ஏமாற்றப்பட்ட ஹஜ் விண்ணப்பதாரர்களின் கட்டணங்களை திருப்பி செலுத்தினார் முகவர்

0 485

ஹஜ் கட­மைக்­காக ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எட்­டுப்­பே­ரிடம் உரிய கட்­ட­ணங்­களை அற­விட்­டுக்­கொண்டு அவர்­க­ளுக்­கான ஹஜ் பயண ஏற்­பா­டு­களைச் செய்­யாது இறுதி நேரத்தில் ஏமாற்­றிய ஹஜ் முகவர் ஒருவர் நேற்று முன்­தினம் மாலை உரிய கட்­ட­ணங்­களை திருப்பிச் செலுத்­தினார்.

முகவர் நிலை­யத்­தினால் ஏமாற்­றப்­பட்டு இறுதி நேரத்தில் ஹஜ் யாத்­தி­ரையைத் தவ­ற­விட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இருவர் காத்­தான்­கு­டி­யையும் ஏனைய அறு­வரும் கொழும்பு பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

நேற்று முன்­தினம் மாலை எட்டு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ் முக­வ­ருக்கு செலுத்­தி­யி­ருந்த கட்­டணம் 52 இலட்சம் ரூபாவும் குறிப்­பிட்ட முக­வ­ரினால் திருப்பிக் கைய­ளிக்­கப்­பட்­டது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கைகள் குறித்து அரச ஹஜ் குழு தீர்­மா­னிக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களும் ஹஜ் யாத்­தி­ரைக்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்த நிலையில் இறுதி நேரத்தில் ஹஜ் முக­வ­ரினால் ஏமாற்­றப்­பட்­ட­வர்­க­ளா­வர்.

குறிப்­பிட்ட எட்டு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கும் அடுத்த வருட ஹஜ் கடமையின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.