பொறுப்பற்ற செயலால் பறிபோன இரு உயிர்கள்

0 999

பதி­னாறே வய­தான பாட­சாலை மாண­வ­னொ­ருவன் செலுத்­திய காரினால் மோதப்­பட்டு சிறார்களான பாட­சாலை மாண­வி­யொ­ரு­வரும், மாண­வ­ரொ­ரு­வரும் பலி­யான சம்­பவம் தங்­கல்ல விதா­ரன்­தெ­னிய தல­கம கிரா­மத்­தையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ளது. அவர்­க­ளுக்கு இறுதி அஞ்­சலி செலுத்தச் சென்ற ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கண்­ணீ­ரு­டனே திரும்பிச் சென்­றார்கள்.

இந்த மனதை உருக்கும் சோக சம்­பவம் கடந்த 1 ஆம் திகதி மாலை வீர­கெட்­டிய– தங்­கல்ல பிர­தான பாதையில் வீர­கெட்­டிய ராஜபக் ஷ மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில்  இடம்­பெற்­றுள்­ளது. இந்த விபத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாண­வி­யான தனூரி திஹங்சா ராஜபக் ஷ (11) மற்றும் அவ­ளது சகோ­த­ர­னான 1 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தனுஜ நிம்­சர ராஜபக் ஷ (6) ஆகிய இரு­வ­ருமே பலி­யா­கி­யுள்­ளார்கள். இச் சம்பவத்தில் அவர்­க­ளது தாயா­ரான ரஞ்­சனி (44) காயங்­க­ளுக்­குள்­ளாகி காலி கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறார்.

தங்­கல்ல வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் இரு­வரும் டியூசன் வகுப்­பு­க்குச் செல்­வ­தற்­காக வீர­கெட்­டிய கட்­டு­வெல சந்­தியில் பாதையை கடந்து கொண்­டி­ருக்கும் போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. 16 வய­தான பாட­சாலை மாணவன் செலுத்­திய கார் இவர்­களை மோதி விபத்­துக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. விபத்­துக்­குள்­ளாகி பலி­யான தனூரி திஹங்சா 5 ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 154 புள்­ளி­க­ளுடன் சித்­தி­ய­டைந்­தவர் என மரண விசா­ர­ணை­யின்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

‘எனது உயி­ரான பிள்­ளைகள் இரு­வ­ரையும் காரினால் மோதி பலி­யாக்­கி­விட்­டார்கள். கட­வுளே என்னால் எப்­படிப் பொறுத்துக் கொள்ள முடியும்’ என தாயார் கத­றி­ய­ழு­தது முழுக் கிரா­மத்­துக்குமே கேட்­டது என ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

16 வயதுச் சிறுவன் காரைச் செலுத்­தி­யுள்­ளமை பாரிய குற்றச் செய­லாகும். சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கூட 18 வயது பூர்த்­தி­யா­னதன் பின்பே பெற்றுக் கொள்ள முடியும். 16 வயது சிறு­வ­னுக்கு காரை வழங்­கி­ய­மையும் குற்­ற­மாகும்.

குறித்த காரின் உரி­மை­யா­ள­ரான சிறு­வனின் தாயார் மற்றும் அதன் சாவியை வழங்­கிய சிறு­வனின் 24 வய­தான சகோ­தரன் ஆகியோர் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 15 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

காரைச் செலுத்­திய சிறுவன், விபத்து நடந்­த­போது அவனுடன் காரில் பய­ணித்த 10 ஆம் தரத்தில் பயிலும் மாண­வர்கள் மூவரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களை கித்­து­லம்­பிட்­டிய தடுப்பு இல்­லத்தில் தடுத்து வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­விட்­டுள்ளார்.

இவர்கள் விபத்தை ஏற்­ப­டுத்தி விட்டு காருடன் தப்பிச் சென்­றுள்­ளதுடன் காரை விதா­ரன்­தெ­னிய பகு­தியில் மறைத்து வைத்துள்ளனர். இந் நிலையிலேயே குறித்த கார் பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்ளது.

காரின் உரி­மை­யா­ள­ரான சிறு­வனின் தாயார் ஆசி­ரிய ஆலோ­ச­க­ராவார். எனவேதான் மாண­வர்­களை வழி நடத்தும், நேர்­வ­ழியைப் போதிக்கும் ஆசி­ரி­யர்கள் தமது பிள்­ளைகள் விட­யத்தில் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­ற­மையை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. தனக்கு உரித்­தான காரை தனது மகனுக்கு பொறுப்பற்ற முறையில் வழங்­கி­யதன் மூலம் மற்றுமொரு தாயின் இரு பிள்ளைகளது   உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.  தனக்குத் தெரியாமலேயே தனது இளைய மக­னுக்கு மூத்த மக­னினால் காரின் சாவி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வண்­டியின் உரி­மை­யா­ள­ரான பெண் நீதி­மன்றில் தெரி­வித்­துள்ளார். வண்­டியின் உரி­மை­யா­ள­ரான பெண் இவ்­வா­றான கார­ணங்­களைக் கூறி தப்­பிக்க முடி­யாது. முழுப் பொறுப்­பி­னையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காரைச் செலுத்தி இரு அப்­பாவி உயிர்­களைப் பலி­யெ­டுத்த 16 வயது சிறுவன், அவனது தாயும் காரின் உரி­மை­யா­ள­ரான ஆசி­ரிய ஆலோ­ச­க­ரான பெண், காரை வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் அவ­ரது 24 வய­தான மகன் அனை­வரும் சட்­டத்தின் முன்­ நி­றுத்­தப்­பட வேண்டும்.

விபத்தில் பலி­யான இரு மாண­வர்­களின் தாயார் ரஞ்­சனி (44) தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான இரு மாணவர்களுக்கும் காயங்களுக்குள்ளான அவர்களது தாயாருக்கும் விபத்தினை ஏற்படுத்தியவர்களிடமிருந்து நீதிமன்றம் நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு இவ்விபத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தராதரம் பாராது உயர்ந்தபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதே இவ்வாறான விபத்துகளைத் தவிர்க்க முடியும்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.