புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்க வக்பு சபையில் அனுமதி தேவை

வக்பு சட்ட திருத்தத்தில் உள்ளடக்க திட்டம்

0 526

வக்பு சொத்­து­களின் பரா­ம­ரிப்பில் நிலவும் ஊழல் மோச­டி­களைத் தவிர்க்கும் வகையில் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. அத்­தோடு புதிய பள்­ளி­வா­சல்கள் வக்பு சபையின் அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொள்­ளப்­பட்ட பின்பே நிர்­மா­ணிக்­கப்­படும் வகை­யி­லான திருத்­தங்­களும் வக்பு சட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளன.

வக்பு சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான வரை­பொன்று தயா­ரிக்­கப்­பட்டு தற்­போது அது தொடர்­பான கருத்­துக்­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும், முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தென வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரி­வித்தார்.

இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் எஸ்.எம்.எம்.யாசீன் விடி­வெள்­ளிக்குக் கருத்துத் தெரி­விக்­கையில் ‘வக்பு சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. வக்பு சபை மற்றும் சட்­ட­வல்­லு­நர்கள், உல­மாக்கள் அடங்­கிய குழு­வொன்று தேவை­யான திருத்­தங்­களை இனங்­கண்டு வரை­பொன்­றினைத் தயா­ரித்­துள்­ளது. தற்­போது அநேக வக்பு சொத்­துகள் சட்­ட­வி­ரோ­த­மாக கையா­ளப்­ப­டு­கின்­றன. வக்பு சொத்­து­களில் தனி­நபர் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ளது. சட்ட விரோ­த­மான முறையில் கையா­ளப்­ப­டு­கின்­றது. நீண்­ட­கால குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. அதனால் இவற்­றுக்குத் தீர்வு காணும் வகை­யிலும் வக்பு சொத்­து­களைப் பாது­காக்கும் வகை­யிலும் திருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன.
புதி­தாக பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டும்­போது, நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு வக்பு சபையின் அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும்.
அத்­தோடு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் ஜும்ஆ பயான்கள் தர­மா­ன­வை­யாக இருப்­ப­துடன் தகு­தி­யா­ன­வர்­களே பயான்­களை நிகழ்த்தும் வகையில் திருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. பயான்­க­ளுக்­கான வழி­மு­றைகள் (Guide Lines) உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்­ளன.

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நிர்­வா­கிகள் தெரிவில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கே இட­ம­ளிக்­கப்­பட வேண்டும். பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைக்கும் நிர்­வா­கத்­திற்­கான வழி­மு­றைகள் வகுக்­கப்­ப­ட­வுள்­ளன.
நாட்டில் பெரும்­பா­லான வக்பு சொத்­துகள் சமூ­கத்­துக்கு பயன்­ப­டா­த­வை­க­ளா­கவும் தனி­ந­பர்­க­ளுக்கும், அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளுக்கும் பயன்­படும் வகையில் மாறி­யுள்­ளன. இவற்றை சட்ட ரீதி­யான கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் இந்த திருத்­தங்கள் மூலம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றார்.

இந்த வக்பு சட்­டத்­தி­ருத்த வரைபு கடந்த செப்­டெம்பர் மாத ஆரம்­பத்தில் சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைப்­ப­தற்கு ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த போதும் ஏப்ரலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி என்போர் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக தங்களது கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.