உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விடு­தலை செய்ய வேண்டும்

கிண்ணியா நகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

0 599

அண்­மையில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஸ்ரீலங்கா ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீதான விசா­ர­ணையை விரை­வு­ப­டுத்தி அவரை விடு­தலை செய்ய வேண்­டு­மெனும் பிரே­ரணை கிண்­ணியா நக­ர­ச­பையில்

ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இத்­தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைப்­ப­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 2019.09.19 வியா­ழக்­கி­ழமை தவி­சாளர் எஸ்.எச்.எம். நளீம் தலை­மையில் கூடிய 19 ஆவது சபை அமர்­வி­லேயே மேற்­படி தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. நக­ர­சபை உறுப்­பினர் எம்.எம்.மஹ்தி முன்­வைத்த இப்­பி­ரே­ர­ணைக்கு சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஏக­ம­ன­தாக ஆத­ரவு தெரி­வித்­தனர். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் தலை­மைத்­துவப் பண்­புகள், தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான அவ­ரது நிலைப்­பாடு மற்றும் அவ­ரது கடந்த கால செயற்­பா­டுகள் குறித்து பிரேரணை முன்வைத்த உறுப்பினர் எம்.எம்.மஹ்தி சபை உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.