ஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு?

0 1,303

எதிர்­வரும் பதி­னாறாம் திகதி இலங்­கையில் எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் வெற்றி பெறு­பவர் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்­க­வுள்ளார். இதற்கு முன் நடந்த ஏழு ஜனா­தி­பதி தேர்­தலை விட இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தேர்தல் சற்று வித்­தி­யா­ச­மா­ன­தாக உள்­ளது. ஆகக் கூடு­த­லான முப்­பத்­தைந்து வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் அதே­நேரம் தற்­போது பத­வியில் உள்ள ஜனா­தி­ப­தியோ, பிர­த­மரோ, எதி­ர்க்­கட்சித் தலை­வரோ போட்­டி­யி­டாத தேர்­த­லாக இத்­தேர்தல் அமை­கின்­றது.

 

அத்­தோடு இலங்­கையில் ஆகக்­கூ­டு­த­லான காலம் பத­வியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­காத ஜனா­தி­பதி தேர்­தலும் இத்­தேர்­த­லாகும்.

 

 

இத்­தேர்­தலில் முப்­பத்­தைந்து வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­ட­போதும் கோத்­தா­பய ராஜபக் ஷ–சஜித் பிரே­ம­தாஸ ஆகிய இரு­வ­ருக்­கி­டை­யிலே பலத்­த­போட்டி இருக்­கின்­றது என்­பதே உண்மை. ஒருவர் முன்னாள் ஜனா­தி­ப­தியின் சகோ­தரர், மற்­றவர் முன்னாள் ஜனா­தி­ப­தியின் புதல்வர். மூன்­றா­வது வேட்­பா­ள­ராக மக்கள் விடு­தலை முன்­னணி (JVP) யின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க திகழ்­கிறார். இவர்­களைத் தவிர வேறு எந்த ஒரு வேட்­பா­ளரும் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வேட்­பா­ள­ராக விளங்­க­வில்லை.

 

ஜனா­தி­பதி தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில் பொதுத்­தேர்தல் அல்­லது மாகா­ண­சபை/ பிர­தேச சபைத் தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டுக் கணிப்­பீடு செய்­வது கஷ்டம். ஏனென்றால் அத்­தேர்­தல்­களில் பல நூற்­றுக்­க­ணக்­கான அபேட்­ச­கர்­களும் பல கட்­சி­களும் போட்­டி­யி­டு­வதால் அபேட்­ச­கர்­களின் தனிப்­பட்ட செல்­வாக்கு, கட்­சி­களின் செல்­வாக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். ஆனால் ஜனா­தி­பதி தேர்­தலைப் பொறுத்­த­வரை முக்­கி­ய­மாக அபேட்­ச­கரின் செல்­வாக்கு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். எப்­படி இருப்­பினும் 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுடன் இத்­தேர்­தலை தற்­போ­தைய கள நிலை­வ­ரப்­படி கணிப்­பீடு செய்ய வேண்­டி­யுள்­ளது.

 

2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது அபேட்­ச­க­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்கள் விடு­தலை முன்­னணி (JVP), ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், திகாம்­பரம், மனோ கணேசன், த.தே.கூ போன்­ற­வர்கள் ஆத­ரவு வழங்­கினர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் போட்­டி­யிட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஹிஸ்­புல்லாஹ், அதா­வுல்லா, ஆறு­முகன் தொண்­டமான், டக்லஸ் தேவா­னந்த போன்­ற­வர்­களும் அவர்­க­ளது கட்­சி­களும் ஆத­ரவு வழங்­கினர். அந்த தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து விலகி பொது அபேட்­ச­க­ராகப் போட்­டி­யிட்­டதால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் அவரை கட்­சிக்கு துரோகம் இழைத்­தவர் என்றே பார்த்­தனர். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வாக்­குகள் அவ­ருக்கு ஒரு சிறிய அள­விலே கிடைத்­தது. அவ­ரது பொலன்­ன­றுவ மாவட்­டத்தில் ஓர­ளவு கிடைத்­தது. அதனால் அம்­மா­வட்­டத்தில் அவர் வெற்றி பெற்றார். கம்­பஹா மாவட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க ஆத­ரவு வழங்­கி­யதால் 4660 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்றார். இது தவிர கொழும்பு, கண்டி, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் வெற்­றி­பெற்றார். பதுளை மாவட்­டத்தில் 281 வாக்­கு­க­ளாலும், புத்­தளம் மாவட்­டத்தில் 4322 வாக்­கு­க­ளாலும் வெற்றி பெற்றார்.

 

வட–­கி­ழக்கு மாகா­ணத்தில் ஆறு இலட்­சத்து ஐம்­பத்து நான்கு ஆயிரம் வாக்­கு­களால் வெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக் ஷ களுத்­துறை, மாத்­தளை, காலி, மாத்­தறை, ஹம்­பந்­தோட்டை, குரு­நாகல், அநு­ரா­த­புரம், மொன­ரா­கலை, இரத்­தி­ன­புரி, கேகாலை ஆகிய பத்து மாவட்­டங்­களில் வெற்­றி­பெற்றார். ஆக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வாக்­கு­களில் சுமார் இரண்டு இலட்­சத்­துக்­குள்தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன பெற்­றி­ருப்பார். ஆகவே ஐக்­கிய தேசிய கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி (JVP)  மற்றும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளாலே மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்றார் என்­ப­துதான் உண்மை.

 

ஆகவே இம்­முறை சில மாற்­றங்கள் நிகழ இட­முண்டு. அதா­வது தீவிர ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ர­வா­ளர்கள் அல்­லது பண்­டா­ர­நா­யக்க கொள்­கை­யு­டை­ய­வர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அழிந்து போவதை விரும்­ப­மாட்­டார்கள். இப்­ப­டி­யா­ன­வர்கள் சுமார் 10 –12 இலட்ச வாக்­கா­ளர்கள் இன்னும் இந்த நாட்டில் இருக்­கி­றார்கள்.

 

இவர்கள் மஹிந்த ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ரையும், மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யையும் தற்­போது எதி­ரி­க­ளா­கவே பார்க்க எண்­ணி­யுள்­ளனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை அழித்து விட்­டார்கள் என்றே கரு­து­கின்­றனர். கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்ற ஒரு கட்சி இருக்­காது என்றே அவர்கள் கரு­து­கின்­றனர்.

 

ஆகவே அவர்கள் கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெறு­வதை விரும்­ப­வில்லை. அத­னால்தான் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க, குமார வெல்­கம போன்­றோர்­க­ளுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைப்­பா­ளர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்கள், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் உட்­பட ஏரா­ள­மான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அங்­கத்­த­வர்கள் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்க முன்­வந்­துள்­ளனர்.

 

இதனால் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ பெற்ற வாக்­கு­களில் சுமார் ஐந்து இலட்சம் வாக்­குகள் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்குக் கிடைக்க வாய்ப்­புண்டு. மேலும் சுமார் இரண்டு இலட்சம் வாக்­குகள் சென்­ற­முறை மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்­தவை இம்­முறை அனுர குமார திஸா­னா­ய­க­வுக்கு கிடைக்­கலாம். ஆகவே அந்த வகையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்த வாக்­கு­களில் சுமார் ஏழு இலட்சம் வாக்­குகள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு கிடைக்­காமல் போகலாம். அதே போல்தான் 2015 ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்குக் கிடைத்த வாக்­கு­களில் சுமார் ஐந்து இலட்சம் வாக்­குகள் இம்­முறை அனு­ர­கு­மார திஸா­னா­ய­க­வுக்கு கிடைக்கும். ஆகவே இந்த வகையில் மட்டும் 2015 தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்த வாக்­கு­களில் ஏழு இலட்சம் வாக்­குகள் குறை­வாக கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும், மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு கிடைத்த வாக்­கு­களில் சுமார் ஐந்து இலட்சம் வாக்­குகள் குறை­வாக சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் கிடைக்­கலாம்.

 

எது எப்­படி இருந்­தாலும் 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலைப் போலவே இத்­தேர்­த­லிலும் சிங்­கள –பௌத்த வாக்­குகள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கே அதி­க­மாக இருக்­கின்­றது. சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு சிங்­கள –பௌத்த வாக்­குகள் குறை­வா­கவே இருக்­கின்­றது. மலை­யக தமிழ் மக்­க­ளது வாக்­குகள் கடந்த முறை போலவே ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குத்தான் அதி­க­மாக இருக்­கின்­றது. அதேபோல் வட–­கி­ழக்கு தமிழ் வாக்­கா­ளர்­களும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வாக்­க­ளிக்கும் மனப்­பான்­மை­யிலே அதி­க­மாக இருக்­கின்­றனர்.

 

இன்னும் சில தினங்­களே தேர்­த­லுக்கு இருக்கும் இச்­சந்­தர்ப்­பம்­வரை தமிழ் கூட்­டணி தனது முடிவை இன்னும் அறி­விக்­காத நிலை­யிலும் 60 வீதத்­திற்கு அதி­க­மான தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­ஸவின் பக்­க­மாக இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. மீதி 40 வீத­மா­ன­வர்கள் தமிழ் கூட்­ட­ணி­யி­னரின் முடிவை பொறுத்து தீர்­மா­னிக்­கலாம். இருந்­தாலும் வட–­கி­ழக்கு மாகா­ணங்­களில் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு 978111 வாக்­குகள் கிடைத்த அதே­நேரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு  323600 வாக்­கு­களே கிடைத்­தன. அதுவும் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் அம்­பாறை, சேறு­வில ஆகிய இரண்டு தேர்தல் தொகு­தி­களில் கிடைத்த வாக்­கு­களைக் கொண்டே அந்­த­ளவு கிடைத்­தது. வட –கிழக்கு மாகா­ணங்­களில் மட்டும் மைத்­தி­ரி­பால சிறி­சேன 654511 வாக்­குகள் மேல­தி­க­மாகப் பெற்றுக் கொண்டார்.

 

இந்தத் தேர்­த­லிலும் இது மாதி­ரி­யான பெரும்­பான்மை வாக்­கு­களால் சஜித் பிரே­ம­தாஸ வட– கிழக்கு மாகா­ணங்­களில் வெற்றி பெறலாம் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

பொது­வாக முஸ்லிம் வாக்­கு­களைப் பொறுத்­த­வ­ரையில் 2010 ஆம் ஆண்டு வரை 20– 30 வீத­மான முஸ்­லிம்­களின் வாக்­குகள் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு வழங்­கப்­பட்டு வந்­தது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்­தல்­களில் சுமார் 40 வீத­மான முஸ்லிம் வாக்­குகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் கிடைத்­தது. ஆனால் 2010 –2015  காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற செயற்­பா­டு­க­ளினால் 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்­தல்­களில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களில் 95 வீதம் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் கிடைத்­தது.

 

இம்­முறை தேர்தல் பிர­சாரம் ஆரம்­பிக்­கும்­போது சுமார் 20 வீத­மான முஸ்­லிம்கள் கோத்­தா­பய ராஜபக் ஷ பக்­கமே இருந்­தனர். இருந்­த­போதும் கோத்­தா­பய ராஜபக் ஷ குழுவில் உள்ள விமல் வீர­வங்ச, விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ,  மது மாதவ, உதய கம்­மன்­பில, துமிந்த திஸா­நா­யக்க மற்றும் சில பௌத்த மத­கு­ருமார் களின் தேர்தல் பிர­சார மேடை­களில் தெரி­வித்த இன­வாத கருத்­துக்­களால் கோத்­தா­பய ராஜபக் ஷ  முஸ்­லிம்­களின் வாக்­கு­களை இழக்­க­வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல்தான் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி மீது முஸ்­லிம்கள் நல்ல ஒரு அபிப்­பி­ராயம் வைத்­தி­ருந்­த­போதும் முஸ்­லிம்கள் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்கா விட்டால் ‘‘அம்­பா­னைக்கு கிடைக்கும்” கருத்­துப்­பட பேசிய பேச்சு சமூக வலைத் தளங்­களில் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்­றது.

 

இதனால் முஸ்­லிம்கள் அவர் மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை இழந்­துள்­ள­துடன் கோத்­தா­ப­யவின் முஸ்­லிம்­களின் ஆத­ர­வையும் குறைத்­துள்­ளது. எப்­படி இருப்­பினும் 2015 ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிரி­சே­ன­வுக்கு கிடத்த 95 வீத­மான முஸ்­லிம்­களின் வாக்கு இம்­முறை சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு கிடைக்கும் என எதிர்­பார்க்க முடி­யாது. 80 –85 வீத­மான வாக்­கு­களே கிடைக்­கலாம். 10 வீதம் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் சுமார் 5 வீதம் அனுர குமார திஸா­நா­யக்­க­வுக்கும் கிடைக்­கலாம்.

 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை சுமார் பத்து இலட்சம் புதிய வாக்காளர்கள்  இருக்கிறார்கள். இவர்களில் சுமார் எட்டு இலட்சம் பேர் வாக்களிக்கலாம். இதில் சுமார் 240000 பேர் சிறுபான்மை வாக்குகள் 560000 பேர் சிங்கள வாக்குகள். சிறுபான்மை வாக்குகள் 80 வீதம் சஜித் பிரேமதாஸவுக்கும் சுமார் 10 வீதம் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் மீதி பத்து வீதம் அனுர குமார திஸாநாயக்க வுக்கும் மற்றும் அபேட்சகர்களுக்கும் கிடைக்கலாம். சிங்கள வாக்குகளில் சுமார் 55 வீதம் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் 35 வீதம் சஜித் பிரேமதாஸவுக்கும் கிடைக்கலாம். மீதி பத்து வீதம் மற்றவர்களுக்கு கிடைக்கலாம்.

 

எப்படி இருப்பினும் இத்தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றியடைய வேண்டுமானால் 65 வீதத்துக்கு மேற்பட்ட சிங்கள வாக்குகளைப் பெறவேண்டும். சஜித் பிரேமதாஸ வெற்றி பெற வேண்டுமானால் 35 வீதத்துக்கு குறையாத சிங்கள வாக்குகளைப் பெறவேண்டும் என்பது தான் உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.-Vidivelli

  • அபூ ரனாஸ்

Leave A Reply

Your email address will not be published.