தொடரும் நிகாப் சர்ச்சை

0 730

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்­திரை இன்று சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்­சட்­டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை­வி­திக்கப் பட்­டி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ் திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பு செய்தும் பொது­இ­டங்­களில், பொதுப் போக்­கு­வ­ரத்துச் சேவை­களில் முஸ்லிம் பெண்கள் முகத்­திரை அணிய இய­லாத சூழலே காணப்­ப­டு­கி­றது.

ஊவா மாகாண ஆளுநர் மைத்­திரி குண­ரத்ன, அவ­ரது அதி­கா­ரத்தின் கீழ் இருக்கும் மாகா­ணத்தில் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை விதித்­துள்­ளமை முஸ்லிம் சமூ­கத்தை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. நாட்டின் நாட்டு மக்­களின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் முக்­கிய பங்கு வகிக்கும் பொலிஸ் திணைக்­களம் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடை நீங்­கி­யுள்­ளதென உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருக்­கின்ற நிலையில் மாகாண ஆளுநர் ஒரு­வரால் பாது­காப்­புக்குப் பொறுப்­பான பிரி­வி­னரால் விடுக்­கப்­பட்­டுள்ள அறி­வித்­தலை மீற­மு­டி­யுமா? என்­பது சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்­ளது.

நிகாப், புர்­கா­வுக்குத் தடை

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின் ஏனைய இன மக்கள் மத்­தியில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு பலத்த எதிர்ப்­பினை நாடெங்கும் ஏற்­ப­டுத்­தின. தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்பு பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த இன­வாதக் குழுக்­களே முகத்­தி­ரைக்கு எதிர்ப்பு வெளி­யிட்டு வந்­தன. ஆனால் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு நாடு தழு­விய ரீதியில் ஏனைய சமூ­கங்கள் அனைத்தும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டன. முகத்­திரை அணியும் பெண்­களை தீவி­ர­வா­தி­க­ளாக அடை­யாளம் காட்­டின.

இந்­நி­லை­யிலே நாட்­டி­னதும், நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்­பினைக் கருத்திற் கொண்டு சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை நாட்­டு­வ­தற்­காக பாது­காப்பு அமைச்­ச­ராகப் பதவி வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு தடை­வி­தித்து விஷேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்டார். ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மறு­தினம் ஏப்ரல் 22 ஆம் திகதி இரவு முதல் அவ­ச­ர­காலச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

பொது­மக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் 2 ஆவது சரத்தில் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­திற்கு அமை­யவே அவ­ச­ர­கால சட்டம் அமு­லாக்கம் தொடர்­பான விஷேட வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி அனு­மதி வழங்­கி­ய­துடன் அன்று முதல் ஒவ்­வொரு மாதமும் 22 ஆம் திகதி அவ­ச­ர­கால சட்­டத்தை ஜனா­தி­பதி நீடித்து வந்தார். இந்­நி­லை­யிலே அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் தேசிய பாது­காப்பை கருத்­திற்­கொண்டு முகத்­திரை அணி­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டது?

அவ­ச­ர­கால சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் நீக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஒவ்­வொரு மாவட்­டத்­திற்கும் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்க இரா­ணுவம் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் 12 ஆவது சரத்­திற்கு அமைய ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தியே அவர் இரா­ணு­வத்தை ஈடு­ப­டுத்­து­வ­தற்­கான உத்­த­ர­வு­களை வழங்­கி­யுள்ளார்.

முகத்­தி­ரைக்­கான தடை நீக்கம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் அவ­ச­ர­கால சட்­டத்தின் நீக்­கத்­துடன் முஸ்லிம் பெண்­களின் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யி­ருந்­தது. என்­றாலும் விசேட வர்த்­த­மானி மூலம் தடை செய்­யப்­பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையின் தடையும் நீங்­கி­யுள்­ளதா? என்­பது தொடர்பில் முஸ்லிம் சமூகம் தெளி­வற்று இருந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் தெளி­வு­களை, முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரி, கடி­த­மொன்­றினை அனுப்­பி­யி­ருந்தார்.

பொலிஸ் திணைக்­க­ளத்தின் விளக்கம்

முகத்­திரை தடை நீக்கம் தொடர்­பாக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார். அமைச்­சரின் கடி­தத்­துக்கு பிர­திப்­பொ­லிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கடந்த 7 ஆம் திகதி பதில் வழங்­கி­யி­ருந்தார். பதில் கடி­தத்தில் முகத்­தி­ரைக்­கான தடை நீக்கம் குறித்து தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

நிகாப், புர்கா மற்றும் முகத்­திரை தடை அவ­ச­ர­கால சட்ட விதி­களின் கீழேயே அமுலில் இருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இல்­லா­ததால் நிகாப், புர்கா மற்றும் முகத்­திரை தடைக்­கான சட்­டமும் அமுலில் இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­முக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உட்­பட முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முகத்­தி­ரைக்­கான தடைச்­சட்டம் நீங்­கி­னாலும் முஸ்லிம் பெண்கள் முகத்­திரை அணி­வதில் அவ­தா­ன­மாக நடந்து கொள்­ளும்­படி வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை

நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ் திணைக்­களம் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் முஸ்லிம் பெண்கள் தற்­போ­தைய சூழ்­நி­லையில் பொது இடங்­களில் முகத்­திரை அணி­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய அசா­தா­ரண நிலை­மை­களை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும் என்றும் இது விட­யத்தில் அவ­தா­ன­மாக நடந்து கொள்­ளு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

முகத்­தி­ரைக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை அவ­ச­ர­கால சட்­டத்தின் நீக்­கத்­துடன் நீங்­கி­யி­ருந்­தாலும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை ஏற்­க­னவே மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்த வழி­காட்­டல்­க­ளையே தொடர்ந்தும் பின்­பற்­று­மாறு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இம்­மாதம் 1 ஆம் திகதி உல­மா­சபை அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தது. அந்த அறிக்கை பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கி­றது.

ஆடையைத் தெரிவு செய்து அணி­வது ஒவ்­வொரு மனி­த­னி­னதும், பெண்­ணி­னதும் அடிப்­படை மனித உரி­மை­யாகும். இலங்­கையின் அர­சியல் யாப்­பிலும் இது பற்றி தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்பு நாட்டில் ஓர் அசா­தா­ரண நிலைமை உரு­வா­னது. இந்­நி­லை­யிலே அர­சாங்கம் அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யது. அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் நிகாபும் தற்­கா­லி­க­மாகத் தடைக்­குள்­ளா­னது. அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­ச­ர­கால சட்டம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி நீக்­கப்­பட்­டது. அத்­தோடு விஷேட அர­சாங்க வர்த்­த­மா­னி­யொன்றும் வெளி­யி­டப்­பட்­டது. நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கு பாது­காப்புப் படை­யி­னரைக் கட­மையில் ஈடு­ப­டுத்தும் வகையில் விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து ஏற்­பட்ட அச்ச உணர்­வு­க­ளி­லி­ருந்து மக்கள் இன்னும் முழு­மை­யாக மீள­வில்லை. இவ்­வா­றான தற்­போ­தைய நிலையில் முஸ்லிம் பெண்கள் பகி­ரங்க இடங்­களில் முகத்­திரை அணிந்தால் அசா­தா­ரண நிலை­மைகள் உரு­வா­கலாம். எனவே ஸ்திர­மற்ற இன்­றைய அர­சியல் சூழலில் இன­வா­தி­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­காத வகையில் நாம் பொறுப்­புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் முஸ்லிம் பெண்கள் முகத்­தி­ரை­ய­ணிந்து பொது இடங்­க­ளுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு வேண்­டி­யுள்ளார். மேலும் அவர் ‘கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு நாட்­டி­னதும், மக்­க­ளி­னதும் பாது­காப்­புக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளும் அதி­காரம் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான விசேட அர­சாங்க வர்த்­த­மா­னி­யையும் ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ளார். தற்­போது முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது. எனினும் நமது சூழ­லி­லுள்ள பெரும்­பான்மை சகோ­த­ரர்­களின் மனோ­பா­வமும், அச்­சமும் இன்னும் மாறி­ய­தாகத் தெரி­ய­வில்லை. இந்­நி­லையில் முஸ்லிம் பெண்கள் முகத்­தி­ரை­ய­ணிந்து வெளியில் செல்­லும்­போது அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு ஆளாக இட­முண்டு. எனவே முகத்­தி­ரை­ய­ணிந்து பொது இடங்­க­ளுக்கு செல்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறும், கால­நேர சூழ்­நி­லை­களைக் கவ­னத்திற் கொண்டு செயற்­ப­டு­மாறும் வேண்டிக் கொள்­கிறோம்.

பாது­காப்புத் தரப்­பி­னரின் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது பூரண ஒத்­து­ழைப்­பினை வழ­மைபோல் வழங்­கு­மாறும் வேண்­டு­கிறோம். உல­மாக்­களின் வழி­காட்­டல்­களின்படி பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு ஒத்­து­ழைப்பு நல்கி எமது உரி­மை­களை எதிர்­கா­லத்தில் உறுதி செய்ய முன்­வ­ரு­மாறும் வேண்­டு­கிறேன் என்று தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார

ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் நிகாப் மற்றும் புர்கா அணி­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்­டு­மெனக் கோரி­யுள்ளார்.

‘அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் மூலம் நிகாப், புர்கா அணி­வ­தற்கு இருந்த தடை நீக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்க முடி­யாது. இதனை சட்­டத்தால் தடுப்­ப­தற்குத் தேவை­யில்லை. மாறாக இதனை பொது இடங்­களில் தவிர்த்துக் கொள்­ளு­மாறே அணி­ப­வர்­க­ளிடம் தாழ்­மை­யுடன் வேண்டிக் கொள்­கிறேன்.
நிகாப் மற்றும் புர்கா தடையை நீக்­கு­வதன் மூலம் ஆண், பெண் அடை­யா­ளத்தை அறிந்துகொள்ள முடி­யாத நிலையே ஏற்­படும். இது பாரிய பிரச்­சி­னை­யாகும். பாதையில் நாம் பய­ணிக்கும் போது பாது­காப்­பாக செல்ல வேண்டும். அத்­தோடு எதிரே வரக்­கூ­டி­யவர் ஆணா அல்­லது பெண்ணா என்­பதை அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.

அத்­தோடு அனைத்து இடங்­க­ளிலும் ஆண், பெண்­களின் முகம் வெளிப்­ப­டை­யாக இருக்க வேண்டும். தங்­க­ளது சொந்த இடங்­களில், வீடு­களில் முகத்­திரை அணி­வதை நாம் எதிர்க்­க­வில்லை. அது அவர்­களின் விருப்­ப­மாகும். ஆனால் பொது இடங்­களில் முகத்­திரை அணிய வேண்டாம் என நாம் வின­ய­மாக கேட்டுக் கொள்­கிறோம். இதனை சட்­டத்தின் மூலம் செய்ய வேண்­டி­ய­தில்லை.
அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு முகத்­தி­ரைக்­கான தடை நீக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் அறிக்கை மூலம் அறி­கிறேன். ஆனால் இந்தச் சட்டம் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் வரு­வ­தல்ல. இது ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வதில் இருக்கும் பிரச்­சி­னை­யாகும். ஒருவர் ஒரு தவறை செய்­தி­ருந்தால் அந்த தவறை யார் செய்தார் என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்தும் பிரச்­சி­னை­யிலே இந்த நிகாப் பிரச்­சினை பார்க்­கப்­ப­டு­கி­றது. மாறாக அவ­ச­ர­கால சட்­டத்­திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர்

நிகாப், புர்கா தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் பின்­வரும் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார். அவ­ரது கருத்­துக்­களும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கருத்­துக்­களை ஒத்­த­வை­யா­கவே அமைந்­துள்­ளன.

‘முஸ்லிம் சமூகம் கண்­ணி­ய­மாக அர­சுக்கு வழங்­கிய சுய உறு­தி­மொ­ழி­யினைக் காப்­பாற்றும் வகையில் செயற்­பட வேண்டும். நிகாப் மற்றும் புர்கா என்­ப­ன­வற்றைப் பொது இடங்­களில் அணி­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என அசாத் சாலி முஸ்லிம் சமூ­கத்தைக் கோரி­யுள்ளார்.

அவர் தொடர்ந்தும் பொது இடங்­களில் நிகாப், புர்கா அணி­வதைத் தவிர்க்­கு­மாறு உலமா சபை ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது. நிகாப், புர்­கா­வுக்­கான தடை நீக்கப்பட்டுவிட்ட பின்பும் முன்னைய நிலைப்பாட்டிலே இருப்பதாக உலமாசபை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் நிகாப், புர்கா தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தடை நீங்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நிகாப், புர்கா தடை நீக்கத்திற்கு பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய கட்சிகளும் மற்றும் அமைச்சர்கள் போன்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஊவா மாகாண ஆளுநரும் அம்மாகாணத்தில் முகத்திரைக்கு தடை விதித்துள்ளார்.

நிகாப், புர்காவை நிரந்தரமாக தடை செய்வதற்கு அரசாங்கம் சட்டம் கொண்டுவர முயன்றபோது அதனை எதிர்த்து நாம் தடுத்தோம். அப்போது நாம் சுயமாக செயற்பட்டு முகத்திரை அணிவதை தவிர்ப்பதாக அரசுக்கு வாக்குறுதியளித்தோம்.

ஆனால் மீண்டும் சிலர் பொது இடங்களில் முகத்திரை அணிய ஆரம்பித்துள்ளதால் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதனால் பொது இடங்களில் முகத்திரை அணிவதைத் தவிர்த்து தனிப்பட்ட இடங்களில் அணியுமாறு சமூகத்தைக் கோ-ருகிறோம். வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகா­ணத்தில் முகத்­தி­ரைக்குத் தடை

நாட்டில் சட்­டங்கள் ஒவ்­வொரு மாகா­ணத்­திற்­கு­மென தனித்­த­னி­யாக இயற்­றப்­ப­டு­வ­தில்லை. சட்­டங்கள் முழு நாட்­டுக்­குமே அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் நாட்டின் ஒன்­பது மாகா­ணங்­களில் ஒன்­றான ஊவா மாகா­ணத்தில் நாட்டின் சட்­டத்­தையும் மீறி முகத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­தடை நகைப்­புக்­கு­ரி­யது என்று கூட சொல்­லலாம்.

ஆளுநர் மைத்­திரி குண­ரத்ன

‘ஊவா மாகா­ணத்­தி­னதும், மக்­க­ளதும் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையை தொடர்ந்தும் அமுல்­ப­டுத்­தி­யி­ருக்­கிறேன். ஊவா மாகா­ணத்தில் நிகாப், புர்கா அணிந்து செல்­ப­வர்கள் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என ஆளுநர் மைத்­திரி குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கருத்து வெளி­யி­டு­கையில், ‘ஊவா மாகா­ணத்தில் நிகாப் மற்றும் புர்கா அணிந்து செல்­ப­வர்­களை கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி அவர்கள் அடிப்­ப­டை­வாத குழுக்­களைச் சேர்ந்­த­வர்­களா இல்­லையா? என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளேன்.

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடை நீங்­கி­யி­ருந்­தாலும் அத்­தடை ஊவா மாகா­ணத்தில் அமுலில் இருக்கும். இப்­ப­குதி மக்­களின் பாது­காப்பு கரு­தியே இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளேன்.
முஸ்­லிம்கள் 600 வரு­டங்­க­ளுக்கும் மேலாக எமது கலா­சா­ரத்­துடன் ஒன்­றி­ணைந்து வாழ்­கி­றார்கள். இந்­நி­லையில் அண்மைக் கால­மாக நிகாபும் புர்­காவும் சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களின் கலா­சா­ரத்தைப் பாதித்­துள்­ளன.

பெண்கள் நிகாப் மற்றும் புர்கா தொடர்ந்தும் அணி­வார்கள் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாத குழு­வுடன் தொடர்­பு­பட்ட தீவி­ர­வா­திகள் இன்னும் இருக்­கி­றார்கள் என்­பதே அர்த்­த­மாகும். ஏப்ரல் 21 சம்­ப­வத்­துடன் எமது முஸ்லிம் சமூகம் தொடர்­பு­ப­ட­வில்லை என்றே நாம் கரு­து­கிறோம். ஏப்ரல் தாக்­கு­தல்­களின் பின்பு தற்­போது நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்­பதை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தாக்­கு­தலில் 250 க்கும் மேற்­பட்ட அப்­பா­விகள் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள். இந்­நி­லை­மையை இந்­நாட்டில் மீண்டும் அனு­ம­திக்க முடி­யாது.

இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு மிகவும் சவா­லாக அமைந்­தி­ருந்த காலத்தில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குரல் கொடுத்­தவன் நான். நான் ஒரு இன­வா­தியோ தீவி­ர­வா­தியோ அல்ல. ஆனால் நான் முஸ்லிம், பௌத்தம், தமிழ் என எந்த தீவி­ர­வாதம் என்­றாலும் எதிர்ப்­ப­வன்.

நிகாப் மற்றும் புர்கா அணி­யப்­ப­டாத காலத்தில் எமக்குள் எந்தப் பிரச்­சி­னையும் உரு­வா­க­வில்லை. தீவி­ர­வா­தி­களின் செயற்­பாட்­டி­னாலே சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே வைராக்­கியம் வளர்ந்து முரண்­பா­டுகள் உரு­வா­கின. எனவே, தேசிய பாது­காப்­புக்கும், நாட்டு மக்­க­ளுக்கும் அச்­சு­றுத்­த­லாக உள்ள நிகாப், புர்­காவை ஊவா மாகா­ணத்தில் தடை செய்­துள்ளேன்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

அவ்­வா­றென்றால் ஊவா மாகா­ணத்தில் மாத்­திரம் தான் தீவி­ர­வா­திகள் இருக்­கி­றார்­களா? ஆளுநர் மைத்­திரி குண­ரத்­னவின் கருத்து எம்மை இவ்­வாறே நினைக்கச் செய்­கி­றது.

ஊவா மாகாண ஆளுநர் மைத்­திரி குண­ரத்­னவின் தன்­னிச்­சை­யான செயற்­பா­டுகள், அதுவும் ஓர் இனத்தை ஆடையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீவி­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்த முனைந்­தி­ருப்­பதை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைச்சர் ஏன் கண்டு கொள்­ளாமல் இருக்­கிறார் என்­பது புதி­ரா­கவே இருக்­கி­றது. இது தொடர்பில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கவனம் செலுத்த வேண்டும்.

முகத்­திரை தடை நீக்­கத்­திற்கு எதிர்ப்பு

முகத்­திரை அணி­வ­தற்­கான தடை நீக்­கப்­பட்­ட­மைக்கு பல­த­ரப்­பு­க­ளி­ட­மி­ருந்தும் எதிர்ப்­பு­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க முகத்­திரை அணியும் பெண்கள் அடிப்­ப­டை­வா­திகள் என்று வர்­ணித்­துள்ளார். முகத்­திரை அடிப்­ப­டை­வா­தி­களின் ஆடை எனவும் தெரி­வித்­துள்ளார். நாட்டில் தீவி­ர­வா­தத்தை அடி­யோடு களைந்­தெ­றிய முகத்­திரை அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது தடை செய்­யப்­பட வேண்டும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்மஹிந்த அம­ர­வீர

நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடை நீக்­கப்­பட்­டுள்­ளமை நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு சவா­லாக மாறி­யுள்­ளது. நாட்டில் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படா­மை­யி­னாலே அண்­மையில் நூற்­றுக்­க­ணக்­கான உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சாங்கம் நிகாப், புர்­காவை நிரந்­த­ர­மாகத் தடை­செய்­வ­தற்கு சட்டம் இயற்ற வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீர எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம

முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தற்­காக ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் நிகாப், புர்­கா­வுக்­கான தடை நீக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் அழுத்­தங்கள் கார­ண­மா­கவே இத்­தடை நீக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டி­னதும், நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்பு இது தொடர்பில் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாமை ஆபத்­தா­ன­தாகும். இத்­தடை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம தெரி­வித்­துள்ளார்.

நிரந்­தர தடை ஏற்­ப­டுமா?

நிகாப் மற்றும் புர்கா அணி­வதை நிரந்­த­ர­மாக தடை­செய்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­மையை நாம் அறிவோம். கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முகத்­திரை அணி­வதை நிரந்­த­ர­மாக தடை­செய்­வ­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார். அமைச்­ச­ர­வையில் பெரும்­பான்மை அமைச்­சர்கள் ஆத­ரவும் வழங்­கி­யி­ருந்­தார்கள். இது தொடர்பில் ஆராய்­வ­தற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கால அவ­காசம் கோரி­ய­தை­ய­டுத்து அப்­பத்­திரம் பின்­தள்­ளப்­பட்­டது.

நிகாப் மற்றும் புர்கா ஆடை­க­ளுக்கு முற்­றாக தடை விதிக்­காது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் அதனைத் தடை செய்யும் வகையில் சட்­ட­மி­யற்­று­வது தொடர்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் நீதி­ய­மைச்சர் ஆலோ­சனை கோரி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
நிகாப், புர்­காவை நிரந்­த­ர­மாக தடை­செய்­யாது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான சந்­தர்ப்­பங்­களில் தற்­கா­லி­க­மாக தடை செய்யும் வகையில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முகத்திரைக்கான தடை நாட்டில் தற்போது அமுலில் இல்லை. பொது இடங்களிலும் முகத்திரை அணிய முடியும் என்றாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
நடைமுறையில் முகத்திரை தடை நீக்கியதாகத் தெரியவில்லை.
பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்லும் பெண்கள் சந்தேகம் கொண்டே நோக்கப்படுகின்றார்கள். இந்நிலைமை மாற்றம் பெறவேண்டும். இந்நிலைமையை சட்டத்தினால் மாத்திரம் மாற்றிவிட முடியாது.
முஸ்லிம் சமூகத்தில் இது பற்றி எழுந்துள்ள குழப்பங்கள் நீக்கப்பட்டு தெளிவுகள் வழங்கப்படவேண்டும்.

இதுவிடயத்தில் உலமா சபை நாட்டின் இன நல்லிணக்கம், முஸ்லிம் சமூகத்தில் பாதுகாப்பை முன்னிறுத்தி பகிரங்க தீர்மானத்தை உடன் அறிவிக்க வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.