பொத்துவில் முகுது மகா விகாரையின் விகாராதிபதிக்கு எதிராக மனுத் தாக்கல்

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் இன்று நடவடிக்கை

0 1,306

பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி உட­ம­லத்தே ரத்­ன­பி­ரிய தேர­ருக்கு எதி­ராக இன்றைய தினம் மனுத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக பொத்­துவில் பிர­தேச சபையின் தவி­சா­ள­ரான எம்.எஸ். அப்துல் வாசீத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற சபையின் மாதாந்த அமர்வின் போது ஏக­ம­ன­தான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், “பொத்­துவில் பிர­தேச சபைக்­குட்­பட்ட சில பிர­தே­சங்களில் கடல் மண்­ணினால் மூடப்­பட்­டுள்­ளன. இதனால் குறித்த பிர­தே­சங்­களின் வாழும் மக்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதனை கருத்­திற்­கொண்டு கரை­யோரப் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் குறித்த மண்ணை அகழ்­வ­தற்­கான நட­டிக்­கை­யினை கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மேற்­கொண்ட போது குறித்த பிர­தேசம் விகா­ரைக்­கு­ரி­ய­தென பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி தெரி­வித்து இந்த நட­வ­டிக்­கைக்கு பலத்த எதிர்ப்­பினை வெளி­யிட்டார்.

இந்த சர்ச்­சை­யினை முடி­வுக்கு கொண்­டு­வர பாது­காப்புத் தரப்­பினர் முயற்­சித்த போதும் அது பயனாலிக்­க­ளில்லை. இவ்­வா­றான நிலையில் மண் அகழ்வு நட­வ­டிக்­கைக்கு கரை­யோர பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்ட அனு­மதி இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

இதனால் பொத்­துவில் முகுது மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி மற்றும் கரை­யோர பாது­காப்பு திணைக்­களம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக மனுத் தாக்கல் செய்ய பொத்­துவில் பிர­தேச சபை தீர்­மா­னித்­துள்­ளது.

பிர­தேச சபை­யினால் குறித்த பிர­தே­சத்தில் இதற்கு முன்­னரும் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்றிட்டங்களுக்கு குறித்த விகாரதிபதியினால் பல தடவைகள் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போதும் நீதிமன்றத்தினை நாடியே நாம் தீர்வு பெற்றுள்ளோம்” என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.