வைத்திய பீட நிர்மாணிப்புக்கு சவூதி அரசு 50 மில்லியன் டொலர் நிதி உதவி

0 1,405

சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் மருத்­துவ பீடம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கு சவூதி அரே­பி­யாவின் எஸ்.எப்.டீ.நிதியம் முன்­வந்­துள்­ளது. 187.5 சவூதி ரியால் (50 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) நிதியை வழங்க மேற்­படி நிதியம் உடன்­பட்­டுள்­ளது.

நேற்று நிதி­ய­மைச்சில் இதற்­கான ஒப்பந்தம் கைச்­சாத்­திடப்பட்டது. இலங்கை சார்­பாக நிதி­ய­மைச்சின் செய­லாளர் கலா­நிதி ஆர்.எச்.எஸ். சம­ர­துங்­கவும் மேற்­படி பணிக்­காக நிதி வழங்க முன்­வந்­துள்ள சவூ­தியின் எஸ்.எப்.டீ.நிறு­வனம் சார்­பாக அதன் பிரதித் தலை­வரும் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ரு­மான காலித் சுலைமான் அல் குதை­ரியும் கைச்­சாத்­திட்­டனர்.

சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் மருத்­துவ பீடம் ஒன்றை அமைப்­ப­தற்­காக இலங்கை அர­சாங்­கத்தால் தற்­போது அங்­கீ­காரம் பெறப்­பட்­டுள்­ளது. இதனை நடத்­து­வ­தற்குத் தேவை­யான நிதி 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்­டத்தில் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மேற்­படி வைத்­திய பீடத்தில் முதல் நுழை­வுக்­கான மாணவர் குழு­வி­னரும் தற்­போது பதிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அரசு முன்­னெ­டுத்து வரும் ‘2025 நோக்கு’ செயற்­திட்­டத்­திற்கு இணை­யாக கல்வி, திறன், விருத்தி, சுகா­தாரம் பேணல் போன்ற சமூக நலத் தேவை­களைப் பெற்றுக் கொடுப்­பதும் அவற்றை மேலும் விருத்தி செய்­வதும் அரசின் அபி­வி­ருத்தித் திட்­டத்தின் பிர­தான கூறு­க­ளாகக் கணிக்­கப்­ப­டு­கின்­றன. சுகா­தாரம் போஷணை மற்றும் உள்­நாட்டு வைத்­தி­யத்­துறை அமைச்சு மேற்­கொண்ட ஆய்­வ­றிக்­கைக்­க­மைய இலங்கை மக்கள் தொகையில் 100,000 பேருக்கு 77 வைத்­திய அதி­கா­ரிகள் என்ற விகி­தத்­திலே தான் டாக்­டர்கள் காணப்­ப­டு­கி­றார்கள்.

இந்த அடிப்­ப­டையில் ஐக்­கிய அமெ­ரிக்கா, ஐக்­கிய இராச்­சியம், கனடா போன்ற அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களில் இவ்­வி­கி­தா­சா­ரத்தை விட பல மடங்கு அதி­க­மான டாக்­டர்கள் கட­மையில் உள்­ளார்கள்.

1981 ஆம் ஆண்டு சவூ­தியின் நிதி­யத்தின் ஊடாக இலங்­கையின் நீர் விநி­யோகத் திட்­டத்­திற்கு 30 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி கட­னு­த­வி­யாக வழங்­கப்­பட்­டது. இதுவே இலங்­கை–­ச­வூதி அர­சாங்­கங்­க­ளுக்­கி­டை­யே­யான முத­லா­வது நிதி கைய­ளிப்பு நட­வ­டிக்­கை­யாகும்.

2018 ஆம் ஆண்­டாகும் போது இலங்­கையின் வீதி அபிவிருத்தி, சுகாதாரம்,நீர்ப்பாசனம், சமூக அபிவிருத்தி, உயர் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குமாக சவூதி அரேபியா இலங்கைக்கு 386 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சத்தார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.