பயிர்களை மேயும் வேலிகள்

0 2,295

மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறி­க­ளையும், சமூக விழு­மி­யங்­க­ளையும் பின்­பற்றும் மக்கள் வாழும் இந்­நாட்டில், சகல மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், ஆலோ­சனை நிலை­யங்­க­ளிலும் தின­சரி நற்­போ­த­னைகள் இடம்­பெ­று­கின்­றன.

பாவச் செயல்­க­ளி­லி­ருந்து எண்­ணங்­களைப் பாது­காத்து எவ்­வாறு பரி­சுத்­த­மாக வாழ்­வது என்ற போத­னைகள், நல்­வாழ்­வுக்­கான ஆலோ­ச­னைகள் மத­கு­ரு­மா­ரி­னாலும், ஆசி­ரி­யர்­க­ளி­னாலும், உள ஆற்­றுப்­ப­டுத்­து­நர்­க­ளி­னாலும் அவ­ர­வர்­க­ளுக்­கு­ரிய நிலை­யங்­க­ளி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், இதில் துர­திஷ்டம் என்­ன­வென்­றால், இவ்­வாறு வழிப்­ப­டுத்­து­கின்­ற­வர்­களில், வேலி­யாக இருக்­கின்­ற­வர்­களில் சிலர் மனோ இச்­சைக்கு அடி­மைப்­பட்டு வழி­த­வறி பாவச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்­களின் இத்­த­கைய இழி­செ­யல்­க­ளினால் அப்­பாவிச் சிறு­வர்­களும், பெண்­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.
மத­கு­ரு­மா­ரினால் பாலியல் வன்­கொ­டு­மைக்கு ஆளாகும் சிறு­வர்கள், ஆரி­யர்­க­ளினால் பாலியல் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உள்­ளாகும் மாண­வர்கள், வைத்­தி­ய­ரினால் பாலியல் இம்­சைக்­கு உள்­ளாகும் நோயாளிச் சிறு­வர்கள், தந்­தை­யினால் வன்­பு­ணர்­வுக்கு ஆளாகும் மகள், அண்­ண­னினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாகும் தங்கை, மாமா­வினால் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாகும் மரு­மகள், சித்­தப்­பா­வினால் வன்­பு­ணர்­வுக்­கா­ளாகும் மகள், அம்­மப்பா, அப்­பப்­பாக்­க­ளினால் வன்­கொ­டு­மைக்­கா­ளாகும் பேத்­திகள் என பாது­காப்பு வேலி­க­ளாக இருக்க வேண்­டி­ய­வர்­க­ளினால் பயிர்­க­ளான சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாகும் சம்­ப­வங்கள் ஆங்­காங்கே நடந்­தே­று­வதை ஊடகச் செய்­திகள் வாயி­லாக அறி­ய­மு­டி­கி­றது.

உற­வு­மு­றைக்­கா­ரர்கள் மற்றும் சமூ­கத்தால் மதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களில் ஒரு சிலரின் இத்­த­கைய பாலியல் கொடு­மைகள், துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கைகள் ஏனை­ய­வர்­க­ளுக்கு தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­து­கி­றது. பயிர்­களை மேயும் வேலிகள் என்ற நிலையை உரு­வாக்கி வரு­கி­றது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் நாட்டில் அண்­மை­க்கா­ல­மாக அதி­க­ரித்­தி­ருப்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ள­தோடு இவர்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கி­றது.

இவற்­றுக்கு உதா­ர­ண­மாக அண்­மையில் ஹாலி-­எல பிர­தேச பாட­சா­லை­யொன்றில் அப்­பா­ட­சா­லையில் கணித பாடம் கற்­பிக்கும் ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் அதே பாட­சா­லையைச் சேர்ந்த 13 மாண­வர்­களை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்­டுக்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் குறித்த ஆசி­ரியர் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் இப்­பி­ர­தே­சத்தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பது மாத்­தி­ர­ம­ன்றி ஆசி­ரி­யத்­து­வத்­திற்கும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. புனி­த­மிக்க பணி­யாகக் கரு­தப்­படும் ஆசி­ரி­யத்­துவம் சம­கா­லத்தில் அப்­ப­ணியைச் சுமந்த சில­ரினால் புரி­யப்­ப­டு­கின்ற சமூ­க­வி­ரோத செயற்­பா­டுகள் ஆசி­ரி­யத்­து­வத்­துக்­கான சமூக கௌர­வத்­தையும், மதிப்­பையும் மதிப்­பி­ழக்கச் செய்து வரு­வதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

வேலி­க­ளாக இருந்து மாண­வர்­களை பாது­காக்­கவும் அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தவும் கட­மைப்­பட்­ட­வர்கள் புரி­கின்ற படு­மோ­ச­மான செயற்­பா­டுகள் குறித்து பெற்­றோர்­களும், பாது­கா­வ­லர்­களும் அக்­க­றை­கொள்­வது அவ­சி­ய­மாகும். மேல­திக வகுப்­புக்கள் என்ற போர்­வையில் ஆசி­ரி­யத்­து­வத்தைச் சுமந்த ஒரு­சில மனி­தா­பி­மா­ன­மற்­ற­வர்­க­ளினால் மாண­வர்­களின் காலங்கள் மாத்­தி­ர­மின்றி பணங்­களும் கொள்­ளை­யி­டப்­படும் சம்­ப­வங்­களும் இடம்­பெ­று­கின்­றன. பாட­சா­லை­களில் பாட அல­குகள் நிறைவு செய்­யப்­ப­டா­ததன் கார­ண­மாக எங்கு சென்­றேனும் கற்று பரீட்­சை­களில் சித்­தி­ய­டைய வேண்­டு­மென்ற நோக்­குடன் மேல­திக வகுப்­பு­க­ளுக்கு சென்­றாலும் அங்கும் பாட அல­கு­களை நிறைவு செய்ய முடி­யாமல் தவிக்கும் சில மாண­வர்கள் அவ்­வாறு பாட அல­குகள் நிறைவு செய்­யப்­ப­டா­மலே க.பொ.த உயர்­தரம் மற்றும் சாதா­ரண தரப்­ப­ரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் துர்ப்­பாக்­கிய நிலை­மை­களும் ஒரு சில ஆசி­ரி­யர்­க­ளினால் தோற்­று­விக்­கப்­ப­டு­வதைக் கேள்­வி­யுற முடி­கி­றது. இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்ந்து இடம்­பெ­று­வ­தற்கு மாண­வர்­களின் பெற்­றோரும் பாது­கா­வ­லர்­களும் பொறுப்­பா­ன­வர்கள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இந்­நி­லை­மைகள் கூட ஒரு வகையில் மாண­வர்­களின் நேரமும், பணமும் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தும் விட­யங்­க­ளா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

இந்­நி­லையில், துஷ்­பி­ர­யோ­கங்­களைத் தடுக்கும் வழி­மு­றை­களும், சட்­ட­திட்­டங்­களும், தண்­ட­னை­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும், அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் நாட்டின் ஏதா­வது ஒரு பகு­தியில் தினமும் இடம்­பெற்றுக் கொண்­டுதான் இருக்­கி­றது என்றால் இதற்­கான கார­ணத்தை ஒவ்­வொரு பெற்­றோரும், பொறுப்­புள்ள பாது­கா­வ­லரும், சமூ­கத்தின் மனித நேய­முள்ள ஒவ்­வொ­ரு­வரும் அறிந்­து­கொள்­வது மாத்­தி­ர­மின்றி, அவற்றை தடுப்­ப­தற்­கான உரிய விழிப்­பு­ணர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வதும் அதற்­கேற்ப செயற்­ப­டு­வதும்; இன்­றி­ய­மை­யா­த­தாகும்

சிறுவர் துஷ்­பி­ர­யோ­கமும் கார­ணங்­களும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் பல்­வேறு கார­ணங்­க­ளினால் இடம்­பெ­று­கின்­றன. பாலியல் ரீதி­யாக சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கு­கின்­ற­வர்கள் ஏதோ­வொரு வகை பாலியல் உளக்­கோ­ளா­ரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் இருக்­கலாம். உளக்­கோ­ளா­று­க­ளுடன் நவீன தகவல் தொழில்­நுட்­பத்தின் வளர்ச்­சியின் விளை­வாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள அதி­க­ள­வி­லான வேண்­டத்­த­காத இணை­யத்­த­ளப்­பா­வ­னையும், அநா­க­ரி­க­மிக்க, கவர்ச்­சி­க­ர­மான ஆடை­ய­ணி­தலும் பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம் இடம்­பெ­று­வ­தற்­கான முக்­கிய கார­ணங்­க­ளாக அமை­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

அத்­தோடு, உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்­க­ணிப்பு ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு சமூ­கங்­களின் பொறுப்­பற்ற தன்மை, சூழல் நெருக்­கீ­டுகள், குடும்ப நெருக்­கீ­டுகள் என்­பன கார­ண­மாக உள்­ளன. பொரு­ளா­தாரச் சிக்­கல்கள், வயதில் மிக நெருக்­க­மா­க­வுள்ள பிள்­ளைகள், தனி­யான பெற்­றோரின் பரா­ம­ரிப்பு, திரு­மணப் பிரச்­சி­னைகள், ஒரு­சில ஆத­ர­வு­க­ளுடன் சமூ­கத்தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை, ஊட­கங்­களின் தாக்கம் போன்ற குடும்ப, சமூக சூழல் கார­ணி­களும் தீராத ஆரோக்­கிய பிரச்­சி­னைகள், மது மற்றும் போதை­வஸ்துப் பாவனை, கோபத்தை அடக்க முடி­யாத தாழ்­வான சுய மதிப்­பு­டைய வயது, கல்வி மற்றும் தனிப்­பட்ட அனு­ப­வங்கள் ஆகி­ய­வற்­றுக்கு உட்­படும் தரக்­கு­றை­வான திறன்கள், சிறு­வர்­களின் விருத்தி தொடர்­பாக யதார்த்­த­மற்ற எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைக் கொண்ட பெற்­றோர்கள் மற்றும் பாது­கா­வ­லர்­களின் நடத்­தை­களும் சிறுவர் துஷ்­பி­ரயோம் ஏற்­ப­டு­வ­தற்­கு­ரிய கார­ணங்­க­ளாக விளங்­கு­கின்­றன.

இத்­த­கைய கார­ணங்­க­ளினால் அல்­லது இவை தவிர்ந்த ஏனைய கார­ணங்­க­ளினால் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளா­கு­வதைத் தடுக்க வேண்­டு­மாயின். இத்­த­டுப்பு நட­வ­டிக்கைப் பணிகள் சமூகப் பணி­யாக கரு­தப்­பட்டு சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜையும் இவை தொடர்பில் விழிப்­பு­ணர்வு பெறு­வ­துடன் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­பதை தமது பொறுப்­பா­கவும் உண­ர­வேண்டும். அப்­போ­துதான் இத்­த­கைய கய­வர்­க­ளி­ட­மி­ருந்து பிள்­ளை­களைக் காப்­பாற்ற முடியும்.

சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள அரச மற்றும் தன்­னார்வத் தொண்டு நிறு­வன அதி­கா­ரி­களும், செயற்­பாட்­டா­ளர்­களும் சமூ­கத்தின் ஒவ்­வொரு பிர­ஜை­யையும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன? ஏன் ஏற்­ப­டு­கி­றது. இதற்­கான கார­ண­மென்ன, துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள். எத்­த­கை­ய­வர்­களால் துஷ்­பி­ர­யோகம் ஏற்­ப­டு­கி­றது. துஷ்­பி­ர­யோகச் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களை எவ்­வாறு பாது­காக்­கலாம் அதற்­கான முறை­யான பொறி­மு­றைகள் எவை போன்ற பூரண அறிவை பெறு­வதும் அவ­சி­ய­மாகும்.

இவை­கு­றித்த முறை­யான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கை­களை முறை­யா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யிலும் பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள் மற்றும் பொது­மக்கள் மத்­தியில் கிராமம் மற்றும் நகரம் தோரும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும்.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் பற்­றிய அறிவு அவற்றைத் தடுப்­ப­தற்­காக செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி ஒவ்­வொரு தனி­ந­ப­ருக்கும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. சிறு­வர்கள் என்றால் யார்? அவர்­களின் உரிமை என்ன? சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன? துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான கார­ணங்கள் எவை? துஷ்­பி­ர­யோ­கங்­க­ளி­லி­ருந்து எவ்­வாறு சிறு­வர்­களைப் பாது­காக்க முடியும். போன்ற அறி­வுடன் கூடி­ய­தான விழிப்­பு­ணர்வு இன்று ஒவ்­வொரு தனி நப­ருக்கும் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாக மாறி­யுள்­ளது.

ஏனெ­னில், இன்று நமக்கு சொந்­த­மில்­லாத ஒரு சிறு­வனோ, சிறு­மியோ துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்ட செய்தி நாளை நமது சொந்த உற­வான பிள்ளை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்ட செய்­தி­யா­கக்­கூட வரலாம். அந்த நிலை­யி­லி­ருந்து நமது சிறு­வர்­களைக் காப்­பாற்ற வேண்­டு­மாயின் ஒவ்­வொரு தனி­ந­பரும் இவ்­வி­டயம் தொடர்பில் விழிப்­ப­டை­வது அவ­சி­ய­மாகும்.

18 வய­திற்கு குறைந்த சக­லரும் சிறு­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டுவர். சிறு­வர்­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவும் சிறு­வர்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவும் ஐக்­கிய நாடு­களின் சிறுவர் உரி­மைகள் பட்­டயம் உரு­வாக்­கப்­பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபை­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­ப­துடன் 1991ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் அது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறு­வர்­க­ளது அடிப்­படை உரி­மைகள் தொடர்பில் கொடுக்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­து­வத்­தையும் அதன்­மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள கொள்­கைகள், விதி­க­ளையும் அறிந்து கொள்­வதும் அவ­சி­ய­மாகும்.

சிறுவர் உரி­மை­களும் துஷ்­பி­ர­யோக வடி­வங்­களும்

பிறப்­பின்­போது பெய­ரொன்­றையும் இன அடை­யா­ளத்­தையும் பெற்­றுக்­கொள்ளும் உரிமை, பெற்­றோரைத் தெரிந்து கொள்­வ­தற்கும் அவர்­க­ளது பாது­காப்பைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­மான உரிமை, பெற்­றோ­ரி­ட­மி­ருந்து தம்மைத் தனி­மைப்­ப­டுத்­தா­தி­ருப்­ப­தற்­கான உரிமை, வாழ்­வ­தற்கும் முன்­னே­று­வ­தற்­கு­மான உரிமை, தமது கருத்தை வெளிப்­ப­டுத்தும் உரிமை, சிந்­திப்­ப­தற்கும் மனச்­சாட்­சிப்­படி நடப்­ப­தற்கும், சம­ய­மொன்றைப் பின்­பற்­று­வ­தற்­கு­மான உரிமை, போதிய கல்­வி­பெறும் உரிமை, சமூக உரிமை, தனி­யு­ரிமை, சுகா­தார வச­திகள் பெறும் உரிமை, ஓய்­வெ­டுக்­கவும் விளை­யா­டவும் உரிமை, சித்­தி­ர­வதை குரூ­ர­மான தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளும் உரிமை, சாதா­ரண வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­குள்ள உரிமை, சுதந்­தி­ரத்­திற்கும் பாது­காப்­பிற்­கு­மான உரிமை போன்ற பல்­வேறு உரி­மை­களை அனு­ப­விக்கும் உரிமை சிறு­வர்­க­ளுக்­குண்டு. இத்­த­கைய உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதும் துஷ்­பி­ர­யோ­க­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

பொது­வாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மா­னது பல்­வேறு வடி­வங்­களில் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், புறக்­க­ணிப்பு ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோகம் என பல்­வேறு கோணங்­களில் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

சிறு­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாகத் தீங்­கி­ழைக்­கப்­படின் அது உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இதில் அடித்தல், காயப்­ப­டுத்தல், அங்­கங்­களைச் சிதைத்தல் போன்ற மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத தண்­ட­னை­களும் அடங்­கு­கின்­றன. குறிப்­பாக பெரும்­பா­லான உட­லியல் ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கங்கள் வீடு­களில் இடம்­பெ­று­கின்­றன. பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள், வயது வந்த சகோ­த­ரர்கள், சில ஆசி­ரி­யர்கள், கள்ளக் காத­லர்கள், காத­லிகள், எஜ­மா­னர்கள் போன்­றோ­ரினால் சிறு­வர்கள் உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­றனர்.

இவ்­வா­றான உட­லியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் ஒரு­சில வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­கின்ற போதிலும் பல சம்­ப­வங்கள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டாமல் மூடி­ம­றைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பொது­வாக, சிறு­வர்கள் சுய­மாக விளை­யா­டுதல், கற்றல், நாளாந்த கரு­மங்­களைச் செய்தல், ஒளிவு மறை­வின்றிப் பேசுதல், விருப்­பங்­களை வெளிப்­ப­டுத்­துதல், அறி­யாத விட­யங்­களை அறிந்­து­கொள்ள முய­லுதல், சுய­மாகச் சிந்­தித்தல், ஆராய்தல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்ற போது அவை பல­வந்­த­மாகத் தடுக்­கப்­ப­டு­மி­டத்து, உள­வியால் ரீதி­யான தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கு­வார்கள்.

இதனால் அவர்­களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்­ண­றிவு, விவேகம் போன்ற உள நிலைகள் பாதிப்­ப­டையும். இவ்­வாறு சிறு­வர்­களைப் பாதிப்­ப­டையச் செய்யும் செயற்­பா­டுகள் உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

அநேக வீடு­களில் பிள்­ளை­களின் சுதந்­தி­ரங்கள் பறிக்­கப்­படும் வகையில் தங்­க­ளது எண்­ணங்­க­ளையும் ஆசை­க­ளையும் பெற்­றோர்கள் பிள்­ளைகள் மீது திணிக்­கின்­றனர். இதனால், சிறு­வ­யதில் ஏற்­ப­டு­கின்ற உளத் தாக்­கங்கள் அப்­பிள்­ளையின் எதிர்­கா­லத்தைப் பாதிக்கும் என்­பதை அநேக பெற்­றோர்கள் மறந்து செயற்­ப­டு­வது அவர்­களின் அறி­யா­மை­யாகும்.

சிறு­வர்­களை ஏதா­வது பாலியல் செயற்­பாட்டில் ஈடு­ப­டுத்­தும்­போது சிறு­வர்கள் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டு­கின்­றனர். பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பது பாலியல் இச்­சைக்­காக சிறு­வர்­களைப் பயன்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி, சிறு­வர்­களைத் தொடுதல், வரு­டுதல், பொருத்­த­மற்ற பாலியல் சொற்­களைப் பயன்­ப­டுத்­துதல், பாலியல் நொந்­த­ர­வு­களைக் கொடுத்தல், பாலியல் செயற்­பா­டு­களை பார்ப்­பதில் ஈடு­ப­டுத்தல், ஆபாசப் படங்கள், புத்­த­கங்­களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்­பா­டு­களில் சிறு­வர்­களை ஈடு­படச் செய்­வ­தா­னது பாலியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

சம­கா­லத்தில் சிறு­வர்கள் மிக மோச­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். குறிப்­பாக சிறுவர் இல்­லங்­களை நடாத்தி வரு­கின்ற பொறுப்­பு­தா­ரிகள் மற்றும் மேல­திக வகுப்­புக்­களை நடாத்தி வரு­கின்ற ஒரு­சில ஆசி­ரிர்கள் மற்றும் கல்வி நிலைய நிரு­வா­கிகள், உற­வு­மு­றைக்­கா­ரர்கள் சிறு­வர்­களை பாலியல் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உட்­டுத்தி வரு­கின்­றனர்.

இவ்­வாறு சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­ப­ட்­டுள்­ள­வர்கள் ‘சேடிசம்’, ‘பிடோ­பீ­லியா’, ‘பெடி­சிஷம்’, ‘மஸோ­சியம்’ போன்ற பாலியல் விலகல் நடத்தை உளக் கோளா­று­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள் என உள­வியல் நிபு­ணர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

உணர்ச்சி ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மென்­பது வெளிப்­ப­டை­யா­கவே மறுத்து விலக்­குதல், தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், பயமுறுத்தல், கெடுத்தல், சுரண்டிப்பிழைத்தல், உணர்ச்சி ரீதியான துலங்களை மறுத்தல் மற்றும் சூழலுடன் இடைத்தொடர்பை மேற்கொள்ளும் சிறுவர்களது பிரயத்தனங்களுக்கு தண்டனையளித்தல் போன்ற செயற்பாடுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இவ்வகையான துஷ்பிரயோக செயற்பாடுகளும் பெருவாரியாக இடம்பெற்றுத்தான் வருகின்றன.

ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றபோது அச்சிறுவன் புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றான். அதுதவிர, சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதும் அதனால் ஏற்படுகின்ற இறுக்கமான செயற்பாடுகளும்கூட சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களாகக் கருதப்படுகின்றன.

துஷ்பிரயோகம் பற்றிய உண்மையான தகவல்களை சிறுவர்களுக்கு கற்பித்தல் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்தினால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்துவதற்கும் தேவையான திறன்களையும் பண்புகளையும் அவர்களில் விருத்தி செய்தல் அவசியமாகும். இந்த அவசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வளரும் பயிர்களான சிறுவர்கள் வேலிகளாகக் கருதப்படும் ஆசிரியர்கள் உட்பட உறவு முறைக்காரர்களினாலும் ஏனையவர்களினாலும் துஷ்பிரயோகத்திற்குட்படாமல் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சமூக உறுப்பினர்கள் மற்றும் குடும்ப அசங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவது சமகாலத்தின் அவசியமாகவுள்ளது.

அத்தோடு, பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அலட்சியமாகச் செயற்பாடாது எந்தப்பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை குறைந்தபட்சம் அறிந்து துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய அறிவைப் பெற்று அதற்கேற்ப செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அவ்வாறு செயற்படும் போதுதான், வேலிகள் போல் நடிக்கும் காமப் பிசாசுகளிடமிருந்தும் ஏனைய கயவர்களிடமிருந்தும் வளரும் பயிர்களான பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும்.

எம்.எம்.ஏ.ஸமட்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.