விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 09

முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம்

0 718

“இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று உள்­ள­தாகக் கூறப்­ப­டு­வது அப்­பட்­ட­மான பொய்” என மஹிந்­தவின் பக்­தர்­களில் ஒரு­வ­ரான உதய கம்­மன்­பில சமீ­பத்­திய பத்­தி­ரிகைச் செவ்­வி­யொன்றில் கூறி­யி­ருந்தார். முஸ்லிம் சனத்­தொகை வளர்ச்சி வீதம் குறித்து இதே­போன்ற ஒரு வாக்­கி­ய­முண்டு. முஸ்­லிம்­களின் சனத்­தொகை வளர்ச்சி சிங்­க­ள­வர்­களைச் சிறு­பான்­மை­யாக்­கி­விடும் என்ற கம்­மன்­பி­லவின் வார்த்தை அப்­பட்­ட­மான பொய்­யாகும்.

1990 களின் காலப்­ப­கு­தியில் ITN தொலைக்­காட்­சியில் ஒரு வாராந்த கலந்­துரை யாடலின் மூலம் தனது பிர­சாரப் பணியைத் தொடங்­கி­யவர் கங்­கொ­ட­வில சோம­தேரர். தொலைக்­காட்சி எனும் ஊட­கத்தை வெற்­றி­க­ர­மாகக் கையாண்ட முத­லா­வது இலங்கை பௌத்த பிக்கு சோம­தேரர் தான் என பேரா­சி­ரியர் ஜய­தேவ உயங்­கொட குறிப்­பி­டு­கின்றார். அதில் 2025ஆம் ஆண்டில் சிங்­கள பௌத்­தர்கள் குடித்­தொகை ரீதியில் சிறு­பான்­மை­யி­ன­ராகி விடு­வார்கள் என்று ஆச்­ச­ரியம் தரும் அர­சியல் கோட்­பாடு ஒன்­றையும் சோம­தேரர் முன்­வைத்து வந்தார். முஸ்லிம் சமூ­கத்தை குறிப்­பாக விமர்­சித்தார். இவ்­வி­ட­யத்தில் அவர் பகுத்­த­றி­வின்­மையின் எல்­லை­க­ளையும் தாண்­டிச்­சென்றார். சிங்­கள பௌத்­தர்கள் குடும்­பக்­கட்­டுப்­பாட்டைப் பேணு­கையில் முஸ்­லிம்கள் தாரா­ள­மாகப் பிள்­ளை­களைப் பெற்­றுக்­கொண்­டிருக் கிறார்கள் என்­பதே அவ­ரது அடிப்­படை வாத­மாகும்.

இந்­தி­யாவில் தீவிர இந்­துத்­துவ கருத்து நிலை­யா­ளர்­களும் இந்­திய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இதை­யொத்த குடித்­தொ­கை­வாதம் ஒன்­றையே முன்­வைக்­கின்­றனர். இந்­தி­யாவில் இந்­துத்­துவ கருத்­து­நிலை எத்­த­கைய பகுத்­த­றி­வுக்குப் புறம்­பான சட்­ட­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளதோ அத்­த­கைய சட்­ட­கத்­தையே சிங்­க­ளத்­துவ கருத்து நிலையும் அடித்­த­ள­மாகக் கொண்­டுள்­ளது. சோம­தேரர் ரஷ்­யா­வி­லி­ருந்து இலங்கை திரும்­பிய பின்னர் பத்துப் பிள்­ளை­க­ளுக்கு மேல் பெற்ற சிங்­கள பௌத்த பெண்­களைப் பாராட்டும் பொது வைபவம் ஒன்றை ஏற்­பாடு செய்ய அவர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக அவ­ரது மர­ணத்தின் பின்னர் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

இந்த நிகழ்வு, தீவிர சிங்­கள – பௌத்த தேசி­ய­வா­தத்தின் தலை­ந­க­ரான காலியில் நடை­பெற இருந்­தது. எனினும் ரஷ்யா சென்ற சோம­தேரர் உயி­ருடன் திரும்­ப­வில்லை. 2003 இல் அவர் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வகையில் மர­ணித்­துப்­போனார். சோம தேரர் 2002 இல் அதா­வது மர­ணத்­திற்கு முன்­னைய ஆண்டில் அவர் நிறு­விய ஒரு சிறிய அர­சியல் கட்­சியின் தலை­வ­ரா­கவும் அவர் விளங்­கினார். அடுத்து வந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள –பௌத்த அர­சியல் நலன்­களைக் காப்­ப­தற்­கா­கவும் நாட்டின் தார்­மிக மீட்­டெ­ழுச்­சிக்­கா­கவும் தான் போட்­டி­யி­டப்­போ­வ­தா­கவும் அவர் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார். எனினும் அவ­ரது கனவு கைகூ­ட­வில்லை.

பின்னர் தோன்­றிய ஜாதிக ஹெல உறு­மய கட்­சியில் இணைந்த அர­சியல் பிக்­குகள் முஸ்லிம் சனத்­தொகை குறித்த ஒரு அர­சியல் கோட்­பாட்டை வளர்த்­தெ­டுத்­தனர். அவர்­களுள் கொலன்­னாவை ஸ்ரீ சுமங்­கள தேரர், உடுவே தம்­மா­லோக தேரர், எல்­லா­வல மேதா­னந்த தேரர், ஓமல்பே சோபித தேரர் மற்றும் அது­ர­லிய ரத்ன தேரர் போன்றோர் முக்­கி­ய­மா­ன­வர்கள்.

2012 இல் தம்­புள்ள இன முரண்­பாட்டை அடுத்து உரு­வான பொது­பல சேனா முஸ்லிம் குடித்­தொகை அதி­க­ரிப்பு தொடர்­பாக புர­ளியைக் கிளப்­பி­யது. ஞான­சாரர் இது குறித்த பீதியை சிங்­கள – பௌத்­தர்கள் மத்­தியில் மிகக் கவ­ன­மாகப் பரப்பி வரு­கிறார். 4/21 க்குப்­பின்னர் இனத் தேசி­ய­வா­தி­யான கம்­மன்­பில சனத்­தொகை வளர்ச்சி விகிதம் எதிர்­கா­லத்தில் சிங்­க­ள­வர்­களைச் சிறு­பான்­மை­யாக்­கி­விடும் என்று சோம­தே­ரரின் பழைய பல்­ல­வியைப் பாடி அமைச்சர் ஹக்­கீ­மி­ட­மி­ருந்து போதிய எதிர்­வி­னையை எதிர்­கொண்டார்.

சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும் இனத்­தே­சிய வாதி­களும் அர­சியல் உள்­நோக்கம் கொண்ட மத­கு­ருக்­களும் சிங்­கள சமூ­கத்தைப் பீதி­ம­ய­மாக்கி முஸ்லிம் குடித்­தொகை வாதத்தைக் கையில் எடுத்­துள்­ளனர். அந­கா­ரிக தர்­ம­பால, ஸ்டீல் ஒல்கொட், ஹிக்­க­டுவே சுமங்­கல தேரர் என்போர் இதில் முக்­கி­ய­மா­ன­வர்கள். முஸ்­லிமோ போபியா (Muslimo Phopiya) வை சந்­தைப்­ப­டுத்தும் மூலோ­பா­யங்­களில் ஒன்­றா­கவே முஸ்லிம் சனத்­தொகை குறித்த இந்தப் பொய்க்­க­லந்­து­ரை­யாடல் கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றது. அரபு மய­மாக்கல், மத்­ரஸாக் கல்வி, இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் போன்ற கதை­யா­டல்­களைப் போன்று அறி­வார்ந்த ரீதியில் பதி­ல­ளிக்க வேண்­டிய ஒரு புனைவே முஸ்லிம் குடித்­தொகை வாதம் ஆகும். சுமா­ராக, மியன்­மா­ரிலும் இந்தக் கதை­யாடல் அங்­குள்ள மத­கு­ருக்­களால் உரு­வாக்­கப்­பட்­டமை கவ­னிப்­புக்­கு­ரி­யது.

2011இல் அதி­கா­ர­பூர்வ தொகை மதிப்­பீட்­டின்­படி இலங்­கையில் சுமார் 2 மில்­லியன் முஸ்­லிம்கள் (1,967,277) வாழ்­கின்­றனர். இத்­தொகை 2040 இல் 4 மில்­லி­ய­னா­கவும் 2070 இல் 8 மில்­லி­ய­னா­கவும் 2100 இல் 16 மில்­லி­ய­னா­கவும் அதி­க­ரிக்கும் என இனத்­தே­சி­ய­வா­திகள் இன்று பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். பெரும்­பான்மைச் சிங்­கள பௌத்­தர்­க­ளி­டையே முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரிப்பு பற்­றிய ஓர் அறி­வு­பூர்­வ­மற்ற பீதியை (Demogrophobia) இது உரு­வாக்கி வரு­கின்­றது. இந்தப் புனை­வுக்குப் பின்னால் ஒரு குரூ­ர­மான அர­சியல் ஒளிந்­தி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களின் சனத்­தொகை இரட்­டிப்­பா­வ­தற்கு இன்னும் 30 ஆண்­டு­களே போது­மா­னது எனவும் சிங்­க­ள­வர்கள் சனத்­தொகை இரட்­டிப்­பா­வ­தற்கு 140 ஆண்­டுகள் தேவை எனவும் இன­வா­திகள் பிர­சாரம் செய்­கின்­றனர்.

இலங்கை முஸ்­லிம்கள் சனத்­தொகை அதி­க­ரிப்­புக்கு ஏது­வான சில போலிக் கார­ணங்­க­ளையும் இத்­த­கைய பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ளோர் முன்­வைத்து வரு­கின்­றனர். வெளி­நாட்டு முஸ்­லிம்கள் இலங்­கையில் குடி­யேறி வரு­வ­தாக ஒரு புதிய குற்­றச்­சாட்டும் முன்­னி­றுத்­தப்­ப­டு­கின்­றது. கொழும்­பிலும் புற­ந­கர்ப்­ப­கு­தி­க­ளிலும் இந்­திய முஸ்­லிம்கள், மாலை­தீ­வினர் மற்றும் பாகிஸ்­தா­னி­யர்கள் 20,000 பேர் புதி­தாகக் குடி­யே­றி­யுள்­ள­தாக இன­வா­திகள் கூறு­கின்­றனர். இதே­வேளை கடந்த சில ஆண்­டு­களில் 57,000 சிங்­கள பௌத்­தர்கள் முறை­யற்ற விதத்தில் இஸ்லாம் மதத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர் எனவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. சிங்­கள யுவ­தி­களை முஸ்லிம் இளை­ஞர்கள் மணம் முடிப்­பதன் மூலமே இத்­த­கைய சட்­ட­வி­ரோத மத மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன என்­பது இவர்­களின் அடிப்­படை வாத­மாகும்.

இன்­னொரு புறம் மத்­திய கிழக்­கிற்கு பணி­யாற்றச் செல்லும் சிங்­கள பௌத்­தர்கள் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் இஸ்­லா­மிய மதத்­திற்கு மாற்­றப்­ப­டு­வ­தா­கவும் இன­வா­திகள் அங்­க­லாய்க்­கின்­றனர். இக்­குற்­றச்­சாட்டு ஒவ்­வொன்­றுக்கும் அறி­வார்ந்த பதி­லடி புள்ளி விபர அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும்.

1911 முதல் 2001 வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் அதி­கா­ர­பூர்­வ­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தொகை மதிப்­பீட்டுத் தர­வுகள் பின்­வரும் அட்­ட­வ­ணையில் (அட்டவணை 01) தரப்­ப­டு­கின்­றது. இத்­த­ர­வு­களை மிக மேலோட்­ட­மாக அவ­தா­னிக்­கும்­போதே இன­வா­தி­களின் குடித்­தொகை வாதத்­தி­லுள்ள புனை­வு­க­ளையும் பொய்­மை­க­ளையும் எளிதில் புரிந்து கொள்­ளலாம்.

மேற்­போந்த தர­வு­க­ளின்­படி இலங்­கையில் எந்­த­வொரு இனத்­த­வ­ரது சனத்­தொகை வளர்ச்சி வீதமும் (Population Growth rate) சமச்­சீ­ரா­ன­தாக இல்லை என்­பதைப் புரிந்து கொள்­ளலாம். அதே­வேளை கடந்த 100 ஆண்­டு­களில் அண்­ண­ள­வான ஒரு நெருக்கம் சனத்­தொகை வளர்ச்சி வீதத்தில் உள்­ள­தையும் அவ­தா­னிக்­கலாம். இந்த அட்­ட­வ­ணையை நோக்­கும்­போது இந்­தியத் தமி­ழர்கள் மாத்­திரம் 1970களில் 4.3 வீத சனத்­தொகை வளர்ச்சி வீதத்தைப் பதிவு செய்­துள்­ளமை தெளி­வாகும். சிங்­க­ள­வர்கள், முஸ்­லிம்கள், இலங்கைத் தமி­ழர்கள் வளர்ச்சி வீதம் 2.5 வீதத்தைத் தாண்­ட­வில்லை என்­பது தெட்டத் தெளி­வா­னது. சிங்­க­ள­வர்­களின் வளர்ச்சி வீதத்தை ஏனைய இனங்­களின் சனத்­தொகை வளர்ச்சி வீதத்­துடன் ஒப்­பிட்­டுப்­பார்த்தால் இது புல­னாகும்.

இதே­வேளை இந்­நாட்டின் ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒப்­பிட்டுப் பார்க்­கையில் சிங்­கள சமூ­கத்தின் சனத்­தொகை விகி­தா­சாரம் அதி­க­ரித்­துக்­கொண்டே வந்­துள்­ளதை தெளி­வாக அவ­தா­னிக்­கலாம். அவ்­வி­கி­தா­சா­ரத்தை ஏனைய எந்த இனத்­தாலும் தோற்­க­டிக்க முடி­யா­த­ளவு அவர்­களின் விகி­தா­சாரம் உயர்ந்­துள்­ள­தையும் இல­குவில் புரிந்து கொள்­ளலாம். (கீழே உள்ள அட்­ட­வ­ணையைப் பார்க்க (அட்டவணை 02).

இந்த அட்­ட­வ­ணை­யின்­படி சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை விகி­தா­சாரம் உயர்ந்து கொண்டே சென்­றுள்­ளதை அவ­தா­னிக்­கலாம். இன்று நாட்டின் சனத்­தொ­கையில் 75 சத­வீ­த­மானோர் சிங்­க­ள­வர்­களே. 1921ஆம் ஆண்டு 66 சத­வீ­த­மாக இருந்த சிங்­கள பௌத்­தர்கள் 2011இல் 75 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளனர். 80 ஆண்­டு­கால இடை­வெ­ளியில் 9 வீதத்தால் சிங்­க­ள­வர்கள் அதி­க­ரித்­துள்­ளனர். அதே­வேளை 1920களில் 34 வீத­மாக இருந்த சிறு­பான்மை மக்கள் 80 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் 25 வீத­மாகக் குறைந்­துள்­ளனர். அதா­வது 8 தசாப்த கால இடை­வெ­ளியில் சிறு­பான்­மை­யினர் 09 வீதத்தால் குறைந்­துள்­ளனர். 2011ஆம் ஆண்டின் அதி­கா­ர­பூர்வ தொகை­ம­திப்­பீட்­டின்­படி முஸ்­லிம்கள் சனத்­தொகை வளர்ச்சி வீதம் 1.7ஆக உள்­ளது. சிங்­க­ள­வர்­களின் வளர்ச்சி வீதம் 0.9 ஆக உள்­ளது.

இவ்­வட்­ட­வ­ணை­யின்­படி முஸ்லிம் சனத்­தொகை வளர்ச்சி வீதம் சிங்­க­ள­வர்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் விட சற்று அதி­க­மாக உள்­ளதை அவ­தா­னிக்­கலாம். வர­லாற்று ரீதியில் முஸ்லிம் சனத்­தொகை வளர்ச்சி வீதத்தை நோக்­கினால் எல்லா ஆண்­டு­க­ளிலும் அது சமச்­சீ­ரா­ன­தா­கவும் ஒரு படித்­தா­ன­தா­கவும் இல்லை என்­பதை அவ­தா­னிக்­கலாம். இந்தப் பொது உண்மை எல்லா சமூ­கங்­க­ளுக்கும் பொருந்தும். 1951இல் முஸ்­லிம்­களின் சனத்­தொகை வளர்ச்சி வீதம் 2.5 வீத­மாக இருந்­தது. அதே ஆண்டில் சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை வளர்ச்சி வீதம் 2.5 ஆக இருந்­தது. தமி­ழர்கள் 2.4வீத வளர்ச்­சியை பதிவு செய்­துள்­ளனர்.
எவ்­வா­றா­யினும் ஒவ்­வொரு பத்­தாண்­டிலும் ஏனைய இனங்­க­ளோடு ஒப்­பி­டும்­போது முஸ்லிம் சனத்­தொகை கூடுதல் வளர்ச்சி வேகத்தைக் கொண்­டுள்­ளமை ஒரு பொது­வான அவ­தா­ன­மாகும். ஏனைய இரு இனங்­க­ளையும் விட முஸ்லிம் சனத்­தொகை சற்று அதி­க­ரித்துச் சென்­றுள்­ளது. அதிலும் சம­கா­லத்தை விட கடந்த தசாப்­தங்­களில் முஸ்­லிம்­களின் வளர்ச்­சி­வேகம் கூடு­த­லாக இருந்­துள்­ளது. ஆனால் இது சிங்­க­ள­வர்­களின் சனத்­தொ­கையை மிகைக்கும் அள­வுக்கு உயர்ந்து செல்­ல­வில்லை. அதா­வது, சிங்­க­ள­வர்­களின் சனத்­தொ­கையை விட முஸ்­லிம்­களின் சனத்­தொகை எண்­ணிக்­கையில் அதி­க­ரிக்­க­வில்லை. வளர்ச்சி விகி­தா­சா­ரத்­தி­லேயே அதி­க­ரிப்பு நிகழ்ந்­துள்­ளது. அதன்­மூலம் பெரும்­பான்மைச் சிங்­க­ள­வர்கள் சிறு­பான்­மை­யாக மாறு­வார்கள் என்­ப­தற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

அதே­போன்று சிங்­கள இனத்­த­வர்கள் அழிந்து போய்­வி­டவும் இல்லை. அப்படி­யானால் இன்று ஒப்­பீட்டு ரீதியில் கடந்த காலத்தை விடவும் குறைந்த வளர்ச்சி வேகத்தைப் பேணி­வரும் சிங்­கள இனத்­த­வர்கள் ஏன் அழிந்து போகும் இனம் என பிர­சாரம் செய்­யப்­ப­டு­கின்­றது? ஓர் அச்சம் கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றது? இனத் தேசி­ய­வா­தி­களை நோக்­கிய இந்த கேள்வி தவிர்க்­க­வி­ய­லா­தது என்­கிறார் ஷானக வத்­தே­கம எனும் ஆய்­வாளர். ஏனெனில் சிங்­க­ள­வர்கள் ஏனைய இனங்­க­ளுக்கு ஒப்­பா­கவும் சமாந்­த­ர­மா­கவும் வளர்ச்சி கண்டு வரு­கின்­றனர் என்­பதை நாம் தெளி­வாக நிரூ­பிக்க முடியும் என்­ப­துதான் அவ­ரது வாதம்.

1917ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளை வருடங்களின் அடிப்படையில் நோக்கி, சிங்கள சனத்தொகையை ஒரு குவியலாக்கி ஏனைய அனைத்து இனங்களினதும் சனத்தொகையை மற்றொரு குவியலாக்க முற்பட்டால் இந்த உண்மையை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதன் மூலம் சிங்களவர்கள் ஏனைய இனங்களுக்கு சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வருகின்றனர் என்பதை எளிதில் நிரூபிக்கலாம். (அட்டவணை – 03 ஐப் பார்க்க)
கடந்த 30 ஆண்டு கால இடைவெளியில் முஸ்லிம்களது சனத்தொகை 822, 920 ஆல் அதிகரித்துள்ளது. அதே காலப்பகுதியில் சிங்களவர்களின் சனத்தொகை முஸ்லிம் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் 8 மடங்கால் அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம்.

கிட்டத்தட்ட 4200000ஆல் அதிகரித்துள்ள சிங்கள சமூகத்தை வெறும் 800,000 ஆல் அதிகரித்துள்ள முஸ்லிம் சனத்தொகை தோற்கடித்து பெரும்பான்மையைச் சிறுபான்மையாக்கி விடும் என வாதிப்பது அறிவுபூர்வமானதா?

vidivelli

Leave A Reply

Your email address will not be published.