ஜ.மி.இப்ராஹிம் அமைப்பின் 11 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்

0 1,200

உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்­களின் பின்னர் தடை செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புடன் இணைந்து செயற்­பட்ட ஜமா­அத்தே மில்லதே இப்­ராஹிம் அமைப்பின் உறுப்­பி­னர்கள் 11 பேர் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.

அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலே அம்­பாறை பகு­தியில் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரால் தடுத்து வைக்கப்­பட்­டி­ருந்த சந்­தேக நபர்கள் 11 பேரும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்று முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் இடம்­பெற்று வரு­கின்ற விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்ட இந்த சந்­தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்பு காவலில் விசா­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

மொஹமட் மன்சூர் சைபுல்­லாஹ், மொஹமட் ரியால் மொஹமட் சாஜித், முஸ்தாக் அலி அம்ஹர், மொஹமட் தாஹிர் ஹிதா­ய­துல்லா, மொஹமட் ரம்சின் ருப்தி அஹமட், மொஹிதீன் பாவா மொஹமட் ரூமி, அப்துல் ஹலீம் மொஹமட் ஹிமாஸ், மொஹமட் காசிம் மொஹமட் அகீல், ஹிஸ்­புல்­லாஹ பாஸ் ஹுஸ்னி அஹமட், மொஹமட் சாஹிர் மொஹமட் அஹ்சன் மற்றும் மொஹமட் அவுனாக் அனீஸ் மொஹமட் ஆகிய சந்­தேக நபர்­களே இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசிமின் பயிற்சி முகாம்­களில் கலந்து கொண்­டுள்­ள­தா­கவும், அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்­த­தா­கவும் கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிவானின் அனுமதியுடன் பொலிஸாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.