சமூகத்தை மதத்தலைவர்கள் நேர்வழிப்படுத்த வேண்டும்

0 1,213

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு நான்கு மாதங்கள் கடந்­து­விட்­ட­போதும் அத்­தாக்­கு­தல்கள் பற்றி நாளாந்தம் நினை­வு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அவை பற்றி பேசப்­பட்டு வரு­கின்­றன. அது இலகுவில் மறந்துவிடக்கூடிய நிகழ்வும் அல்ல.

மதத் தலை­வர்கள், சமூக ஆர்­வ­லர்கள், அர­சியல் தலை­வர்கள் என பல மட்­டத்­திலும் இத்­தாக்­கு­தல்கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட தடை செய்­யப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் தொடர்ந்தும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள்.

அடிப்­ப­டை­வா­திகள் அனை­வரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் இன்னும் இருக்­கி­றார்கள் என்று அர­சி­யல்­வா­திகள் கூறி வரு­கி­றார்கள். தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் 250 க்கும் மேற்­பட்ட அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பலி­யெ­டுத்து 500 க்கும் மேற்­பட்­ட­வர்­களை காயங்­க­ளுக்­குள்­ளாக்­கின. குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்னும் மீள­வில்லை.

இவ்­வா­றான நிலையில் மதத் தலை­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்ள சமூ­கத்தை ஆறு­தல்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருப்­பது வர­வேற்கத் தக்­க­தாகும். பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்தின் பங்­க­ளிப்பு இவ்­வி­ட­யத்தில் மெச்சத் தக்­க­தாகும்.

பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்று உயிர்ப்­ப­லிகள், காயங்கள் என்று அவ­ரது சமூகம் ஆவே­சத்­துடன் இருந்த சூழ்­நி­லையில் ஆறு­தல்­ப­டுத்­தினார். சமூகத்தை கட்டுப்படுத்தினார்.
இத்­தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்லிம் சமூகம் சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கப்­பட்­டது. முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­திகள் என முத்­திரை குத்­தப்­பட்­டனர். இந்­நி­லையில் தற்­போது தளர்வு நிலை ஏற்­பட்­டுள்­ளது. மதத் தலை­வர்கள் வெளி­யிடும் கருத்­துகள் இதனை உறுதி செய்­கின்­றன.

‘முஸ்லிம் சமூ­கத்தில் மிகவும் சிறு தொகை­யி­னரே அடிப்­ப­டை­வா­தி­க­ளாக செயற்­ப­டு­கி­றார்கள். அவர்கள் சம­யத்தை அவர்­க­ளுக்­கேற்­ற­வாறு அமைத்துக் கொண்­ட­த­னாலே தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. உண்­மை­யான முஸ்லிம் பக்­தர்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளாகச் செயற்­ப­டு­வ­தில்லை. அவர்கள் அடிப்­ப­டை­வா­தி­களின் வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­ப­டு­ப­வர்கள் அல்லர்’ என கண்டி மல்­வத்­து­பீட மகா­நா­யக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சுமங்­கல தெரி­வித்­துள்ளார்.

இலங்­கைக்கு மூன்று நாள் விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு வருகை தந்­தி­ருந்த கெண்­ட­பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்த போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

‘பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளல்லர். தவ­றான பாதையைத் தேர்ந்­தெ­டுத்­துள்ள சிறிய எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கு முஸ்லிம் சமயத் தலை­வர்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்’ என்றும் அவர் கூறி­யுள்ளார்.

எமது நாட்டில் முஸ்லிம் சமூ­கத்தின் மதத் தலை­வர்கள் பல்­வேறு கொள்­கை­களை முன்­வைத்து பிள­வு­பட்டு நின்­ற­த­னாலே நாம் இன்று பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்ளோம். எமது உரி­மை­க­ளுக்கு சவால்கள் எழுந்­துள்­ளன. இன்­றைய சூழ்­நி­லையில் எமது மதத் தலை­வர்கள் இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­டங்­களை வகுத்துச் செயற்­பட வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் நிகழ்­வொன்றில் உரை­யாற்றும் போது அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களை வெளி­யிட்­டி­ருந்­தமை சர்ச்­சையை உரு­வாக்­கி­யி­ருந்­தது. அவர் டாக்டர் ஷாபி தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். ‘இவ்­வா­றான டாக்­டரை கல் எறிந்து கொல்ல வேண்டும் என சில் எடுக்கும் பெண்கள் என்­னிடம் கூறி­னார்கள். அவரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்­றார்கள். நான் அப்­படிக் கூற மாட்டேன். ஆனால் செய்­யப்­பட வேண்­டி­யது அதுதான்’என்று அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
ஒரு மதத் தலை­வரா இவ்­வாறு கூறினார் என்­பதை நினைத்தும் பார்க்க முடியாது. அவரும் கூட இன்று சாதி சமய பேதங்களின்றி ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மதத் தலைவர்களாலே சமூகங்களை நேர்வழிப்படுத்த முடியும். அந்தப் பணியில் முரண்பாடுகளை மறந்து மதத் தலைவர்கள் செயற்பட முன்வர வேண்டும். மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். அவ்வாறான நிலைமை உறுதிப்படுத்தப்பட்டாலே நாம் பாதுகாப்பாக வாழும் சூழல் உறுதிப்படுத்தப்படும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.