ஜனாதிபதி தேர்தலில் ஐ.நா. தலையிடாது

இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் விளக்கம்

0 756

இலங்­கையில் நிலை­பே­றான அபி­வி­ருத்தி, மனித உரி­மைகள் மற்றும் அமைதி ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வதே ஐ.நாவின் இலக்கு என்றும், அதன் பிர­தி­நிதி என்ற வகையில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் இந்த இலக்­குகள் தொடர்­பி­லேயே வலி­யு­றுத்­து­வ­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி ஹனா சிங்கர் கூறி­யி­ருக்­கிறார்.

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பா­ளர்­களில் சில­ருக்கு ஐக்­கிய நாடுகள் சபை பக்­கச்­சார்­பாக செயற்­பட்டு ஆத­ர­வ­ளிப்­ப­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களை அடுத்தே ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை வதி­விடப் பிர­தி­நிதி ஹனா சிங்கர் ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­பாடு குறித்து தனது டுவிட்டர் பக்­கத்தில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

ஐக்­கிய நாடுகள் சபை இலங்­கையில் பல நூற்­றாண்டு கால­மாக செய­லாற்றி வரு­வ­தாகக் குறிப்­பிட்­டி­ருக்கும் அவர், நிலைபே­றான அபி­வி­ருத்தி, மனித உரி­மைகள் மற்றும் அமைதி ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஐ.நா.உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எனவே, ஐ.நா.வுடன் தொடர்­பு­களைப் பேணு­கின்ற, இணைந்து பணி­யாற்­று­கின்ற அனை­வரும் இந்தக் கொள்­கை­க­ளுக்கும் இலக்­கு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்க வேண்­டு­மென்று கேட்டுக் கொண்­டி­ருக்கும் அதே­வேளை, ஐக்­கிய நாடு­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பல்­வேறு தரப்­பி­ன­ரு­டனும் மேற்­கொள்ளும் கலந்­து­ரை­யா­டல்­களில் இவற்­றையே பெரிதும் வலி­யு­றுத்­து­வ­தா­கவும் ஹனா சிங்கர் கூறி­யி­ருக்­கிறார். அண்­மையில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ, ‘பிறர் உங்­களை மோச­மாக சித்­தி­ரிப்­பதைப் போன்று உண்­மையில் நீங்கள் மோச­மா­னவர் இல்லை’ என ஹனா சிங்கர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே ஹனா சிங்கர் மீது சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.