முஸ்லிம்களைத் தாக்கியவர்கள் வெட்கமின்றி அவர்களிடம் வாக்குக் கேட்கின்றனர்

புத்தளத்தில் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச

0 678

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மதஸ்த­லங்­க­ளையும், அவர்­க­ளது சொத்­துக்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் வந்து வெட்­க­மற்ற முறையில் வாக்­கு­கேட்க முனை­வ­தாக தெரி­வித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதி தலை­வரும், வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச, ஒரு­போதும் உண்­மை­யான முஸ்­லிம்கள் இதனை அங்­கீ­க­ரிக்­க­மாட்­டார்கள் என்றும் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் பயங்­க­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட கத்­தோ­லிக்க மத­வ­ழி­பாட்டுத் த­லங்­களின் மீதான தாக்­குதல் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து முஸ்லிம் பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­க­ளினால் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களை புன­ர­மைப்பு செய்­வ­தற்­காக வேண்டி காசோ­லைகள் வழங்கும் நிகழ்வு புத்­தளம் மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் (பெரிய பள்ளி) பள்­ளி­வாசல் தலைவர் பீ.எம்.ஏ.ஜனாப் தலை­மையில் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­ற­போது இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், பிரதி அமைச்சர் திலிப் வெத­ஆ­ராச்சி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எ.எச்.எம்.பௌசி, பாலித ரங்க பண்­டார, ஹெக்டர் அப்­பு­ஹாமி, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். நவவி, டாக்டர் இல்யாஸ், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்­பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் புத்­தளம் மாவட்ட அமைப்­பாளர் அலி சப்ரி ரஹீம், ஐக்­கிய தேசிய கட்சி கற்­பிட்டி அமைப்­பாளர் எம்.என்.எம்.நஸ்மி, புத்­தளம் மாவட்ட செய­லாளர் என்.எச்.சித்­ரா­னந்த உட்­பட பலரும் கலந்து கொண்­டனர்.

இங்கு உரை­யாற்­றிய அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மேலும் கூறு­கையில், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து இந்­நாட்டில் இன­ ரீ­தி­யி­லான மோதல்­களை தோற்­று­விக்கும் வகையில் செயற்­பட்ட இன­வா­திகள் அவர்கள் எதிர்­பார்த்த இலக்கை அடைந்து கொள்ள முடி­யாது போனது. நாட்­டையும், மக்­க­ளையும் நேசிக்கும் பெரும்­பா­லான சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாடு தீப்­பற்றி எரியும் நிலை­யினை ஏற்­ப­டுத்­த­வி­டாமல் தடுத்­ததை நினை­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

குறிப்­பாக, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது பிரிவில் புத்­த­ம­தத்­துக்கு முத­லிடம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் இதனை பாது­காப்­பதும் எமது அனை­வ­ரி­னதும் பொறுப்­பாகும். அது மட்­டு­மல்ல, 14 ஆவது பிரிவில் அதே­போன்று ஏனைய மதங்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள பாது­காப்­பி­னையும், உரி­மை­யி­னையும் வழங்க வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யான நிலைப்­பாட்­டுடன் இருக்­கின்றேன்.

புத்­த­பிரான் போதித்த தர்­மத்­துக்கு அமை­வாக சக­லரும் சம­மாக வாழ வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை நாம் எம்மில் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

சத்­தி­யத்தை புரிந்­து­கொள்ளும் காலம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. யதார்த்­தத்தை புரிந்து அனை­வரும் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.
மத ரீதி­யா­னதும், இன­ரீ­தி­யா­ன­து­மான அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எமது நாட்டில் இனி இடம் கொடுக்க முடி­யாது.

நாட்டில் ஏதா­வது வடிவில் மதங்­க­ளுக்­குள்ளும், நாட்­டுக்­குள்ளும் அடிப்­ப­டை­வாதம் எங்­கா­வது காணப்­படும் என்றால் அதனை ஒழித்­தே­யாக வேண்டும். இது­மட்­டு­மல்­லாமல் பயங்­க­ர­வா­தத்­துக்கும் இனி எமது நாட்டில் இடம் கொடுக்க முடி­யாது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­துடன், எவ்­வாறு பௌத்த விகா­ரை­களை நாங்கள் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கின்­றோமோ அதே­போன்று எமது நாட்­டி­லுள்ள அனைத்து ஏனைய மதஸ்­த­லங்­க­ளையும் நாம் பாது­காப்­ப­தற்­கான உறு­தி­யினை வழங்­கு­கின்றேன் என்றும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச கூறினார்.

இதன்போது, புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, பெரிய பள்ளி நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.