போலி உம்ரா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

0 626

குறைந்த கட்­ட­ணத்தில் உம்­ரா­வுக்கு அழைத்துச் செல்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து மக்­க­ளி­ட­மி­ருந்து போலி உம்ரா உப முக­வர்கள் பணம் வசூ­லித்து வரு­வ­தா­கவும் அதனால் பொது மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறும் அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

பொது மக்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­க­ளி­னூ­டா­கவே தங்­க­ளது பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளார்கள். அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­களின் விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தைத் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.

போலி முக­வர்­க­ளிடம் உம்ரா பய­ணத்­துக்­காக முற்­பணம் வழங்கி ஏமாற்­றப்­படும் பய­ணிகள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது என்­பதால், பய­ணிகள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முகவர் நிலை­யங்­க­ளூ­டா­கவே தங்கள் பய­ணங்­களை ஏற்­பாடு செய்­யும்­படி அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இதே­வேளை, 5 வரு­ட­கால எல்­லைக்குள் ஒன்­றுக்கு மேற்­பட்ட ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்களிடம் சவூதி அரசு அறவிட்டு வந்த 2000 ரியால் கட்டணம் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.