கோத்தாபய ராஜபக் ஷ ஓர் இனவாதியல்ல

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி

0 520

பெரும்­பான்­மைக்குள் வாழும் சிறு­பான்மை சமூகம் பெரும்­பான்­மை­யுடன் சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­வது அவ­சியம். முஸ்­லிம்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரித்து நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு பங்­க­ளிப்புச் செய்­ப­வர்­க­ளாக மாற­வேண்டும். கோத்­தா­பய ராஜபக் ஷ ஓர் இன­வா­தி­யல்ல. தேர்தல் காலங்­களில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை மட்டும் பெற்­றுக்­கொள்ள வரு­ப­வர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களைப் பெற்­றுத்­தர மாட்­டார்கள் என்று ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்றி குறிப்­பிட்டார்.

 

கெலி­ஓயா கலு­க­மு­வையில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக்ஷவை  ஆத­ரித்து நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

 

நான் கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் பல வரு­டங்­க­ளாக நெருக்­க­மாகப் பழகி வரு­கின்றேன். அவர் ஓர் இன­வா­தி­யல்ல. கொழும்பில் நிர்­மா­ணித்த மாடி  வீடு­களில் எழு­பத்­தைந்து சத­வீத வீடு­களை தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். சேரிப்­பு­றங்­களில் வாழ்ந்த மக்­க­ளுக்கு அங்கு வாழ்ந்த மக்­களின் விகி­தா­சா­ரத்­திற்­கேற்ப வீடு­களை வழங்­கி­யுள்ளார். சேரிப்­புற வாழ்க்­கையில் சமூகப் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. மக்­களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்­ப­தற்­காக தொடர்­மாடி வீடு­களை அமைத்து மக்­களை குடி­யேற்­றினார். முஸ்­லிம்கள் ஒரே கட்­சிக்கு வாக்­க­ளிப்­ப­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது. எமது வாக்குப் பெட்­டி­களில் எல்­லோரும் ஒரு கட்­சிக்கு புள்­ள­டி­யி­டும்­போது அவர்கள் சிந்­திக்க மாட்­டார்­களா?

 

நாட்டில் யுத்­தத்தை நிறுத்தி சமா­தா­னத்தை கொண்டு வந்­த­வர்கள் யார் என்­பதை பற்றி சிந்­திக்க வேண்டும். நாம் அவர்­களை நிரா­க­ரிப்­ப­வர்­க­ளாக மாறக்­கூ­டாது. பெரும்­பான்­மைக்குள் வாழும் சிறு­பான்மை சமூகம் பெரும்­பான்­மை­யுடன் சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­வது அவ­சியம். முஸ்­லிம்­களின் வாக்­கு­களை மட்டும் பெற்­றுக்­கொள்ள வரு­ப­வர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களைப் பெற்­றுத்­தர மாட்­டார்கள்.

 

கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் , ஈ.பி.டி.பி. மற்றும் தேசிய காங்­கிரஸ் உட்­பட  பொது­ஜன பெர­மு­னைக்கு 68 இலட்சம் வாக்­குகள் கிடைத்­தன. இதில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு 38 இலட்சம் வாக்­குகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அத்­துடன், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்  மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோ­ருக்கு கிடைத்த வாக்­கு­க­ளையும் உள்­ள­டக்கும்போது சுமார் 41 இலட்சம் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்சி உட்­பட சஜித் பிரே­ம­தா­சவின் கூட்­ட­ணிக்கு கிடைத்­துள்­ளது. இத்­தேர்தல் முடி­வுகள் மூலம் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களை தீர்­மா­னிக்க முடியும். ஜனா­தி­பதி தேர்தல் ஏன் முஸ்­லிம்­க­ளுக்கு முக்­கி­யத்தும் பெறு­கின்­றது என்று சிந்­திக்க வேண்டும்.

 

ஜனா­தி­பதி தேர்­தலில்  முஸ்லிம் சமூகம் வெற்­றி­யா­ளர்­களின் பங்­கு­தா­ரர்­க­ளாக மாற­வேண்டும். பௌத்த மக்­க­ளுடன் கலந்து வாழும் முஸ்­லிம்கள், ஏனைய தமிழ், கிறிஸ்­தவ மக்­க­ளுடன் ஒற்­று­மை­யுடன் வாழ்ந்து சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சியம். தேர்­தலில் தோல்­வி­ய­டையும் வேட்­பா­ளர்­க­ளுடன் கைகோர்த்து சமூகம் தோல்­வி­ய­டையக் கூடாது.

 

முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் நடக்கும் போது அதனைத் தட்டிக் கேட்­ப­வர்­க­ளாக உங்கள் பிர­தேச அர­சி­யல்­வா­தி­களை உரு­வாக்கிக் கொள்­ளுங்கள். உங்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு வெளிப்­பி­ர­தேச அர­சி­யல்­வா­திகள் தீர்­வு­களைக் கொண்­டு­வர மாட்­டார்கள்.

 

முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்கு அபி­வி­ருத்­தியை பிர­தேச அர­சி­யல்­வா­தி­களால் கொண்­டு­வர முடியும்.

 

முஸ்லிம் சமூ­கத்தின் மேம்­பாட்­டிற்கு உழைத்த தலைவர் ரி.பி. ஜாயா ஆவார். முஸ்­லிம்­களின் கல்வி வளர்ச்­சிக்கு உழைத்த தலைவர் அவ­ராவார். முட்­டைகள் எல்­லா­வற்­றையும் ஒரு  பாத்­தி­ரத்தில் போடா­தீர்கள் என்று கூறினார்.

 

முஸ்­லிம்கள் அனை­வரும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு  மட்டும் வாக்­க­ளிப்­பதன் மூலம்  எது­வித நன்­மை­க­ளையும் அடைந்­து­கொள்ள முடி­யாது. எமது சமூகம் முன்­னேற முடி­யாமல் போகும்.

 

மலே­சி­யாவில் மலே மக்கள் வாழ்­கின்­றனர். இம்­மக்­களின் தலைவர் டாக்டர் மஹதீர் முஹம்­ம­தாவார்.  மலே­சி­யாவில் சீனர்கள் 40 சத­வீதம் வாழ்­கின்­றனர்.  சீனர்கள் சீனத் தலை­வ­ரொ­ரு­வரை மலே­சி­யாவில் உரு­வாக்­க­வில்லை.

 

மலே மக்கள் விரும்பும் தலை­வரை மலே­சி­யாவில் வாழும் சீனர்கள் ஆத­ரித்து தலை­வ­ராக தேர்ந்­தெ­டுத்­தனர். என­வேதான்,  மலே­சியா முன்­னேற்றம் கண்­டுள்­ளது. எமது நாட்டில் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மகிந்த ராஜபக் ஷ உட்­பட கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை விரும்­பு­கின்­றனர். எனவே முஸ்­லிம்கள் யாரை ஆத­ரிக்க  வேண்டும் என்­பதை சிந்­திக்க வேண்டும்.

 

எல்பிடிய தேர்தல் முடிவுகளை நோக்கும்போது சுமார் 70 சதவீத மானோர் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கு 24 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.

 

160 தேர்தல் தொகுதிகளில் 124 தொகுதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களின் தொகுதிகளாகும். இதனை நோக்கும்போது முஸ்லிம்கள் வெற்றியடைய முடியாது என்பது நிச்சயம். முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்பவர்களாக மாற வேண்டும் என்றார்.-Vidivelli

 

  • உடு­நு­வர நிருபர்

Leave A Reply

Your email address will not be published.