குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!

0 698

அநாதை பிள்­ளைகள் என்றால் கண்­டவன் நிண்­டவன் எல்லாம் கை நீட்­டுவான். அப்­ப­டித்தான் இலங்­கையில் கடந்த 30 வரு­டங்­க­ளாக அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இழந்து நிற்கும் புத்­த­ளமும் ஓர் அநா­தைதான். பாரா­ளு­மன்ற பிரதி­நி­தித்­து­வத்தை இழந்­துள்ள புத்­த­ளத்­தில்தான் மனி­த­வாழ்­வுக்கும், இயற்­கைக்கும் ஆபத்­தான பல திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. ஏற்­கெ­னவே, சீமெந்து கம்­பனி, சிறு­கடல் ஊடாக கம்பி கொண்­டு­வ­ருதல், நு­ரைச்­சோ­லையில் அனல் மின்­நி­லைய திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டதால் வாழ்வை போராட்­ட­மாக கழித்­துக்­கொண்­டி­ருக்கும் புத்­த­ளம்­வா­சி­களின் நிலை, மரத்­தி­லி­ருந்து வீழ்ந்­த­வனை மாடு வந்து முட்­டி­ய­து­போல, கழிவு முகா­மைத்­துவ திட்­டத்­தையும் அங்­கேயே முன்­னெ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது. இதனால் பேரா­பத்­தொன்றை நோக்கி புத்­தளம் மக்கள் நக­ரப்­போ­கி­றார்கள் என்­கிற பீதி மேலெ­ழுந்­தது.

மஹிந்த அர­சாங்க காலத்­தின்­போது நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபைத் தலை­வ­ராக இருந்த கோத்­தா­ப­ய­வினால் அரு­வாக்­கா­லுவில் குப்பை கொட்­டு­வ­தற்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. வர்த்­தக கைத்­தொழில் அமைச்சின் காணியில் கழிவு முகா­மைத்­துவ திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதனை, நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுத்­தது. அமைச்சர் சம்­பிக ரண­வக்க திட்­டத்தை கச்­சி­த­மாக முன்­னெ­டுத்தார்.

கொழும்பு கழிவு முகா­மைத்­திட்­டத்­திற்கு புத்­த­ளத்தில் கடந்த சில வரு­டங்­க­ளா­கவே எதிர்­ப்பு பல­மா­ன­தாக இருந்­தது. இதன் ஒரு­ கட்­ட­மாக நூறு நாட்­க­ளுக்கும் மேல் தொடர்ந்த உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்று புத்­தளம் நகரில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அத்­துடன், தொடர் ஆர்ப்­பாட்­டங்­களும் எதிர்ப்புப் பேர­ணி­களும் நடந்­த­வண்ணம் இருந்தன.

அத்­துடன், கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் அரு­வாக்­காலு கழிவு முகா­மைத்­துவ திட்­டத்தை தடை­செய்­யு­மாறு க்ளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் பிர­தே­ச­வா­சி­களால் புத்­தளம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் கடந்த மாதம் கழிவு முகா­மைத்­திட்டம் எந்­த­வித நிகழ்­வு­க­ளு­மின்றி இர­க­சி­யமாக ஆரம்­பித்­து­வைக்­கப்­பட்­டது. ரயில் மூலம் கொழும்­பி­லி­ருந்து குப்­பை­களை புத்­த­ளத்­திற்கு எடுத்துச் செல்­லவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும், கன­ரக லொறிகள் மூலம் குப்­பைகள் புத்­த­ளத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­பட்­டன.

இவ்­வாறு குப்­பை­களை எடுத்­துச்­சென்ற லொறிகள் மீது கல்­வீச்­சுத்­தாக்­குதல் நடத்தி மக்கள் எதிர்ப்பை வெளிக்­காட்ட எத்­த­னித்­தனர். கடந்த மாத நடுப்­ப­கு­தியில் புத்­தளம் – கொழும்பு பிர­தான வீதியின் தில்­லை­யடிப் பகு­தியில் மறைந்­தி­ருந்த சிலர் இவ்­வாறு தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த தாக்­கு­தலில் குப்­பை­களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாக­னமும், புத்­தளம் பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு சொந்­த­மான எல்.டி – 6907 எனும் இலக்­க­மு­டைய பொலிஸ் ஜீப் வண்­டியும் சேத­ம­டைந்­தன.

குறித்த தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­யவர் என சந்­தே­கத்தின் பேரில் ஒருவர் புத்­தளம் பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்டு தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இது தவிர மேலும் நால்வர் தொட­ராகக் கைதா­னார்கள்.

இந்­நி­லையில், வணாத்­த­வில்லு பொலிஸ் பகு­திக்கு கழிவுப் பொருட்­களை எடுத்துச் செல்லும் வாக­னங்­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்க வேண்­டா­மென்று புத்­தளம் பெரிய பள்ளி நிர்­வாகம் பொது மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­தது.
இது இப்­ப­டி­யி­ருக்க க்ளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் பிர­தே­ச­வா­சி­களால், புத்­தளம் அரு­வாக்­காலு குப்பைத் திட்­டத்­திற்கு எதி­ராக புத்­தளம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தொட­ரப்­பட்ட ரிட் மனு மீதான விசா­ரணை கடந்த வாரம் இரண்­டா­வது தட­வை­யாக எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போது எதிர்­வரும் 2020.03.12 வரை அப் பகு­தியில் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கப்­பட்­டது.

இதற்­க­மைய கொழும்­பி­லி­ருந்து குப்­பை­களை கொண்­டு­வந்து புத்­த­ளத்தில் கொட்­டு­வதை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டு­மென க்ளீன் புத்­தளம் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இவ்­வ­ழக்கு மீண்டும் 2020.03.12 அன்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இத் தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து புத்­தளம் நகரில் பட்­டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தினர். இந்தத் தீர்ப்­பா­னது மக்­களின் நீண்­ட­காலப் போராட்­டத்­திற்கு கிடைத்த முத­லா­வது வெற்­றி­யென க்ளீன் புத்­தளம் அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

எனினும், புத்­தளம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் உத்­த­ரவை மீறி, கொழும்பு குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காலு பகு­திக்கு டிப்பர் வாகனம் மூலம் தொடர்ந்தும் கொண்டு செல்லப்­பட்­டது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு புத்­தளம் கொழும்பு முகத்­தி­ட­லுக்கு முன்­பாக இடம்­பெற்­றது.

புத்­த­ளத்தைச் சேர்ந்த மூவின இளை­ஞர்­களும் ஒன்று சேர்ந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

செவ்­வா­யன்று நள்­ளி­ரவு 12.10 மணிக்கு புத்­தளம் கொழும்பு முகத்­தி­ட­லுக்கு முன்­பாக ஒன்­று­௯­டிய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், “கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கில், புத்­த­ளத்தை அசிங்­கப்­ப­டுத்­தாதே”, “கொழும்பு குப்பை எமக்கு வேண்டாம்”, ” சீனக் குப்பை எமக்கு வேண்டாம்”,”மலே­சிய குப்பை எமக்கு வேண்டாம்”, “எமது சூழல் எமக்கு வேண்டும்” “எமது பிள்­ளை­களின் எதிர்­காலம் எமக்கு வேண்டும்” இது­போன்ற பல கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது, புத்­தளம் தலை­மை­யக, வணாத்­த­வில்லு, முந்தல், நுரைச்­சோலை கரு­வ­ல­கஸ்­வெவ பொலி­ஸா­ருடன் இணைந்து, இரா­ணுவம், பொலிஸ் புல­னாய்வுப் பிரிவு, இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­படை மற்றும் புல­னாய்வுப் பிரி­வினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த போது, கொழும்­பி­லி­ருந்து குப்­பை­களை ஏற்றிக் கொண்டு சென்ற 20 இற்கும் மேற்­பட்ட டிப்பர் வாக­னங்கள், நள்­ளி­ரவு 12.25 மணி அளவில் புத்­தளம் நகரை வந்­த­டைந்­தன.
பாலாவி, தில்­லை­யடி, புத்­தளம் நகரம், புத்­தளம் – மன்னார் வீதியில் இரு மருங்­கிலும் துப்­பாக்கி ஏந்­திய பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­த­துடன், போக்­கு­வ­ரத்து பொலிஸ் மற்றும் இரா­ணுவ பாது­காப்­பு­க­ளுடன் குறித்த டிப்பர் வாக­னங்கள் வணாத்­த­வில்லு அரு­வக்­காலு பகு­திக்கு மிகவும் பாது­காப்­பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், அத்துமீறி லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும் குப்பைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, இந்த அரசாங்கம் குப்பைகளை பலவந்தமாக புத்தளத்தில் கொட்டுவதற்கு எடுக்கும் முயற்சி வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

குப்பை லொறிகளுக்கு முப்படையின் பாதுகாப்பு வழங்கப்படுவது வெட்கப்பட வேண்டியதொன்றாகும். ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவொன்று இருக்கின்ற நிலையில் நீதித்துறையை அவமதித்து அத்துமீறி கழிவு முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.