ஹஜ் யாத்திரை – 2019 : இதுவரை 12 முறைப்பாடுகள்

0 463

ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக இது­வரை 12 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் மேலும் முறைப்­பா­டுகள் கிடைக்­கு­மென எதிர்­பார்ப்­ப­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கென அரச ஹஜ் குழு நாளை (இன்று) ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் மூவ­ர­டங்­கிய குழு­வொன்­றினை நிய­மிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

பாரிய ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் விசா­ர­ணையின் பின்பு உறுதி செய்­யப்­பட்டால் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முகவர் நிலை­யங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை இரத்துச் செய்­வ­தற்கு ஹஜ் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஹஜ்­ஜா­ஜிகள் தாம் பயணம் மேற்­கொண்ட ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக தமக்கு வழங்­கப்­பட்ட சேவைகள் மற்றும் அற­வி­டப்­பட்ட கட்­ட­ணங்கள் தொடர்பில் முறைப்­பாடு செய்ய விரும்­பினால் எதிர்­வரும் 21 ஆம் திக­திக்கு முன்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­பட வேண்டும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்தோடு ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ஆலோசனைகளையும் தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.