உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய விசா­ரணை ஆணை­க்குழு நிய­மித்தார் ஜனா­தி­பதி

தலைவராக நீதிபதி ஜனக் டீ சில்வா

0 581

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வா தலை­மையில் இந்த ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் சட்­டத்தின் (393 ஆம் அதி­காரம்) 2 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் இந்த ஆணைக்­குழு ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 2141/88 எனும் விஷேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக இந்த விடயம் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், 13 பிர­தான விட­யங்­களை மையப்­ப­டுத்தி சாட்­சிகள் மற்றும் பரிந்­து­ரை­களை முன்­வைக்க இந்த ஆணைக்­கு­ழுக்கு பொறுப்பு சாட்­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ர­வுக்­க­மைய ஜனா­தி­பதி செயலர் உதய ஆர். சென­வி­ரத்­னவின் கையொப்­பத்­துடன் 2019 செப்­டம்பர் 21 ஆம் திக­தி­யி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்­க­மைய, இந்த ஐவர் கொண்ட ஆணைக்­கு­ழுவில் தலை­வ­ரான நீதி­பதி ஜனக் டி சில்வா உட்­பட இரு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­களும், இரு ஓய்­வு­பெற்ற மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­களும் ஓய்­வு­பெற்ற அமைச்சு செயலர் ஒரு­வரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்த ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு மேல­தி­க­மாக அக்­கு­ழுவில், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி நிசங்க பந்­துல கரு­ணா­ரத்ன, ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான நிஹால் சுனில் ரஜபக் ஷ, அத்­த­பத்து லிய­னகே பந்­துல குமார அத்­த­பத்து, ஓய்­வு­பெற்ற அமைச்சு செயலர் டப்­ளியூ.எம்.எம். அதி­காரி ஆகியோர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு -– கொச்­சிக்­கடை, நீர்­கொ­ழும்பு –- கட்­டான, மட்­டக்­க­ளப்பு –- சியோன் தேவா­ல­யங்கள் மற்றும் முன்­னணி ஹோட்­டல்கள் மீது நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்த, அங்­க­வீ­ன­முற்ற, படு­கா­ய­ம­டைந்த மற்றும் பாரிய சொத்­தி­ழப்­புக்­களை சந்­தித்­த­வர்கள் தொடர்பில் இந்த ஆணைக்­குழு ஆரா­ய­வுள்­ளது. ஏப்ரல் 21 தாக்­கு­த­லுடன் நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மாகத் தொடர்­பு­பட்­டுள்­ள­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற அரச ஊழி­யர்கள், அதி­கா­ரிகள் மற்றும் அது தொடர்பில் அறிந்­தி­ருந்­த­வர்­களை பொருட்­ப­டுத்­தாமை தொடர்பில் பல முறைப்­பா­டு­களும் குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

அதி­கா­ரத்தைத் தவ­றாகக் கையாண்­டமை, கட­மையைத் தவ­ற­விட்­டமை, கவ­ன­யீனம், பொறுப்­புக்­களை நிறை­வேற்­றாமை மற்றும் செயற்­றி­ற­னற்ற செயற்­பா­டுகள் என்­பன மீள நிக­ழா­தி­ருப்­ப­தனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பரிந்­து­ரை­களை முன்­வைப்­பதே இந்த ஆணைக்­கு­ழுவின் முக்­கிய பொறுப்­பாகும்.

குறித்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் துரித, பக்­கச்­சார்­பற்ற பூரண விசா­ரணை நடத்­து­வது, பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் தொடர்­பு­பட்­ட­வர்கள் மற்றும் அமைப்­புக்­களின் செயற்­பா­டு­களை அடை­யாளம் காண்­பது ஆகிய பொறுப்­புக்­களும் இந்த ஆணைக்­கு­ழு­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாத மற்றும் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களை முன்­கூட்­டியே அறிந்து சட்ட நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யமை, கவ­ன­யீ­னத்­துடன் செயற்­பட்­டமை மற்றும் உரிய நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றிய உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் அதி­கா­ரி­களை அடை­யாளம் காணு­மாறும் ஆணைக்­கு­ழு­விடம் ஜனா­தி­பதி பொறுப்­ப­ளித்­துள்ளார்.

அதே­வேளை, தற்­கொலை தாக்­கு­தல்­களை தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டங்கள், வன்­மு­றைகள் தொடர்­பிலும் அவற்றின் பின்­ன­ணி­யி­லி­ருந்து செயற்­பட்ட நபர்கள் மற்றும் அமைப்­புக்கள் தொடர்­பிலும் ஆராய இந்த ஆணைக்­கு­ழு­வுக்கு பொறுப்பு சாட்­டப்ப்ட்­டுள்­ளது.

நாட்டில் இன, மத முறு­கல்­களை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் அமைப்­புக்கள், தனி நபர்கள் தொடர்­பிலும் ஜனா­தி­பதி இந்த ஆணைக்­குழு ஊடாக விசா­ரித்து அறிக்கை சமர்ப்­பிக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

இத­னை­விட, இந்த ஆணைக்­கு­ழு­வுக்கு விசா­ரிக்க பொறுப்புச் சாட்­டப்­பட்­டுள்ள 13 விட­யங்­களில், 4/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்­கான காரணம், அதற்­கான சந்­தர்ப்ப சூழல், தாக்­கு­தல்­களின் தன்மை ஆகி­ய­வற்­றையும் கண்­ட­றி­யு­மாறும் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் இடம்­பெ­றாமல் தடுக்க பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மாறும் பொறுப்பு சாட்­டப்­பட்­டுள்­ளது.
1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க ஆணைக்­கு­ழுக்கள் சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யா­யத்தில் கூறப்­படும் அனைத்து விதி விதா­னங்­க­ளுக்கும் உட்­பட்டு நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த ஆணைக்­குழு, சாட்­சி­களை விசா­ரித்து எதிர்­கால சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அறிக்­கை­யாகத் தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பிக்க ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி குற்­ற­வியல் விசா­ர­ணைகள் மற்றும் இலஞ்ச ஊழல் விசா­ர­ணைகள் என இரு வேறு விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான வகையில் வெளிப்­படும் சான்­று­களை பரிந்­து­ரை­க­ளாக சமர்ப்­பிக்க இந்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.அத்­துடன் தாக்­கு­த­லுக்கு உத­வி­ய­வர்கள், அதற்­கான தூண்­டு­தல்­களை செய்தவர்கள் மற்றும் சதித்­திட்டம் தீட்­டி­ய­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­பது உள்­ளிட்ட பரிந்­து­ரை­களை ஆணைக்­குழு தமது இறுதி அறிக்­கையில் உள்­ள­டக்க வேண்­டி­யுள்­ளது. குறித்த ஐவ­ர­டங்­கிய ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை 3 மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, 2 மாதங்களுக்கு ஒரு தடவை இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 6 மாதங்களுக்குள் விசாரணைகளின் முடிவு, பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை, அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தமக்கு ஒப்படைத்தல் வேண்டுமென விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.