பாது­காக்­கவும் சஜித் பிரே­ம­தாச வெற்­றி­பெற வேண்டும். அதற்­காக அநு­ர­கு­மார திஸா­நா­யக்க சஜித் பிரே­ம­தா­ச­வுடன் இணைந்து நாட்டை பாது­காக்க முன்­வ­ர­வேண்டும்.

அத்­துடன் சஜித் பிரே­ம­தா­சவின் அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொண்டு நாட்­டுக்கு சேவை­செய்ய மக்கள் விடு­தலை முன்னணி முன்வரவேண்டும். அந்தக் கட்சியில் திருடர்கள் யாரும் இல்லை. நாட்டுக்காக எமது அமைச்சுப் பதவிகளை தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏனெனில் ராஜபக் ஷ குண்டர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.