பொது பலசேனாவின் பெயரில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுப்பு

நம்ப வேண்டாம் என அவ்வமைப்பு அறிக்கை

0 1,035

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்­க­ாவிட்டால் அவர் தேர்­தலில் வெற்­றி­ பெற்­றதன் பின்பு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் தங்கள் பொருட்­களை எடுத்­துக்­கொண்டு இந்­நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேறி விட வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்­களில் தமிழ் மொழியில் பொய்­ப்பி­ர­சாரம் செய்­யப்­பட்டு வரு­வ­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

 

ஞான­சார தேரர் கடந்த 30 ஆம் திகதி நடத்­திய ஊடக மாநாட்­டிலே இவ்­வா­றான கருத்­தினை வெளி­யிட்­ட­தாக பொய்­யான பிர­சாரம் செய்­யப்­பட்டு வரு­வ­தாக பொது­பல சேனா அமைப்பின் ஊடக இணைப்­பாளர் ஏரந்த கே நவ­ரத்ன வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

 

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களைப் பீதிக்­குள்­ளாக்கி எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  சில தரப்­பினர் மேற்­கொண்­டு­வரும் இவ்­வா­றான முயற்­சி­களை பொது­பல சேனா முற்றும் முழு­தாக மறுக்­கி­றது. ஞான­சார தேரர் எந்­தவோர் சந்­தர்ப்­பத்­திலும் இவ்­வா­றான கருத்­து­களை வெளி­யி­ட­வில்லை.

 

அத்­தோடு இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் எந்­தவோர் அபேட்­ச­க­ருக்கும் அவர் ஆத­ரவு தெரி­வித்து கருத்­து­தெ­ரி­விக்­க­வில்லை. அத்­தோடு கடந்த 30 ஆம் திகதி ஊடக மாநா­டொன்­றினை நடாத்­த­வு­மில்லை.

 

மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கட்சி நேர்­மை­யான அர­சி­ய­லுக்குப் பதி­லாக சிறு­பான்மை மக்­களை தவ­றாக வழி­ந­டாத்தி பெரும்பான்மை மக்கள் பற்றி குரோதங்களை உருவாக்கி அவர்களது வாக்குகளைப்பெற்றுகொள்ள முயற்சிப்பது தவறான செயலாகும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.