பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் ஷாபிக்கு எதி­ராக ரதன தேரர் முறைப்­பா­ட­ளிப்பு

0 676

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்திய நிபுணர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி மீதான விசா­ர­ணைகள் சுயா­தீ­ன­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­ட­ளித்­துள்ளார்.

வைத்­தியர் ஷாபி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட மகப்­பேற்று சத்­தி­ர­சி­கிச்­சையின் போது குழந்­தையின் காலில் வெட்­டுக்­காயம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதன்­கா­ர­ண­மாக குழந்தை உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிப்­ப­தா­கவும் தனது முறைப்­பாட்டில் குறிப்­பிட்­டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­ட­ளித்த பின்னர் இவ்­வி­டயம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் அவர் கூறி­ய­தா­வது;
கருத்­தடை விவ­காரம் தொடர்பில் ஷாபிக்கு எதி­ராக 900 க்கும் அதி­க­மான சிங்­கள தாய்மார் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இருப்­பினும் இது­வ­ரையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் ஷாபி குற்றம் புரிந்­தவர் என்று தக­வல்கள் எதுவும் வெளி­யா­க­வில்லை என குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கூறி­யுள்­ள­துடன், அவரை குற்­ற­மற்­ற­வ­ராக சித்­தி­ரிக்­கின்­றனர். இந்­நி­லையில் மாலினி என்ற தாயொ­ருவர் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது குழந்­தைக்கு நேர்ந்த அநி­யாயம் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் முறை­யிட்­டுள்ளார். ஆயினும் அவ்­வி­டயம் தொடர்பில் எந்த விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

குழந்தை பிறந்­த­வுடன் நன்­றாக பால் அருந்­தி­யுள்­ளது. பின்னர் குழந்­தைக்கு இத­யநோய் உள்­ள­தாக கூறப்­பட்ட போதிலும் சாதா­ரண வார்ட்­டி­லேயே வைக்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் குழந்தை உயி­ரி­ழந்­துள்­ளது. அந்தக் குழந்­தையின் கால்­களில் வெட்­டுக்­காயம் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் எவரும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. ஆயினும் இந்த விடயம் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் முறைப்­பாடு அளித்­துள்ளோம். பொலி­சா­ரி­டத்தில் சென்றால் அவர்கள் இந்த முறைப்­பாட்டை பொறுப்­பேற்­க­வில்லை. இந்­நி­லையில் தான் நாம் பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறை­யிட்­டுள்ளோம். வைத்­தியர் ஷாபியின் மீது மனித கொலை தொடர்­பான குற்­றச்­சாட்­டையே நாம் முன்­வைத்­துள்ளோம். ஆகவே, இந்தக் குழந்­தையின் காலி­லுள்ள வெட்­டுக்­காயம் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்க வேண்டும். ஏனெனில் குழந்­தையின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் இரண்டு விட­யங்கள் மர­ணத்­திற்­கான கார­ணங்­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அதில் எழுந்­துள்ள சந்­தே­கத்தின் நிமித்­தமே இம்­மு­றைப்­பாட்டை அளித்­துள்­ளளோம். பாதிக்­கப்­பட்ட பெண்­ணிற்கு மீண்டும் குழந்­தைப்­பேறும் அற்­றுப்­போ­யுள்­ளது. ஆகவே , அவ­ரு­டைய குழந்­தையின் மரணம் இயற்கை மர­ண­மாக இருக்க முடி­யாது என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. ஆகவே தான் முறைப்­பாடு அளித்­துள்ளோம். இது தொடர்பில் தகுந்த விசா­ர­ணை­களை பொலிஸ் ஆணைக்­குழு மேற்­கொள்ளும் என நம்­பு­கின்றோம்.

கேள்வி: குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரின் விசா­ர­ணைகள் தொடர்­பான நிலைப்­பாடு என்ன?

பதில்: குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் தொடர்பில் மக்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளனர். குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்­கென தனிப்­பட்ட ரீதியில் மதிப்பு உண்டு. ஆகவே, இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். ஏனெ­னில் இது 900 தாய்மாரின் பிரச்சினையல்ல. மாறாக, சிங்கள சமூகத்தின் பிரச்சினை. ஆகவே இவ்விடயம் தொடர்பில் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் சுயாதீனமான முறையில் மேற்கொள்ள வேண்டும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.