மத்ரஸாக் கல்வியை ஒழுங்குபடுத்த உடன் பணிப்பாளர் சபையை அமைக்குக

சட்டம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்கிறார் நீதியமைச்சர் தலதா அத்துகோரள

0 856

நாட்டின் மத்­ரஸா கல்­வியை கல்வி அமைச்சின் நிர்­வா­கத்தின் கீழ் உட்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள நிலையில் மத்­ரஸா கல்வி சட்­ட­வ­ரைபு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வைக்கு அனுப்பி வைக்­கும்­வரை காத்­தி­ருக்­க­வேண்டாம் என நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள அமைச்­ச­ர­வையைக் கோரி­யுள்ளார்.
கல்வி அமைச்சு மத்­ரஸா கல்வி தொடர்­பாக இடைக்­கால பணிப்­பளர் சபை­யொன்­றினை நிறுவி இத் திட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் அமைச்­ச­ர­வைக்கு பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்ளார். உட­ன­டி­யாக இத்­திட்டம் அமு­லுக்கு வர­வேண்டும் எனவும் கோரி­யுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மத்­ர­ஸாக்கள் கண்­கா­ணிப்­புக்­குட்­ப­டுத்தப் பட­வேண்டும், மத்­ர­ஸாக்கள் தடை­செய்­யப்­பட வேண்டும் என இன­வாத தரப்­பு­களால் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மிடம் மத்­ரஸா கல்­விக்­கென தனி­யான சட்ட மூல­மொன்­றினை இயற்­று­மாறு வேண்­டிக்­கொண்டார். இதற்­கி­ணங்க அமைச்சர் ஹலீம் நிபு­ணத்­துவக் குழு­வொன்­றினை அமைத்து மத்­ரஸா கல்­விக்­கென சட்­ட­வ­ரை­பொன்­றுக்கு ஏற்­பாடு செய்தார். இதற்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது.

சட்­ட­வ­ரைபு கல்வி அமைச்சின் பரிந்­து­ரை­க­ளுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டது. கல்வி அமைச்சு இதற்­கென நிபு­ணத்­துவக் குழு­வொன்­றினை நிய­மித்து குறிப்­பிட்ட சட்ட வரைபு தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது. கல்வி அமைச்சின் நிபு­ணத்­துவ குழுவில் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர், தேசிய கல்வி ஆணைக்­கு­ழுவின் தலைவர், கல்வி அமைச்சின் பணிப்­பாளர் நாயகம், பரீட்­சைகள் ஆணை­யாளர், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் உதவிச் செய­லாளர் உட்­பட கல்­வித்­துறை நிபு­ணர்கள் அங்கம் பெற்­றுள்­ளனர்.
இந்நிபு­ணத்­துவக் குழு இது­வரை 3 அமர்­வு­களை நடத்தி சட்­ட­வ­ரைபு தொடர்பில் ஆராய்ந்­துள்­ளது. கல்வி அமைச்சின் குறிப்­பிட்ட நிபுணர் குழுவின் பரிந்­து­ரைகள் அடங்­கிய சட்­ட­வ­ரைபை சட்­ட­வாக்கத் திணைக்­க­ளத்­துக்கு உரிய நட­வ­டிக்­கைக்­காக அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்நட­வ­டிக்­கை­க­ளுக்கு கால­அ­வ­காசம் தேவைப்­படும் என்­ப­த­னாலே நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள இச் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மாக்­கப்­ப­டும்­வரை காத்­தி­ராமல் உட­ன­டி­யாக பணிப்­பாளர் சபை­யொன்­றினை நிறுவி செயற்­ப­டு­மாறு பரிந்­து­ரைத்­துள்ளார்.

மத்­ரஸா கல்வித் திட்­டத்­துக்­கான சட்ட வரை­பினை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்தே தயாரிக்கவேண்டுமென அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீதியமைச்சர் தலதா அத்துகோரள அமைச்சரவைக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய மத்ரஸா கல்வி, கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் அமையவுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.