தற்கொலைதாரிகளின் உடல் எச்சங்களை பொரளை மயானத்தில் புதைக்க உத்தரவு

0 518

ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்பட்ட தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், கொழும்பு கிங்ஸ்­பரி ஹோட்டல் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகி­ய­வற்றில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய குண்­டு­தா­ரி­க­ளி­னு­டைய தலைப் பகு­திகளை உற­வி­னர்கள் பொறுப்­பேற்க மறுத்­துள்­ளனர். கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மொஹமட் இப்­ராஹீம் மொஹமட் இன்சாப் அஹமட் ஆகி­யோரின் உற­வி­னர்­களே அவர்­க­ளு­டைய தலை மற்றும் உடற்­பா­கங்­களை பொறுப்­பேற்க மறுத்­துள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, அவ்­விரு குண்­டு­தா­ரி­க­ளி­னதும் மரண பரி­சோ­தனை சாட்­சி­களை முன்­னி­றுத்தி நேற்று நீதி­மன்­றத்­திற்கு அறி­வித்­தது.

அத­னை­ய­டுத்து, குறித்த தலைகள் மற்றும் உடற்­பா­கங்­களை திம்­பி­ரி­கஸ்­யாய பிர­தேச செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கு உத்­த­ர­விட்ட கோட்டை நீதிவான் ரங்க திசா­நா­யக்க, அவற்றைப் பொறுப்­பேற்று பொரளை பொது­ம­யா­னத்தில் புதைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு திம்­பி­ரி­கஸ்­யாய பிர­தேச செய­லா­ள­ருக்கு உத்­த­ர­விட்டார். அத்­துடன் தற்­கொலை குண்­டு­தா­ரி­களின் தலை மற்றும் உடற்­பா­கங்­களை புதைக்கும் நட­வ­டிக்கை தொடர்­பான அறிக்­கை­யொன்றை மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு பொரளை பிர­தே­சத்­திற்குப் பொறுப்­பான கிராம உத்­தி­யோ­கத்­த­ருக்கும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடாத்­திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் குறித்த விசா­ரணை நிறை­வ­டைந்­துள்ள நிலையில், அவ­ரது தலைப்­ப­குதி சட்ட வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்தில் பாது­காப்­பாக வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதனை பொறுப்­பேற்க உற­வி­னர்கள் மறுப்­பதால் அதனை அரச செலவில் புதைக்க சி.ஐ.டி.யின் விசேட விசா­ரணை அறை இலக்கம் 4 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கீர்த்­தி­சிங்க நேற்று நீதி­வானை கோரி­யி­ருந்தார்.

அத்­துடன் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் நடாத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்­குதல் தொடர்பில், தற்­கொ­லை­தா­ரி­யான மொஹமட் இப்­ராஹீம் மொஹமட் இன்சாப் அஹ­மடின் தலை மற்றும் உடற்­பா­கங்­களை ஏற்க அவ­ரது குடும்­பத்தார் மறுப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

தற்­கொ­லை­தா­ரியின் தந்தை மற்றும் மாமா ஆகி­யோரின் சாட்­சி­யங்­களை குறித்த சம்­ப­வத்தை விசா­ரிக்கும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்­திர விம­ல­சிறி நீதிவான் முன்னிலையில் நெறிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த இரு தற்கொலைதாரிகளினதும் தலை மற்றும் உடற்பாகங்களை பொரளை பொது மயானத்தில் புதைக்க நீதிவான் இரு வேறு கட்டளைகளை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்குப் பிறப்பித்துள்ளார்.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.