மக்களை தவறாக வழிநடாத்த வேண்டாம்

0 983

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வாரங்­களே எஞ்­சி­யுள்­ளன. நேற்றும் இன்றும் தபால் மூல வாக்­க­ளிப்பு தினங்­க­ளாகும். இத் தேர்­தலில் போட்­டி­யிடும் மூன்று பிர­தான தரப்­பு­களும் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வெளி­யிட்­டுள்­ளன. அபி­வி­ருத்தி, பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், நல்­லி­ணக்கம் உள்­ளிட்ட சம­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு அவற்றில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் குறிப்­பி­டப்­படும் வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­படும் கலா­சாரம் இலங்­கையில் முறை­யாக பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை என்ற போதிலும் வேட்­பா­ளர்­களின் தூர­நோக்கு தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்கும் வாக்­கா­ளர்கள் தாம் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்கு முன்­ன­ராக மேற்­படி தரப்­பு­களின் விஞ்­ஞா­ப­னங்­களை ஒரு­முறை முழு­மை­யாகப் படிப்­பதும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, இம்­முறை தேர்­த­லிலும் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கப் போகின்­றன எனும் கருத்தை பலரும் முன்­வைத்து வரு­கின்­றனர். பேரா­தனை பல்­க­லைக்­க­ழக அர­சி­யல்­துறைப் பேரா­சி­ரியர் ஏ.எம். நவ­ரத்ன பண்­டார கடந்த கால வாக்­க­ளிப்பு முறை­களை முன்­னி­றுத்து இதனை நிறு­வி­யுள்ளார். இதே கருத்­தையே சிறு­பான்­மை­யின அர­சி­யல்­வா­திகள் பலரும் முன்­வைத்து பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். எனினும் இத் தேர்­தலில் போட்­டி­யிடும் ஒரு­சாரார் பெரும்­பான்மைச் சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் மாத்­திரம் வெற்றி பெறு­வ­தற்­கான வியூ­கங்­களை வகுத்துச் செயற்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இதற்­காக பல்­வேறு நுட்­பங்­களைக் கையாண்டு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­துடன் தமது எதி­ரணி வேட்­பா­ள­ருக்குச் செல்­ல­வி­ருக்கும் வாக்­கு­களை கலைப்­ப­தற்­கான உத்­தி­க­ளையும் கையாண்டு வரு­கின்­றனர். இந்த நோக்கில் சில வேட்­பா­ளர்­க­ளையும் சிறு­பான்மை சமூ­கத்­தினுள் கள­மி­றக்­கி­யுள்­ளனர். இதற்­கப்பால் பல்­வேறு அமைப்­புகள், குழுக்கள், செல்­வாக்­கு­மிக்க தனி­ந­பர்கள் மூல­மா­கவும் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை திசை­தி­ருப்பும் மறை­முக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். சமூக வலைத்­த­ளங்­களில் இவர்­க­ளது போக்­கு­களை கூர்ந்து அவ­தா­னிப்­ப­வர்­க­ளுக்கு இதனை இல­குவில் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தா­க­வி­ருக்கும்.

தேர்­தலில் தமக்கு விருப்­ப­மா­ன­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது அவ­ர­வ­ரது உரி­மை­யாகும். அவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்தை மக்கள் சுதந்­தி­ர­மா­கவே எடுக்க வேண்டும். மாறாக எவரும் தீர்­மா­னங்­களை வலிந்து திணிக்க முடி­யாது. போலி­யான கார­ணங்­களைக் கூறி மக்­களை தவ­றாக வழி­ந­டத்த முடி­யாது. துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று ஒரு­சாரார் மக்­களை, குறிப்­பாக முஸ்­லிம்­களை அச்­சு­றுத்தி அடி­ப­ணியச் செய்­வ­தற்­கான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்க முனை­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். ஒரு வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­கா­விட்டால் முஸ்­லிம்கள் வன்­மு­றை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரும் எனும் பொருள்­பட முஸ்லிம் பிர­முகர் ஒருவர் முன்­வைத்த கருத்து பலத்த சர்ச்­சை­க­ளுக்கும் விமர்­ச­னங்­களும் வழி­வ­குத்­துள்­ளது. இவ்­வா­றான கருத்­துக்­களை பகி­ரங்க தளங்­களில் வெளி­யி­டு­வதை தவிர்த்துக் கொள்­வது அனை­வ­ருக்கும் சிறந்­த­தாகும்.
யார் எவ்­வா­றான உத்­தி­களை கையாண்டு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்த போதிலும் முஸ்லிம் சமூகம் தனது வாக்­குப்­ப­லத்தை சித­ற­டிக்­காது ஒற்­று­மையை நிரூ­பிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிக்க முன்னர் களத்­தி­லுள்ள வேட்­பா­ளர்­களின் கடந்த கால வர­லாறு குறித்தும் எதிர்­கால செயற்­றிட்­டங்கள் குறித்தும் நன்கு ஆராய வேண்டும். ஊழல் மோசடி, இன­வாதம், சிறு­பான்மை சமூ­கத்தின் பாது­காப்பு, நாட்டின் சுபீட்­ச­மான எதிர்­காலம் ஆகி­ய­வற்றைக் கருத்திற் கொண்டு நாம் வாக்­க­ளிக்க வேண்டும். ஒரு வாக்கை மாத்­திரம் அளிப்­ப­தாயின் அதற்குப் பொருத்­த­மான வேட்­பா­ளரை தெரிவு செய்து அவ­ருக்கு புள்­ளடி இட முடியும். இன்றேல் மூன்று விருப்பு வாக்­கு­களைப் பயன்­ப­டுத்தி மூவ­ருக்கு இலக்கங்கள் மூலம் வாக்களிக்கலாம்.

இம்முறை விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதால் மக்களை வாக்களிப்பு முறை குறித்து தெளிவூட்ட வேண்டியுள்ளது. இந்த விழிப்பூட்டலை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி சிவில் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும். மக்களின் வாக்குகள் அறியாமையினால் நிராகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறாம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.