தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10 ஆம் திகதி

பொது மன்னிப்பில் ஞானசார தேரர்

0 728

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக 6 வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இரு மனுக்­க­ளையும் எதிர்­வரும் 10 ஆம் திகதி உயர் நீதி­மன்றம் கவ­னத்திற் கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. 

அன்­றைய தினம் அம்­ம­னுக்­களை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­வதா? இல்­லையா என நீதி­மன்றம் தீர்­மா­னிக்கும்.

இரு மனுக்­களில் ஒன்று மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து என்­ப­வரால் தாக்கல் செய்­யப்­பட்­ட­தாகும்.
இம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளாக சட்­டமா அதிபர், ஜனா­தி­பதி செய­லாளர் உதய சென­வி­ரத்ன, நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள, நீதி­ய­மைச்சின் செய­லாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்­முல்ல, கல­கொட அத்தே ஞான­சார தேரர், சிறைச்­சாலை ஆணை­யாளர் டி.எம்.ஜே.டபிள்யூ.தென்­னகோன் ஆகியோர் பெயர் குறிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மற்­றை­ய மனு பன்­னி­பிட்­டி­யவைச் சேர்ந்த சந்­தியா எக்­னெ­லி­கொ­ட­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளாக சட்­டமா அதிபர், கல­கொட அத்தே ஞான­சார தேரர், நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள, வெலிக்­கடை சிறைச்­சாலை அதி­காரி டி.ஜி.உடு­வர, ஜனா­தி­பதி செய­லாளர் உதய செனவிரத்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.