தேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’

0 5,631

சர்­வ­தேச சிறுவர் தினம் ஒக்­டோபர் 1 ஆம் திகதி உலகம் முழு­வதும் கொண்­டா­டப்­பட்­டது. இந் நிலையில் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றான துஷ்­பி­ர­யோகம் குறித்து நோக்­கு­வது காலத்தின் தேவை­யாகும்.

சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கங்­களில் இருந்து பாது­காத்து அவர்­க­ளுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தென்­பது இன்­றைய சமு­தாயம் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றாகும். இந்த சவாலை வெற்றி கொள்ளும் கடி­ன­மான பாதையில் பய­ணிக்­க­வேண்­டிய கட்­டாயம் நில­வு­கி­றது. ஒவ்­வொரு பிள்­ளையும் அமை­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் வாழ்­வதை உறு­திப்­ப­டுத்­து­வது நம் அனைவர் மீதுள்ள பொறுப்­பாகும்.

இன்று இலங்கை உட்­பட பல நாடு­களில் சிறு­வர்கள் எதிர்­நோக்­கு­கின்ற கவ­லைக்­கு­ரிய பிரச்­சி­னை­களைப் பார்க்­கும்­போது சிறுவர் பாது­காப்பு தொடர்பில் பாரிய இடை­வெ­ளி­யொன்று ஏற்­பட்­டுள்­ளதை உணர முடி­கின்­றது. தற்­போது நில­வு­கின்ற இந்த அச்­சு­றுத்தல் தொட­ரு­மாக இருந்தால் நாக­ரி­க­மற்ற ஒரு உல­கமே நமக்கு மிஞ்சும் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களைத் தடுப்­ப­தற்­கான பிர­தான பாத்­தி­ரங்­க­ளாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையும் மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சும் செயற்­ப­டு­கின்­றன. இவை தவிர அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், சங்­கங்கள் என்­ப­னவும் செயற்­ப­டு­கின்­றன. சர்­வ­தேச ரீதி­யாக யுனிசெப் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை என்­பன சிறுவர் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்­றன.

இலங்­கையின் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை வெளி­யிட்ட அறிக்­கை­க­ளின்­படி 2018 ஆம் ஆண்டு மாத்­திரம் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஏறத்­தாழ 3000 முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றுள் கொழும்பு மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வி­லான முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. கொழும்பை அடுத்து கம்­பஹா மாவட்­டத்­திலும் அதனை அடுத்து குரு­நாகல் மாவட்­டத்­திலும் அதி­க­மான முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன.

கிடைக்­கப்­பெற்ற தர­வு­க­ளின்­படி 2413 சிறு­வர்கள் பல்­வேறு கொடு­மை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். இவர்­களுள் 555 சிறு­வர்கள் பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­துடன் 375 சிறு­வர்கள் கடு­மை­யான முறையில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். பாலியல் துஷ்­பி­ர­யோக செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்­களுள் 374 பேர் இளம் குற்­ற­வா­ளிகள் என்­பதும் கவ­னத்திற் கொள்­ளத்­தக்­க­தாகும்.

311 சிறு­மிகள் கற்­ப­ழிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 15 சிறு­வர்கள் சட்­ட­வி­ரோத முறை­யி­லான ஆபாச வெளி­யீ­டு­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 125 சிறு­வர்கள் கடத்­தப்­பட்­ட­துடன் 265 சிறு­வர்கள் வேலைக்­க­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். சிறு­வர்கள் மீது பாலியல் சுரண்டல் மேற்­கொண்ட முறைப்­பா­டுகள் நான்கும் ஆசை வார்த்­தைகள் கூறி மயக்­கிய முறைப்­பா­டுகள் 15 உம் பதி­வா­கி­யுள்ள அதே­வேளை சிறு­வ­னொ­ரு­வனை தகாத முறையில் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மொன்றும் பதி­வா­கி­யுள்­ளது.

இணை­ய­வழி துஷ்­பி­ர­யோ­கங்கள்

இன்­றைய சிறு­வர்­களின் உல­கத்தில் இணையம் என்ற விடயம் தவிர்க்க முடி­யாத ஒன்­றாக மாறி­விட்­டது. பிள்­ளை­களின் கைகளில் தவழும் ஸ்மார்ட் போன்தான் இணை­ய­வழி துஷ்­பி­ர­யோ­கங்­களைத் தடுப்­ப­தற்கு பாரிய சவா­லாக மாறி­யுள்­ளது. பெற்­றோர்­களும் பிள்­ளை­களின் அறி­வுடன் போட்­டி­போட முடி­யாமல் அவர்­க­ளு­டைய போக்கில் விட்­டு­வி­டு­வது துஷ்­பி­ர­யோகம் செய்­யக்­காத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு இல­கு­வாக அமைந்து விடு­கின்­றது.

சமூக வலைத்­த­ளங்­களைப் பிள்­ளைகள் பாவிக்­கும்­போது பெற்­றோரின் மேற்­பார்­வை­யின்கீழ் அவற்றைப் பாவ­னைக்கு உட்­ப­டுத்­து­வதே சாலச்­சி­றந்­தது. அதற்கு சாத்­தியம் இல்­லாத பட்­சத்தில் சிறு­வர்­களை இணை­யத்தைப் பாவிக்க வழங்­காமல் இருப்­பது நல்­ல­தொரு தெரி­வா­கவே அமையும்.

சிறுவர் தினக்­கொண்­டாட்­டத்தின் போது கருத்துத் தெரி­வித்த சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார, இலங்­கையில் உள்ள சிறு­வர்கள் பேஸ்புக் பாவிப்­பதை தடை செய்யும் ஒரு சட்­டத்தை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

“தொழில்­நுட்பம் வேக­மாக உயர்ந்­துள்ள இக்­கா­லத்தில் மாண­வர்கள் தமது வீட்டின் அறை­யினுள் என்ன செய்­கி­றார்கள் என்­பது தொடர்­பாக பெற்­றோர்கள் கவனம் செலுத்­த­வேண்டும். சிறு­வர்கள் அதி­க­மான நேரத்தை இணை­யத்தில் செல­வி­டு­கி­றார்கள். இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் சிறு­வர்­களை இணையப் பாவ­னைக்கு அனு­ம­திப்­பது சம்­பந்­த­மா­கவும் அவ்­வாறு அனு­ம­திப்­ப­தாக இருந்­தாலும் கல்வித் தேவை சம்­பந்­த­மான தக­வல்­களை திரட்­டு­வ­தற்கு மாத்­திரம் எவ்­வாறு நெறிப்­ப­டுத்­தலாம் என்­பது தொடர்­பா­கவும் எமது அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார தெரி­வித்தார்.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு 2017 ஆம் ஆண்டு கிடைத்த இணைய குற்­றங்கள் தொடர்­பான முறைப்­பா­டுகள் பற்­றிய பகுப்­பாய்­வுக்கு அமைய, ஒட்­டு­மொத்த முறைப்­பா­டு­களில் இணைய கு ற்­றங்கள் 1% ஆகும். அவற்றுள் 73% ஆனவை மேல் மாகா­ணத்தில் பதி­வா­கி­யுள்­ளன.

அதில் 10 வய­துக்கு குறை­வான சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்த முறைப்­பா­டுகள் 15.9% ஆகும். 11 – 15 வய­துக்­கி­டை­யி­லான சிறு­வர்­க­ளுக்கு இடம்­பெற்­றுள்ள துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்த முறைப்­பா­டுகள் 36.5% ஆகும். 16 வய­துக்கு மேற்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு இடம்­பெற்­றுள்ள துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்த முறைப்­பா­டுகள் 47.6% ஆகும். கிடைத்த முறைப்­பா­டு­களில் 73% சிறு­மி­ய­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற குற்­றங்கள் பற்­றி­ய­தாகும். கிடைத்த முறைப்­பா­டு­களில் 63.5% ஆனவை இடம்­பெற்­றி­ருப்­பது பேஸ்புக் மூல­மாகும்.
இலங்கைச் சிறு­வர்கள் இணை­யத்­த­ளத்தைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் யுனிசெப் நிறு­வனம் 2017 இல் வெளி­யிட்­டுள்ள அறிக்­கைக்கு அமைய, வயது 11 – 18 இடை­யி­லான சிறு­வர்­களில் 53% ஆனோர் இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர். சிறு­வர்­களில் இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்தும் கூடுதல் எண்­ணிக்­கை­யானோர் தென் மாகா­ணத்தை சேர்ந்­த­வர்­க­ளாவர். சிறு­வர்­களின் பிர­பல்­ய­மான சமூக ஊட­க­மாக பேஸ்புக் உள்­ளது. இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்­து­வோரில் 61.7% ஆனோர் பேஸ்புக் பய­னா­ளர்­க­ளா­வார்கள். இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்தும் கூடு­த­லானோர் உயர் கல்வி பயிலும் சிறுவர் சமு­தா­யத்­தி­ன­ரா­வார்கள். இது 70.5% ஆகும்.

பெற்­றோரின் கவ­ன­யீனம்

சிறு­வர்கள் பெரி­ய­வர்­க­ளை­விட சிந்­திக்கும் ஆற்றல் மற்றும் பகுத்­த­றி­விலும் குறைந்­த­வர்கள். சிறு­வர்­க­ளு­டைய இந்த மனோ­பா­வத்தை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கிற சில கய­வர்கள் சிறு­வர்­களைத் துஷ்­பி­ர­யோகம் செய்ய முனை­கின்­றனர்.

சிறு­வர்­களை சொல் ரீதி­யாக ஏசுதல், அவர்­க­ளிடம் ஆபாச வார்த்­தை­களைக் கூறுதல், தவ­றான நோக்­கத்­துடன் சிறு­வர்­களைத் தொடுதல் அல்­லது தீண்­டுதல், தனி­மைப்­ப­டுத்தல் மற்றும் சிறு­வர்­களின் விருப்­பத்­து­டனோ விருப்­ப­மின்­றியோ பாலியல் உறவு கொள்­ளுதல் போன்­றன தண்­டிக்­கப்­பட வேண்­டிய குற்­றங்­க­ளாகும்.

இன்­றைய பெற்­றோர்கள் தன்­னை­ய­றி­யாமல் செய்யும் சில செயற்­பா­டுகள் பிள்ளை துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­படக் கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது. பிள்­ளைகள் செய்யும் தவ­று­க­ளுக்­காக கடு­மை­யாகத் தண்­டித்தல் மற்றும் ஏனைய பிள்­ளை­க­ளுடன் ஒப்­பிட்­டுப்­பே­சுதல் என்­பன பிள்­ளை­க­ளுக்குத் தாழ்வு மனப்­பான்மை ஏற்­பட வாய்ப்­பாக அமைந்­து­வி­டு­கின்­றது. பெற்­றோ­ரி­ட­மி­ருந்து அன்பு கிடைக்­காத சிறு­வர்கள் அந்த அன்பை வேறு­வ­ழியில் எதிர்­பார்க்­கின்­றனர். இதுபோன்ற சந்­தர்ப்­பங்­க­ளில்தான் பிள்­ளை­களின் விருப்­பத்­துடன் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் அரங்­கே­று­கின்­றன.

பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களின் சகல செயற்­பா­டு­க­ளிலும் கவ­ன­மாக இருக்க வேண்டும். பிள்­ளையின் நண்­பர்கள், வகுப்­பா­சி­ரியர், பாட ஆசி­ரி­யர்கள், பாட­சா­லைக்குச் செல்லும் வழி­முறை, வாக­னத்தில் செல்­வ­தாயின் வாகன சார­தியின் நடத்தை என பல விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்டும்.

தாய், தந்தை என இரு­வரும் வேலைக்குச் செல்லும் பட்­சத்தில் பிள்­ளை­யு­டைய நிலைமை என்ன என்­பது தொடர்­பாக கூடுதல் கவனம் செலுத்­த­வேண்டும். தமது பிள்­ளையைப் பாது­காப்­பான இடத்­தில்தான் விட்டுச் செல்­கி­றோமா என்­பது பற்றி ஆரா­ய­வேண்டும். பிள்­ளையை திரும்ப சந்­திக்கும் நேரத்­திலும் மீண்டும் கொண்டு சென்றுவிடும் சந்­தர்ப்­பத்­திலும் பிள்­ளை­யு­டைய மன­நிலை, எவ்­வாறு இருக்­கின்­றது என்­பது தொடர்­பாக கண்­டிப்­பாகக் கவனம் செலுத்­த­வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெற்­றோர்கள் பிள்­ளை­களை வளர்ப்­ப­தற்­கென செவி­லி­களை நிய­மிக்­கின்­றனர். அவ்­வாறு வேலைக்­க­மர்த்தும் செவி­லி­க­ளு­டைய தனிப்­பட்ட வாழ்க்கை, அவர்­க­ளு­டைய நடத்தை என்­ப­வற்றை ஆராய்­வது கட்­டா­ய­மாகும். தனக்கு வந்­தால்தான் தலை­வலி என்று இருக்­காமல் தமது பிள்­ளை­களை மேற்­கூ­றப்­பட்ட பிரச்­சி­னை­களில் இருந்து பாது­காக்க முன்­வர வேண்டும்.

கண்­டு­கொள்­ளப்­ப­டாத ஆண் பிள்­ளைகள்

பெண் பிள்­ளை­களைக் காட்­டிலும் அதி­க­மாக ஆண் பிள்­ளைகள் மீதே பாலியல் சுரண்டல் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. ஆனால் அதைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை இந்த உலகம் ஏற்­ப­டுத்­தா­தது ஏன்? என்ற கேள்­விக்கு விடை சொல்ல இந்த சமூ­கத்தில் உள்ள ஒவ்­வொ­ரு­வரும் கட­மைப்­பட்­டுள்­ளனர்.

இன்­றைய ஊட­கங்கள் அனைத்தும் பெண் பிள்­ளை­க­ளுக்கு நடக்கும் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் பாலியல் வன்­பு­ணர்­வு­க­ளையும் மாத்­தி­ரமே அறிக்­கை­யி­டு­கின்­றன. அவற்­றுக்கு அப்பால் ஆண் பிள்­ளைகள் மீதான பாலியல் சுரண்­டலை பேசத் தயங்­கு­வதன் காரணம் புரி­யாத பூட­க­மா­கவே உள்­ளது. பெரி­ய­வர்­களால் முன்­வைக்­கப்­படும் பாலியல் சீண்­டல்கள் பற்றி எந்­த­வித விழிப்­பு­ணர்வும் இல்­லாத சிறு­வர்­களின் முறைப்­பா­டுகள் ஊமையின் குரல்­க­ளாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

ஆண் பிள்­ளை­க­ளிடம் சட்டவிரோ­த­மாக மனச்­சாட்­சி­யின்றி இன்­பத்தைப் பெற்றுக் கொள்­கின்­ற­வர்கள் தம்மை சமூ­கத்­திடம் இருந்து தற்­காத்­துக்­கொள்ள பிள்­ளை­களை அச்­சு­றுத்­துவர். அவர்­க­ளு­டைய அறி­யா­மையைத் தமக்கு சாத­க­மாக பல வழி­களில் பிர­யோ­கித்துக் கொள்­கின்­றனர். ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் அதன் பார­தூ­ர­மான விளை­வாக பிள்­ளைகள் அவர்­களின் பாலியல் அடி­மை­க­ளாக மாறி­விடும் துர்ப்­பாக்­கிய நிலை காணப்­ப­டு­வது இன்­றைய பெற்­றோர்கள் அறி­யாத ஒன்­றல்ல. ஒருசில சமூக விரோ­தி­களின் இந்த செயற்­பாட்­டினால் பொருத்­த­மில்­லாத வயதில் பிள்­ளை­க­ளுக்கு பாலியல் தேவைகள் உரு­வாகி விடு­கின்­றன. இதில் வேத­னைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் பாதிக்­கப்­படும் இந்த சிறு­வர்கள் பெரி­ய­வர்­க­ளாகி மீண்டும் அதே செயலைச் செய்­யத்­தூண்­டப்­ப­டு­கி­றார்கள். சுழற்சி முறையில் நடக்கும் இந்தச் செயற்­பா­டுகள் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஒரு நாளும் முடிவு கட்ட முடி­யாத நிலை­மையைத் தோற்­று­விக்­கின்­றது.

நல்ல தொடுகை மற்றும் கெட்ட தொடுகை
(Good Touch and Bad Touch)

சிறு­வர்கள் மட்­டு­மன்றி பெரி­ய­வர்­களும் குறிப்­பாக பெற்­றோர்கள் நல்ல தொடுகை கெட்ட தொடுகை பற்றி விளங்கி வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மா­னது. சிறு­வர்கள் தம்மை தொடு­வ­தற்கு அனு­ம­திக்கக் கூடி­ய­வர்கள் யார் என்­ப­தையும் அன்பு முத்­தத்­தி­னையும் அர­வ­ணைப்­பையும் தரக்­கூ­டி­ய­வர்கள் யார் என்­ப­தையும் தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும்.

நல்ல தொடுகை என்­பது பெற்றோர் மற்றும் அவரைச் சார்ந்த உற­வி­னர்கள் முத்­த­மி­டு­வது, தலையை வருடிக் கொடுப்­பது என்­ப­ன­வாகும். சிறு­வர்­களை கஷ்­டத்­துக்கு உள்­ளாக்கும் வகையில் உர­சு­வது அவர்­களின் அவ­ய­வங்­களைத் தொடு­வது என்­பன கெட்ட தொடு­கை­க­ளாகும்.

சிறு­வர்­க­ளுக்கு இவை பற்றி தெளி­வு­ப­டுத்­து­வதால் முடிந்­த­ளவு துஷ்­பி­ர­யோ­கங்­களை இல்­லாமல் செய்­யலாம். எந்­த­வொரு பாது­காப்­பற்ற சந்­தர்ப்­பத்­திலும் “வேண்டாம்” என்று கூறி வில­கிச்­செல்லும் உரிமை சிறு­வர்­க­ளுக்கு உண்டு. யாரா­வது ஒருவர் தேவை­யற்ற விதத்தில் தொட்டால் நம்­பிக்­கைக்­கு­ரிய ஒரு­வ­ரிடம் அதனைத் தெரி­யப்­ப­டுத்­து­மாறு அவர்­களை வழி­ந­டத்­த­வேண்டும்.

சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை ஏன் எதிர்க்க வேண்டும்?

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் கார­ண­மாக குறித்த பாதிக்­கப்­பட்ட பிள்­ளைக்கு இடம்­பெ­று­கின்ற ஆள்சார் அழுத்­தத்­திற்கு அப்பால் சமூ­கத்­துக்கு வீணாக ஏற்­படப் போகும் பொரு­ளா­தார செல­வீ­னத்தை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஒரு­புறம் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்கள் மத்­தியில் ஏற்­படும் பாத­க­மான மற்றும் வேத­னை­மிக்க விளை­வுகள் சாதா­ர­ண­மா­ன­தல்ல. பிள்ளை மீது ஏற்­ப­டு­கின்ற காயம், வளர்ச்சி மட்­டுப்­ப­டுத்­தப்­படல், கற்றல் கோளா­றுகள், நடத்தை முறை, சிகிச்­சைசார் சிக்­கல்கள், அடி­மை­யாதல், தற்­கொலை மன­நிலை என்­பன வாழ்நாள் முழு­வதும் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட சிறு­வனைப் பாதிக்கும் விட­ய­மாக இருக்­கலாம். மறு­புறம் சமூக, கலா­சார நிலைத்­தி­ருத்­தலில் ஏற்­ப­டுத்தும் பாதிப்பைப் போன்று இந்த நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த மேற்­கொள்ளும் மனித செல­வீ­னமும் பொரு­ளா­தார செல­வீ­னமும் சாதா­ர­ண­மா­ன­தல்ல.

துஷ்­பி­ர­யோக அனு­பவம் கொண்ட ஒரு­வரை துஷ்­பி­ர­யோக அனு­பவம் இல்­லாத ஒரு­வ­ருடன் ஒப்­பிடும் போது புகைப்­பி­டிக்கும் அச்­சு­றுத்தல் 103% ஆகும். உடல் பரு­ம­னாகும் அச்­சு­றுத்தல் 95% ஆகும். மது பயன்­ப­டுத்தும் அச்­சு­றுத்தல் 192% ஆகும். தற்­கொலை செய்து கொள்ளும் அச்­சு­றுத்தல் 43% ஆகும்.
(மூலம் – தேசிய பாது­காப்புச் சபை)

இலங்­கையில் சிறுவர் பாது­காப்பு மற்றும் அபி­வி­ருத்­திக்­காக கடந்த வருடம் 1.6 பில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டது. இது மறை­மு­க­மாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்­தினால் ஏற்­பட்ட செல­வி­ன­மாகும். சிறுவர் துஷ்­பி­ர­யோகம் கார­ண­மாக புற்று நோய், சுவா­சப்பை நோய், குடல் நோய், இரு­தய நோய், ஈரல் நோய், இனப்­பெ­ருக்க சுகா­தார அபாயம் என்­பன அதி­க­மாகும். உடல் அல்­லது பாலியல் அல்­லது கடும் பார­பட்­சத்­திற்கு ஆளா­னோரில் ¼ முதல் 1/3 வரை­யானோர் இந்த துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு தமது பிள்­ளை­க­ளையும் ஆளாக்­கு­கின்­றனர். பெரி­யோரின் தற்­கொலை முயற்­சி­களில் 9.2% சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளினால் இடம்­பெ­று­கின்­றன.

பாலியல் துஷ்­பி­ர­யோகம்

வளர்ந்த ஒருவர் அல்­லது இளம்­பி­ரா­யத்தைச் சேர்ந்த ஒருவர் அல்­லது வயதில் மிகக் கூடு­த­லான பலம்­மிக்க சிறுவன் ஒரு­வனால் அவனை வயது, பலம் குறைந்த ஒருவர் தமது பாலியல் திருப்­திக்­காகப் பயன்­ப­டுத்­து­வது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ஆகும்.

இங்கு சிறுவன் விருப்பம் தெரி­விக்­கக்­கூ­டிய விட­யத்தில் இருக்­கின்­றாரா என்­பதைப் பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். வளர்ந்த சிறு­வ­னிடம் பெரி­ய­வ­ருக்கு சம­னான அதி­காரம், சம­மான அறிவு, சம­மான உதவிக் கட்­ட­மைப்பு இல்­லா­மை­யினால் அவர்கள் விருப்­பத்தைத் தெரி­விக்க முடி­யாது. ஏதே­னு­மொரு வகையில் அவ்­வா­றா­ன­தொரு பிள்ளை விருப்­பத்தைத் தெரி­விக்­கின்ற போதும் அதனை செல்­லு­ப­டி­யான விருப்­ப­மாக நீதி­மன்றம் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை.

அதற்­க­மைய இடம்­பெ­று­கின்ற பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களை தொடு­வ­து­ட­னான பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடு­வ­தற்ற பாலியல் துஷ்­பி­ர­யோகம் என வகைப்­ப­டுத்­தலாம். பாலியல் அவ­ய­வங்­களைத் தொடுதல், மற்­றொ­ரு­வரின் பாலியல் அவ­ய­வங்­களைத் தொடச் செய்தல், ஏதே­னு­மொரு பொருளைப் பயன்­ப­டுத்தி பாலியல் செய­லொன்றில் ஈடு­படச் செய்தல் என்­பன தொடு­வ­து­ட­னான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் ஆகும். தொடு­வ­தற்ற பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளாக பாலியல் வீடி­யோக்­களைக் காட்­டுதல், பாலியல் செயற்­பா­டு­களை பார்த்துக் கொண்டிருக்கச் செய்தல், பாலியல் பேச்சுக்களை செவி சாய்க்கச் செய்தல், பாலியல் புகைப்படம் அல்லது வீடியோக்களில் தோன்றச்செய்தல், பாலியல் செயற்பாடுகளைப்பார்க்க பலவந்தப்படுத்தல் போன்ற பல விடயங்களைக் கூறலாம்.

சிறுவர்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களில் 90 வீதமானவை இடம்பெறுவது பிள்ளை மிகவும் அறிமுகமான அல்லது பிள்ளையுடன் ஏதேனுமொரு தொடர்பைக் கொண்டுள்ள ஆள் மூலமாகும். பிள்ளை எந்த ஒரு வகையிலும் அறியாத ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் 10% ஆகும். சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதில் உள்ள மோசமான சவால் இதுவாகும்.

ஏப்ரல் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்தான் நாலா பக்கமும் பேசப்படுகிறது. இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் இன்னும் பேசி முடித்த பாடில்லை. நாட்டில் அரசியல் என்ற ஒரு விடயம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அரசியல் மட்டும்தான் பேசப்பட வேண்டிய ஒன்று எனக் கிடையாது.

நாட்டிலுள்ள ஆளுமைமிக்க மதகுருமார்கள் வீணான போராட்டங்களைத்தான் நடத்துகிறார்கள். ஏன் இந்த உண்ணாவிரதப் போராட்டங்களை இளம்பிஞ்சுகளுக்காக நடத்தக் கூடாது. எமது நாடு சீமா, வித்யா, சேயா, ரெஜினா என இளசுகளை இழந்தபோது யார் போராட்டம் நடத்தினார்கள்? ஒரு இனத்தின் மீதான குரோதத்தை வெளிக்காட்ட மட்டும்தான் இந்த நாட்டில் போராட்டம் நடக்குமா? அந்தளவுக்கு மதகுருமார்களின் மனிதம் மரணித்து விட்டதா? 

ஏன் எமது அரசியல்வாதிகள் கூட இந்த விடயத்தில் மௌனம் சாதிக்கின்றார்கள். ஒன்றும் அறியாத இந்தப் பிஞ்சுகள் மீது கருணை காட்ட எந்த அரசியல்வாதி முன்வருவார்? இவர்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடரும் பட்சத்தில் இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், மதகுருமார்கள் என அனைவரும் குற்றவாளிகள் தான்.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.