முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்

0 1,418

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான்.

தலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின் விருத்­திக்கு கார­ண­மாக அமை­கி­றது. சமூக மட்­டத்­தி­லுள்ள துறை­க­ளுக்கு துறை­சார்ந்த தலை­வர்கள் தலை­மைத்­துவம் வழங்­கி­னாலும், அச்­ச­மூ­கத்தின் சார்பில் அர­சியல் துறையில் தலை­மைத்­துவம் வழங்கும் தலை­வர்­களின் செயற்­பா­டு­களும், தீர்­மா­னங்­களும் அச்­ச­மூ­கத்­திற்கு நன்­மை­ய­ளிக்கக் கூடி­ய­தா­கவும், சமூ­கத்தின் வாழ்­வு­ரி­மை­யையும், பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தாக அமை­வது அவ­சியம்.

ஆனால், முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் வடக்கு கிழக்கு முஸ்லிம் அர­சி­யலை நோக்­கு­கின்­ற­போது, மர்ஹூம் அஷ்­ரபின் அர­சியல் யுகத்­திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு தனித்­து­வத்­துடன் தலைமை வகிக்கும் தலைமை உரு­வா­க­வில்லை என்­பது நிதர்­ச­ன­மாகும்.

இருப்­பினும், சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட மற்றும் பிற்­பட்ட காலங்­களில் உரு­வான சில சூழ்­நிலைத் தாக்­கங்­கங்களின் விளை­வு­களால் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அமைப்­புக்கள் மற்றும் அர­சியல் கட்­சிகள் உத­ய­மா­கி­யி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய் அர­சியல் யூனியன் உரு­வாக்­கப்­பட்­டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்­லா­மிய முற்­போக்கு முன்­னணி ஆரம்­பிக்­கப்­பட்­டது. முஸ்லிம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி 1964இல் தோற்றம் பெற்­றது. அவ்­வாறு அஸீஸ் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ், ஐக்­கிய முஸ்லிம் மக்கள் முன்­னணி போன்ற கட்­சி­களும் உரு­வா­கின. இக்­கட்­சி­க­ளுக்­கான தலை­மை­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டன.

ஆனால், இக்­கட்­சி­க­ளி­னாலும். தலை­மை­க­ளி­னாலும் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு முழு­மை­யான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. தீர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக கூட்­டாக இணைந்து செயற்­ப­டவும் முடி­ய­வில்லை. இதனால், முஸ்லிம் அர­சியல் பல­வீ­ன­ம­டைந்­தது. முஸ்­லிம்­களின் வாக்­குப்­பலம் சித­ற­டிக்­கப்­பட்­டது. அது­மாத்­தி­ர­மின்றி, கால­வோட்­டத்தில் இக்­கட்­சிகள் மக்கள் செல்­வாக்கை இழந்­தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை முஸ்­லிம்­களை ஒன்­றி­ணைக்கும் பல­மிக்­க­தொரு அர­சியல் கட்சி உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான முயற்­சி­களும் ஆரோக்­கி­ய­மாக, இத­ய­சுத்­தி­யோடு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை இக்­கட்­சி­களின் செல்­வாக்­கி­ழப்­பையும் அதனால் ஏற்­பட்ட அர­சியல் பல­வீ­னத்­தையும் முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­நி­லை­யில்தான், 1982ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் உத­ய­மா­னது. முஸ்லிம் காங்­கி­ரஸின் உதயம் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் அர­சியல் வர­லாற்றுத் திருப்­பத்­திற்கும், 17 வருட ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி மாற்றப் புரட்­சிக்கும் வித்­திட்ட ஆளுமை, மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்­பதை மறக்க முடி­யாது. அத­னால்தான் இன்­று­வரை இந்­நாட்­டி­லுள்ள முஸ்­லிம்கள் அதிலும் வடக்கு கிழக்கு முஸ்­லி­ம்கள் அதிகம் அவரை நினைவு கூரு­ப­வர்­க­ளாக உள்­ளனர்.

அஷ்­ரபும் நினை­வு­களும்

உலகில் ஆயி­ர­மா­யிரம் மனி­தர்கள் பிறக்­கின்­றனர். அவ்­வாறு பிறக்­கின்ற எல்­லோ­ரையும் மக்கள் ஞாப­க­மூட்டிக் கொண்­டி­ருப்­ப­தில்லை. மக்­க­ளோடு ஜன­ரஞ்­ச­க­மாக வாழ்ந்து, வாழ் நாட்­களை மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணித்து, அம்­மக்­களின் மனங்­களைக் கொள்ளை கொண்ட ஒரு­சி­லரே மக்­களால் மறக்­கப்­ப­டாது தொடர்ந்தும் ஞாப­க­மூட்­டப்­ப­டு­கி­றார்கள். அவர்கள் வாழ்ந்து மறைந்­தாலும், அவர்கள் சார்ந்த சமூ­கமும் தேசமும் ஏதோ­வொரு வகையில் காலா­காலம் அவர்­களை ஞாப­கப்­ப­டுத்திக் கொண்­டேதான் இருக்­கின்­றன.

அவர்கள் சாதித்த சாத­னை­களை, மக்­க­ளுக்­காக அவர்கள் செய்த தியா­கங்­களை, மக்­களின் உரி­மை­க­ளுக்­காக புரிந்த போராட்­டங்­களை, அவர்­களின் பன்­முக ஆளு­மை­களின் அடை­யா­ளங்­களை என அவர்கள் சார்ந்த பல நினை­வு­களை மக்கள் காலத்­திற்குக் காலம் சந்­தர்ப்­பத்­திற்கு சந்­தர்ப்பம் நினை­வு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வ­ரி­சையில் கிழக்கின் அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறை மண்ணில் 1948ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 23ஆம் திகதி பிறந்த அஷ்ரப், கல்­முனை மண்ணில் வளர்ந்து, கம்­பஹா மண்ணில் வாழ்க்கைத் துணை­யோடு இணைந்து, 2000ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16ஆம் திகதி சமூ­கத்தின் பல கன­வு­க­ளோடு விண்ணில் பறக்­கையில் அர­நா­யக்க வான் பரப்பில் அகால மர­ணத்தை தனது 51 ஆவது அக­வையில் தழுவிக் கொண்டார்.

முஸ்லிம் அர­சி­யலில் மாத்­தி­ர­மன்றி தேசிய அர­சி­ய­லிலும் ஆளு­மையின் அடை­யா­ள­மாக விளங்­கிய மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்து எதிர்­வரும் 16ஆம் திக­தி­யுடன் 19 வரு­டங்­க­ளாகி விட்­டன. மர­ணத்தை எதிர்­பார்த்தே தனது அர­சியல் நகர்­வு­களை நகர்த்திச் சென்ற அஷ்ரப், அதைத் தனது ‘போரா­ளி­களே புறப்­ப­டுங்கள்’ என்ற கவிதை வரி­களால் உறு­திப்­ப­டுத்­தி­யவர். அவர் மண்­ணை­விட்டு மறைந்து 19 வரு­டங்­க­ளா­கியும், அஷ்­ரபின் தலை­மைத்­துவ ஆளு­மை­யையும், பண்­பு­க­ளையும், அவரால் இச்­ச­மூகம் அடைந்த பயன்­க­ளையும் இன்­னுமே அவரை நேசிக்­கின்ற மக்­களால் மறக்க முடி­யா­துள்­ளது.
தூர­நோக்­கோடு ஒன்றை உரு­வாக்கி அதை அடை­வ­தற்­கான செயல் நுணுக்­கத்தை விருத்தி செய்து, ஏனை­ய­வர்­களின் ஆத­ரவைத் திரட்டி, தூர­நோக்கை அடைந்து கொள்­வ­தற்­கான செயற்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்தி. அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் என்ற அர­சியல் கட்­சியை 1982 ஆம் ஆண்டு உரு­வாக்கி அதனை 1986ஆம் ஆண்டு அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்தார் அஷ்ரப்.

இந்தக் கட்­சியை 14 வரு­டங்கள் வழி­ந­டத்­தி­யதன் மூலம் அவ­ரது 14 வருட அர­சியல் பய­ணத்தில் அவரின் செயற்­றி­றன்­மிக்க தலை­மைத்­துவ ஆளு­மை­யினால் சாதித்­தவை ஏராளம். அவர் முன்­னெ­டுத்த செயற்­பா­டு­களை வெற்­றி­பெறச் செய்­தது, அவ­ரிடம் காணப்­பட்ட செயற்­றி­றன்­மிக்க பன்­முக ஆளுமை கொண்ட தலை­மைத்­துவ பண்­பு­க­ளாகும்.

ஒரு செயற்­றி­றன்­மிக்க தலைவர் எதிர்­காலம் பற்­றிய தூர இலக்கை உரு­வாக்­குவார். அத்­தூர இலக்கை நோக்கி இயங்­கு­வ­தற்­கான அறி­வு­பூர்­வ­மான செயல் உபா­யங்­களை விருத்தி செய்வார். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மா­கின்ற ஆத­ர­வையும் இணக்­கத்­தையும் குழு முயற்­சியை வழங்­கக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான அங்­கத்­தி­னர்­களின் ஒத்­து­ழைப்­பையும் திரட்­டுவார். அவற்­றுடன் செயல் உபா­யங்­களை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் பங்­கு­கொண்டு தொழிற்­ப­டக்­கூ­டிய நபர்­களை நல்ல முறையில் ஊக்­கப்­ப­டுத்­துவார்.

இவ்­வா­றான பண்­புகள் பல­வற்றை மறைந்த அஷ்ரப் கொண்­டி­ருந்­ததனால் அவ­ரையும், கட்­சி­யையும் ஏற்று நாளுக்கு நாள் அபி­மா­னிகள் அவர் பக்கம் திரண்­டனர். ஆனால், இத்­த­கைய தலை­மைத்­துவப் பண்­புகள் தற்­போதைய முஸ்லிம் தலை­மை­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றதா? என்ற கேள்­வியும் உள்­ளது.
அன்­னாரின் தலை­மைத்­துவ ஆளு­மைக்­கான வர­லாற்று சான்­று­க­ளாக நிழற்­ப­டங்­களும் காணொ­லி­களும் இப்­போதும் சாட்­சி­க­ளா­கவும் காட்­சி­க­ளா­கவும் இருந்தும், அவற்றை கட்­சி­களை வழி­ந­டத்­து­வ­தற்குப் பயன்­ப­டுத்­தாமல் அவை முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளினால் காலத்­திற்குக் காலம் நடை­பெறும் தேர்தல் காலங்­களில் மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கான மூல­த­ன­மாகப் பாவிக்­கப்­பட்டு அர­சியல் வியா­பாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என மக்கள் கூறு­வ­தையும் ஏற்றுக் கொண்­டு­தா­னாக வேண்டும்.

ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மேற்­கொள்ள வேண்­டிய விட­யங்­களை நிர்­ண­யித்து, ஒழுங்­கு­ப­டுத்தி, அவற்றை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றத் தேவை­யான திட்­டங்­களை வகுத்து, இத்­திட்­டங்­களை செய­லு­ருப்­ப­டுத்த தம்­மோடு இணைந்­தி­ருக்கும் பல­ரையும் ஆர்­வத்­தோடு பங்­கு­கொள்ளச் செய்­வ­தற்கும், குறித்த திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­தும்­போது ஏற்­ப­டக்­கூ­டிய முரண்­பா­டுகள், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெறக் கூடி­ய­வ­ரா­கவும் தலைவர் அல்­லது தலை­மைத்­துவம் இருக்க வேண்டும். இத்­த­கைய தலை­மைத்­து­வத்­துக்­கான அடிப்­படைத் தகை­மையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்­டி­ருந்தார். அத­னால்தான் இன்­று­வரை அவரின் தலை­மைத்­துவ வழி­காட்­டல்­க­ளையும் அவரால் சமூகம் அடைந்த நன்­மை­க­ளையும் அவரை நேசிக்கும் மக்­க­ளினால் மறக்க முடி­யாமல் இருக்­கி­றது.

வற்­பு­றுத்தல், வலுக்­கட்­டா­ய­மில்­லாத வழி­க­ளி­னூ­டக மக்­களை செயற்­பட ஊக்­கு­விப்­பதன் மூலம் ஒரு திட்­ட­மிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்­முறை கொண்ட தலை­மைத்­து­வத்­தினால் நீண்­ட­கால, குறு­கி­ய­கால நோக்­கங்­களை அடைய முடியும். அதன் அடிப்­ப­டையில் பல குறு­கிய கால செயற்­றிட்­டங்­களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்­ட­கால செயற்­றிட்­டங்கள் பல­வற்­றையும் வகுத்து செயற்­பட்டார். அதில் ஒன்­றுதான் 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்­ப­டையில் தேசிய ஐக்­கிய முன்­னணி என்ற அர­சியல் கட்­சியை புறாச் சின்­னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்­க­ளையும் இணையச் செய்­த­தாகும்.
தலை­வர்கள், உண்­மைத்­தன்மை, நம்­ப­கத்­தன்மை, தூர­நோக்கு சிந்­தனை, தொடர்­பாடல் திறன், ஏனை­ய­வர்­க­ளுடன் சுமு­க­மான உறவு, செல்­வாக்கு செலுத்தும் தன்மை, நெகிழ்­வுத்­தன்மை, தீர்­மா­னிக்கும் ஆற்றல், திட்­ட­மிடல். கலந்­து­ரை­யாடல் போன்ற பண்­பு­டை­யவர்க­ளாக இருத்தல் அவ­சி­யம். அவ்­வா­றான தலை­மைத்­துவ குணா­தி­ச­யங்கள் பல அஷ்­ர­பிடம் காணப்­பட்­ட­த­னாலும் அவற்­றினால் அவர் மக்கள் மத்­தியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் தலை­வ­ராகத் திகழ்ந்­த­த­னாலும் அவர் மறைந்து 19 வரு­டங்­க­ளா­கி­யும்­கூட அவரை அபி­மா­னி­களால் மறக்க முடி­யா­துள்­ளது.

தலை­வர்­களும் மக்­களும்

தலை­வர்கள் உரு­வா­கு­வ­தில்லை உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்று ஒரு சாராரும் தலை­வர்கள் காலத்­திற்குக் காலம் பிறக்­கி­றார்கள் என்று மற்­று­மொரு சாராரும் கருத்­தியல் முரண்­பாட்டில் அன்று முதல் இன்று வரை உள்ள நிலையில், தலை­வர்கள் உரு­வா­னாலோ அல்­லது உரு­வாக்­கப்­பட்­டாலோ அவர்கள் மக்கள் விரும்பும் மக்­க­ளுக்­காக செயற்­படும் தலை­வர்­க­ளாக மிளிர்­வது காலத்தின் தேவை­யாகும். மக்­களின் விருப்­பமும் அது­வா­கத்தான் இருக்­கி­றது.

“ஒரு கட்­சியின் உரு­வாக்கம் ஒரு தனி மனி­த­னா­லேயே முதன் முதலில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பது உண்­மைதான். ஆனால் அவ்­வா­றான ஒரு கட்சி ஒரு தனி மனி­த­னல்ல.

ஒரே நோக்­குள்ள பல மனி­தர்கள் ஒரே சிந்­த­னை­யு­டைய­வர்­க­ளாக ஒரு­மித்து ஊக்­கத்­தோடும், விடா­மு­யற்­சி­யோடும், தியா­கத்­தோடும் உழைக்­கும்­போ­துதான் அந்தக் கட்சி பல கிளை­விட்டு படர்ந்து செல்­கி­றது. நல்­லெண்­ணமும், தீர்க்­க­த­ரி­ச­னமும், சரி­யான செயற்­பாடும் இடை­ய­றாத இயக்­கமும், கால­தேச வர்த்­த­மா­னங்­களை அனு­ச­ரித்த போக்கும், இலட்­சி­யங்­களை அடை­வ­தற்­கான உறு­தியும், இன்­னல்­க­ளையும் இடை­யூ­று­க­ளையும் தோல்­வி­க­ளையும் கண்டு சலிப்­பு­றாத மனமும், அங்­கத்­த­வர்­க­ளி­டையே பொது நோக்­கங்­களின் பேரில் ஒற்­று­மையும். கூட்டு முயற்­சியும், எதி­ரி­க­ளி­னதும் சதி­கா­ரர்­க­ளி­னதும் தந்­தி­ரோ­பா­யங்­களை, அடை­யாளம் காணும் சாமர்த்­தி­யமும், சூழ்ச்­சி­களை சுமு­க­மாக முறி­ய­டித்து முன்­னேறும் சாணக்­கி­யமும். எடுத்த கருத்தை முடித்து வைக்கும் ஆத்ம பலமும், இறை நம்­பிக்­கையும், முன்­னோ­டி­க­ளான நல்­ல­டி­யார்­களின் மீது நேசமும் பற்றும் இருக்­கு­மானால் நமது கட்சி (முஸ்லிம் காங்­கிரஸ்) நிச்­ச­ய­மாகத் தனது பாதை­யிலும் பய­ணத்­திலும் பரி­பூ­ரண வெற்­றியை அடையும் என்­பதை நான் உங்­க­ளுக்கு வலி­யு­றுத்த விரும்­பு­கிறேன்” என இற்­றைக்கு 30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸின் 6ஆவது மகா­நாட்டில் உரை­யாற்­றும்­போது மறைந்த தலைவர் அஷ்ரப் குறிப்­பிட்­ட­தாக அவரின் நினைவுப் பகிர்­வு­களின் மூலம் அறிய முடி­கி­றது.

ஒரு கட்­சியின் வெற்­றிக்கு எத்­த­கைய செயற்­பா­டுகள், பண்­புகள் அவ­சியம் என்­பதை மறைந்த தலைவர் 30 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே கூறிச் சென்­றுள்ளார். ஆனால், அவர் கூறிய விட­யங்­களில் எவை முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னாலும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்ற கட்­சி­க­ளி­னாலும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­ன்றன? என்று அவ­ரது அபி­மா­னிகள் எழுப்பும் கேள்­வி­களில் நியா­ய­மில்­லா­ம­லில்லை.

ஒரு தூர­நோக்கை இலக்­காகக் கொண்­டுதான் மறைந்த அஷ்­ர­பினால் முஸ்­லிம்­க­ளுக்­கான கட்சி உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் இந்த இலக்கு நோக்­கிய பயணம் அவ­ரது மர­ணத்­துடன் திசை­மாற்­றப்­பட்­டுள்­ளது. அவரின் யுகம் சிதைக்­கப்­பட்டு சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. போலி வாக்­கு­று­தி­க­ளி­னாலும், ஏகா­தி­பத்­திய தலை­மைத்­துவப் பண்­பு­க­ளி­னாலும் அவர் வித்­திட்ட அர­சியல் புரட்சி மீண்டும் ‘பழைய குருடி கத­வைத்­தி­றடி’ என்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­ற­தென இக்கட்சியை உருவாக்கிய கிழக்கு மக்கள் இந்நாட்களில் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை நிராகரிக்க முடியாது.

அஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியிலான இலக்கை அடையாது அல்லது அடைய மறந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் அந்தப் பெரும் தலைவர் மறைந்த இந்த செப்டம்பர் 16லிருந்தாவது அவர் சிந்தனையில் மலர்ந்திருந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும், எதிர்­பார்ப்­புக்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும், வாழ்­வு­ரி­மை­யையும், வாழ்­வா­தா­ரத்­தையும், கேள்­விக்­கு­றி­யாக்­கப்­படும் எதிர்கால முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களையும் பாதுகாப்பதற்கும், இனவாத மற்றும் மதவாத நெருக்கடிகளிலிருந்து நிம்மதியாக வாழ்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கவும் அதற்காக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தைத் திரட்டவும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.

அத்துடன், எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிகளின் வாக்குகளை சிதறடித்து பலவீனப்படுத்தாமல் இருமுறை இந்நாட்டின் அரசியல் தலைவர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை பலமாக பயன்படுத்திய முஸ்லிம்களின் அரசியல் பலமிக்க ஆளுமையாக அடையாளப்படுத்தப்பட்ட அஷ்ரப், முஸ்லிம்கள் தொடர்பிலும் இந்நாடு தொடர்பிலும் கொண்டிருந்த கனவுகளை நிஜமாக்கவும், அபிலாஷைகளை அடைந்து கொள்ளவும் அக்கறைகொண்டு செயற்படுவது அப்பெரும் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும் என்பதுடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் அச்சமின்றி வாழவும் வழிவகுக்கும் என்பது திண்ணம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.