2020 ஆம் ஆண்டை சகிப்புத்தன்மைக்கான வருடமாக பிரகடனப்படுத்த வேண்டும்

0 1,317

2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்­தே­றிய கொடூ­ரத்தின் நினை­வு­க­ளி­லி­ருந்து விடு­வித்­துக்­கொள்ள முடி­யாத நிலையில் இருக்­கிறோம். தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட முஸ்­லிம்­களின் சிறு குழு­வி­னரால் மட்­டுமே திட்­ட­மி­டப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­யினும், இலங்கைப் பெரும்­பான்­மை­யி­ன­ரது வன்­மை­யான கண்­டிப்பைத் தொடர்ந்து, சகல இலங்கை முஸ்­லிம்­களின் மீதான கண்­ணோட்டம், சந்­தே­க­மா­கவும் நம்­பிக்­கை­யின்­மை­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. இன்­று­வரை முழு­தாக களை­ய­கற்­றப்­ப­டாத அடிப்­ப­டை­வா­தி­களால் வழி­ந­டத்­தப்­பட்ட ஒரு குழுவின் மிலேச்­சத்­த­ன­மான நட­வ­டிக்­கை­யினால் ஒரு சமூ­க­மாக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் தண்­டிக்­கப்­ப­டு­கிறோம்.

சுருங்­கக்­கூறின், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்­பா­கவே பெரும்­பான்மை சிங்­க­ள­வர்கள் மத்­தியில் காணப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான மனப்­பாங்கு, கருத்­துக்கள் மற்றும் எதிர்­பார்ப்­புகள், இத்­தாக்­கு­தலுக்கு பிற்­பா­டான காலங்­களில் மிக வெளிப்­ப­டை­யா­கவும் தயக்­க­மின்­றி­ய­தா­கவும் காக்­கப்­ப­டு­கின்­றன. சிறு­பான்மை மக்கள் (குறிப்­பாக முஸ்­லிம்கள்) சம­கா­லத்தில் முகங்­கொ­டுக்கும் இச்­சிக்­கலை முன்­வைக்க சாத­க­மான ஒரு தள­மாக இதைக் கரு­து­கிறேன். தனி மனித சகிப்­புத்­தன்மை எனும் புள்­ளிக்கே இப்­பு­தி­ருக்­கான விடை குவி­வதை உண­ர­மு­டி­கி­றது. சகிப்­புத்­தன்மை (Tolerance) எனும் கொள்கை இயல்­பாக ஒவ்­வொரு மனி­த­னிலும் குடி­கொண்­டி­ருப்­ப­தன்று. மாறாக, ஒவ்­வொ­ரு­வரும் வளர்த்­துக்­கொள்ள வேண்­டிய ஒரு மனப்­பாங்கு எனக்­கூ­றலாம். ஆய்­வு­க­ளின்­படி, சகிப்­புத்­தன்மை ஒரு­நாட்டின் சட்­ட­திட்­டங்­களை முறை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் அரசின் அதி­கா­ரத்தை நிலை­நாட்­டு­வ­தற்கும் வழி­காட்­டு­கி­றது.

இச்­சிந்­தனை பெரும்­பான்மை மக்­களின் திருப்­தி­க­ர­மான ஒப்­பு­த­லுக்கு உட்­ப­டா­மைக்கு கார­ணங்­களும் இயல்­பாக எழும் கேள்­வி­களும் இருக்­கலாம்.
சகிப்­புத்­தன்­மைக்­கான வரு­டத்தில் முஸ்­லிம்­க­ளையும் தமி­ழ­ரையும் பெரும்­பான்­மை­யி­ன­ரான நாம் ஏன் சகித்­துக்­கொள்ள வேண்டும்.

பல்­லா­யிரம் வரு­டங்­க­ளாக அவர்­களை சகித்தும் அவர்கள் செய்த அல்­லது செய்து வரும் செயற்­பா­டு­களைப் பார்த்த பின்­னரும் அவர்­களை சகிக்க வேண்­டுமா? பக­ர­மாக ஏன் அவர்கள் எம்மை சகித்­துக்­கொள்ளக் கூடாது? சவூதி அரே­பியா போன்ற நாடு­களில் சிறு­பான்மை சிங்­கள பௌத்­தர்­களை சகித்­துக்­கொள்­வார்­களா?

இலங்­கை­ய­ராக இது­போன்ற வினாக்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரலாம். இன, மத, பிர­தேச, சமூக, கலா­சார, அர­சியல் வேறு­பா­டு­களை கொண்­டி­ருப்­பினும் இலங்­கையர் எனும் அடை­யாளம் எம் அனை­வ­ரையும் ஒன்­று­ப­டுத்­து­கி­றது. இது ஒன்றே 2020ஐ சகிப்­புத்­தன்­மையின் வரு­ட­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்குப் போது­மா­னது.

இச்­சிந்­த­னைக்­கான செயற்­பா­டு­களை கலந்­தா­லோ­சிக்­கலாம். கொள்­கையை முன்­னெ­டுத்­துச்­செல்­வ­தற்கு சமூ­க­வியல் ரீதியில் தொடர்­பு­பட்ட என்­னை­விட மிகப் பொருத்­த­மான நிபு­ணர்கள் இருக்­கி­றார்கள். எனினும் இச்­சிந்­த­னையை வலுப்­ப­டுத்­தக்­கூ­டிய 6 வழி­மு­றை­களை முன்­வைக்­கலாம் எனக் கரு­து­கிறேன்.

1.பச்­சா­தாபம் (Empathy)

2.பரிவு (Compassion)

3.உரை­யாடல் (Dialog)

4.முரண்­பா­டு­களைத் தீர்த்தல் (Colflict resolution)

5.நெகிழ்­வுத்­தன்மை (Resilience)

6.குழுச்­செ­யற்­பாடு (Team work)

இச்­செ­யற்­பா­டுகள் எமது பல்­லின, சமய வழிமுறைகளில் ஏற்கனவே இடம்பிடித்திருப்பவையாயினும், சமய, அரசியல் மற்றும் இன முற்போக்குவாதத்தினாலும், தத்தமது சுய இலாபங்க ளுக்காகவும் திட்டமிடப்பட்டு தகர்த்தெறியப்பட்டுள்ளன.

புத்த பெருமானின் கூற்றுக்கமைய நடுநிலைமையான வழிமுறைகளை பின்பற்றுவோம். இதுவே மிகச்சிறந்த தீர்வென நம்புவதோடு, இதன் அடிப்படையிலேயே 2020 ஐ சகிப்புத்தன்மைக்குரிய ஆண்டாக பிரகடனப்படுத்த வேண்டும் என கூறிக்கொள்கிறேன்.

டாக்டர் ருவைஸ் ஹனீபா

vidivelli

Leave A Reply

Your email address will not be published.