கோத்தா வென்­றாலும் நீண்­ட­காலம் ஜனா­தி­ப­தி­யாக இருக்­க­மாட்டார்

மன்­னாரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­விப்பு

0 455

தப்பித் தவ­றி­யா­வது கோத்­தா­பய ஆட்­சிக்கு வந்தால், மஹிந்த ராஜ­பக் ஷ அவரை நீண்ட காலத்­துக்கு ஜனா­தி­ப­தி­யாக இருக்­க­வி­ட­மாட்டார். தனக்கு கிடைக்­காத பதவி வேறு யாருக்கும் கிடைக்­கக்­கூ­டாது என்­பதில் அவர் உறு­தி­யா­னவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து நேற்­று­முன்­தினம் மன்னார் நகர மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 

இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர் மேலும் கூறி­ய­தா­வது;

 

பேரி­ன­வாத சக்­திகள் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் சிலரை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஆர்ப்­பாட்டம் செய்­தனர். ஆனால், நாங்கள் ஒட்­டு­மொத்­த­மாக பத­வி­களைத் துறந்து சமூ­கத்­தையும் முஸ்லிம் தலை­மை­க­ளையும் காப்­பாற்­றினோம். அது­மட்­டு­மின்றி, றிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யையும் முறி­ய­டித்தோம்.

 

றிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வந்­தி­ருந்தால், ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த பலர் அவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு காத்­தி­ருந்­தனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையும் இது­தொ­டர்பில் கலங்கி நின்­றது. அவர்­மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு, அதில் தோல்­வி­ய­டைந்து பத­வியை துறப்­ப­தி­லி­ருந்து அவரை காப்­பாற்­றி­யி­ருக்­கிறோம்.

 

ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் ஆறு­த­ல­டையும் வகையில் எங்­க­ளது இரா­ஜி­னாமா அமைந்­தது. எதிர்­வரும் தேர்­தல்­க­ளிலும் ஒற்­று­மை­யாக ஒரே கட்­சியின் கீழ் போட்­டி­யிட வேண்­டு­மென்று என்ற அழுத்­தங்­களும் மக்கள் மத்­தியில் உள்­ளன. அதன் சாத்­தி­யத்­தன்மை தொடர்பில் எனக்கு நம்­பிக்­கை­யில்லை.

 

வில்­பத்து விவ­கா­ரத்­திலும் றிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக இன­வாத சக்­திகள் வேண்­டு­மென்றே குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தன. மன்னார், முசலி போன்ற பல இடங்­களில் பாது­காக்­கப்­பட்ட வன பிர­தே­சங்­களை அழித்து வீட­மைப்பு திட்­டங்­களை மேற்­கொண்­ட­தாக, நாடெங்­கிலும் இன­வாத ரீதி­யாக விசமப் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

 

ஈற்றில் நாங்கள் பத­வியில் அமர்த்­திய ஜனா­தி­ப­தியே, அப்­பி­ர­தே­சங்­களை பாது­காக்­கப்­பட்ட வன பிர­தே­ச­மாக அங்­கீ­க­ரித்து ரஷ்­யாவில் இருந்­த­வாறே, வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் அறி­வித்து இருந்த நிலை­மையை இன்னும் மோச­மாக்­கினார்.

 

இந்­நி­லையில், றிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஆத­ர­வாக முஸ்லிம் காங்­கிரஸ் வெளிப்­ப­டை­யாக பிர­சாரம் செய்ய முற்­பட்டால், பேரி­ன­வாத சக்­திகள் மேலும் உக்­கி­ர­ம­டையும் என்­பதை அறிந்­தி­ருந்தோம். ஜனா­தி­பதி செய­ல­கத்தின் அங்­கீ­கா­ரத்­துடன், வன பரி­பா­லன சபையின் மேல­தி­கா­ரி­க­ளையும் பேரா­தனை பல்­க­லைக்­க­ழக புவி­யி­யல்­துறை விரி­வு­ரை­யா­ளர்­க­ளையும் துறைசார் நிபு­ணர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு கள விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தோம்.

 

வில்­பத்து விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் இருக்­கின்ற பேரி­ன­வாத கும்­பலின் விசமக் கருத்­து­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கா­கவும், அதன் உண்மைத் தன்­மையை நாட­றியச் செய்­ய­வேண்டும் என்ற நோக்­கிலும் நாங்கள் அதனைச் செய்தோம். ஆனால், அங்கும் சிலர் மாமூல் அர­சி­யல்­வா­தி­க­ளா­கத்தான் செயற்­பட்­டார்கள்.

 

தவ­றி­யேனும் மாற்­றுத்­த­ரப்பு ஆட்­சியைக் கைப்­பற்­றினால் கடந்­த­கா­லத்தில் முஸ்­லிம்கள் அனு­ப­வித்த இன்­னல்­க­ளை­விட இரட்­டிப்­பான விளை­வு­களை சந்­திக்க நேரிடும். அந்தக் கும்­பலின் நோக்­கமே, ஆட்­சியைக் கைப்­பற்றி நிரந்­த­ர­மாக தன்­ன­கத்தே வைத்­துக்­கொள்­வ­தாகும். அதற்­காக என்­ன­வெல்லாம் செய்ய முடி­யுமோ அத்­த­னை­யையும் செய்­வார்கள்.

 

ஒரு­வேளை கோத்­தாபய ஆட்­சிக்கு வந்தால், மஹிந்த ராஜ­பக் ஷ அவரை நீண்ட காலத்­துக்கு ஜனா­தி­பதி ஆச­னத்தில் இருக்­க­வி­ட­மாட்டார். தனக்கு கிடைக்­காத பதவி வேறு யாருக்கும் கிடைக்­கக்­கூ­டாது என்­பதில் அவர் உறு­தி­யா­னவர். முதற்­கட்­ட­மாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­பார்கள்.

 

சஜித் பிரே­ம­தாச முன்னாள் ஜனா­தி­பதி ஒரு­வரின் மகன் என்­பதால், அன்­றி­லி­ருந்தே தனது தந்­தையின் நிழ­லி­லி­ருந்து ஜனா­தி­பதி கதி­ரைக்­காக தயார்­ப­டுத்­தப்­பட்­டவர் அல்ல. ராஜ­ப­க் ஷவின் குமா­ரர்­களை போல் இவ­ருக்கு வாய்ப்­புகள் இருக்­க­வில்லை. தந்­தையின் ஆசீர்­வா­தத்­திலும் தய­விலும் அர­சியல் செய்ய வேண்­டிய வாய்ப்பு சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிட்­ட­வில்லை.

 

ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தி­லி­ருந்து சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கி­யி­ருக்­கிறோம். ராஜ­ப­க் ஷவின் கோட்டை என வர்­ணிக்­கப்­பட்ட ஹம்­பாந்­தோட்­டையில் சஜித் பிரே­ம­தாச வெற்­றி­பெறப் போகின்றார். எனவே, அங்கும் பாரிய மாற்­ற­மொன்று நிக­ழ­வி­ருக்­கின்­றது.

 

நாட்­டுப்­பற்று பற்றி மேடை­களில் அள்­ளி­வீசி விளை­யா­டு­ப­வர்கள் உண்­மையில் நாட்­டுப்­பற்று கொண்­ட­வர்கள் அல்ல. தமி­ழர்கள் செறிந்­து­வாழும் யாழ்ப்­பா­ணத்தின் விமான நிலைய பெயர்­ப­ல­கையில் தமி­ழுக்கு முத­லிடம் வழங்­கப்­பட்­டதை விமல் வீர­வன்ச விளாசித் திரி­கிறார். வெறித்­தனம் பிடித்த இந்தக் கூட்­டணி ஆட்­சிக்கு வந்தால் என்ன நடக்­கு­மென்று சிந்­தித்துப் பாருங்கள்.

 

முஸ்லிம் சமூகம் முழுமையாக வெறுக்கின்ற வேட்பாளர் ஒருவரை வெற்றிபெறச் செய்வதற்கு பக்கவாத்தியமாக ஹிஸ்புல்லாஹ்வும் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் ஒன்றுசேர்ந்து இராஜினாமா செய்தால், அவர் மீண்டும் அந்த இனவாதக் கும்பலின் வெற்றிக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்.

 

எமது சமூகம் மிகத்தெளிவாக சிந்தனையுடன் வாக்களிப்புகளில் ஈடுபட வேண்டும். முஸ்லிம் தலைமை எடுத்த முடிவின் மீது நம்பிக்கை வையுங்கள். சஜித் பிரேமதாசவின் வருகையின் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும். நாம் புதிய யுக மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.