கோத்­தா­பய அதி­கா­ரத்­துக்கு வந்தால் இரா­ணுவ ஆட்­சியே

தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டும் என்கிறார் அஜித் பி. பெரேரா

0 606

கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால் ஜன­நா­யகம் மற்றும் அர­சியல் கட்­சி­களை கட்­டுப்­ப­டுத்தி இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்தும் அபா­ய­மி­ருக்­கின்­றது. இதனை தோற்­க­டிக்க ஜன­நா­யத்தை விரும்பும் அனை­வரும் ஓர் அணி­யாகத் திர­ள­வேண்­டு­மென அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­முன கட்­சியில் தகு­தி­யான வேட்­பாளர் இருந்தும் விமர்­ச­னத்­துக்­குள்­ளாகி இருக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்­ளமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.
இது­தொ­டர்பில் அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அரச நிநியை துஷ்­பி­ர­யோகம் செய்­தா­ரெனத் தெரி­வித்து கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் பல வழக்­குகள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவ்­வாறு இருக்­கும்­போது கோத்தா நிர­ப­ராதி என தெரி­வித்து சில ஊட­கங்கள் தெளி­வற்ற முறையில் செய்­தி­களை பிர­சு­ரித்து வரு­கின்­றன.

அத்­துடன் மேல் நீதி­மன்றில் பல மோசடிக் குற்­றப்­பத்­தி­ரங்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்கும் நபரே இம்­முறை பொது­ஜன பெர­முன கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டப்­பட்­டி­ருக்­கின்றார். இவ்­வா­றான நப­ருக்கு முழு நாட்­டையும் பாரம் கொடுப்­பது எந்­த­ள­வுக்குப் பொருத்தம் என்­பது குறித்து அனை­வரும் சிந்­தித்துப் பார்க்­க­ வேண்டும். பொது­ஜன பெர­முன கட்­சியில் திற­மை­யான ஆளுமை மிக்­க­வர்கள் இருக்­கின்­றனர். அவ்­வாறு இருந்தும் மிகவும் மோச­மான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் வர­லாறு இருக்கும் நப­ரையே இவர்கள் தெரி­வு­ செய்­தி­ருக்­கின்­றனர். இது குறித்து நாட்டு மக்கள் சிந்­தித்­துப்­பார்க்­க­வேண்டும்.

மேலும் கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை ரத்­துச்­செய்ய கோரி இருக்­கின்றார். என்­றாலும் அவரின் மனைவி, பிள்ளை அமெ­ரிக்க பிரஜா உரி­மையை ரத்­துச்­செய்ய கோரவில்லை. அவரின் சொத்­துக்கள் இருப்­பதும் அமெ­ரிக்­கா­வி­லாகும். அத்­துடன் கோத்தா அமெ­ரிக்க பிரஜா உரி­மையை ரத்­துச்­செய்­து­கொண்­டுள்ளார் என நாங்கள் நினைத்­தாலும், அமெ­ரிக்க சட்­டத்தின் பிர­காரம், அமெ­ரிக்க பிரஜா உரி­மையை நீக்­கிக்­கொண்ட ஒருவர் குறிப்­பிட்ட வரு­டங்­கள்­வரை அமெ­ரிக்­கா­வுக்கு பொறுப்­பா­ன­வ­ராவார்.

அமெ­ரிக்க மற்றும் இலங்­கைக்­கி­டையில் இடம்­பெறும் தொடர்­புகள் குறித்து பாரிய பிரச்­சினை தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கப் பிர­ஜை­யாக இருக்­கும்­போதே அவர் சோபா உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்டார். எதிர்­கா­லத்தில் அவர் அதி­கா­ரத்­துக்கு வந்தால், அவ­ருக்கு அமெ­ரிக்­கா­வுடன் இருக்கும் தொடர்­புகள் மற்றும் நெருக்கம் ஊடாக நாட்டின் இறை­யாண்மை மற்றும் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம். இது மிகவும் மோச­மான நிலை­மை­யாகும். மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விட­யங்கள் தொடர்பில் தெரிந்­தி­ருந்தால் அவர் இந்த தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்க மாட்டார் என்றே நினைக்­கின்றேன்.

அத்­துடன் கோத்­தா­பய ராஜபக் ஷவை சுற்றி ஓய்­வு­பெற்ற இரா­ணு­வத்­தி­னரே தற்­போது இருக்­கின்­றனர். அவர் அதி­கா­ரத்­துக்கு வந்தால் பிர­தான துறைகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினரையே நியமிப்பார். இதன்மூலம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் கட்சிகளை முற்றாக அடக்கி இராணுவ முறையில் நாட்டை நிர்வகிக்கவே நடவடிக்கை எடுப்பார். அதனால் அந்த நிலை ஏற்படுவதை தடுப்பதற்கு ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஒரு அணியாக செற்படவேண்டும் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.