நீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை!

சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டியது நமது கடமை

0 1,210

இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரை­யுடன் கூடிய கலா­சார உடைக்கு பெரும்­பான்மை இன­வா­தி­களால் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்டு வந்­தது. பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடையைத் தடை செய்ய வேண்­டு­மென அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன.

முகத்­தி­ரை­யுடன் கூடிய கறுப்பு நிறத்­தி­லான கலா­சார உடை­ய­ணிந்து பய­ணிக்கும் முஸ்லிம் பெண்­களை “கோனி பில்­லாக்கள்” என்று அவர்கள் பெயர் சூட்டி கேலி செய்­தார்கள்.

இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்­திலே கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்கு அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய அமைப்பு உரிமை கோரி­யி­ருந்­தது. சுமார் 250 க்கும் மேற்­பட்ட அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பலி­யெ­டுத்த அந்தத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது. முழு முஸ்லிம் சமூ­கத்தையும் சந்­தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உரு­வா­னது. ஒரு அடிப்­ப­டை­வாத குழு­வி­னரே தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தாலும் முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதே பழி சுமத்­தப்­பட்­டது.

குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்களும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­களும் கைது செய்­யப்­பட்­டார்கள். நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமு­லுக்குக் கொண்டு வரப்­பட்­டது. பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்­பட மேலும் இரு அமைப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டது. சந்­தே­கத்தின் பேரில் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில் நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை நாட்­டு­வ­தற்­காக பாது­காப்பு அமைச்­ச­ராகப் பதவி வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு தடை விதித்து விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி இரவு முதல் அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்தார். பொது மக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் 2 ஆவது சரத்தில் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­துக்கு அமை­யவே அவ­ச­ர­கால சட்டம் அமு­லாக்கம் தொடர்­பான விசேட வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி அனு­மதி வழங்­கி­ய­துடன் அன்று முதல் ஒவ்­வொரு மாதமும் 22 ஆம் திகதி அவ­ச­ர­கால சட்­டத்தை ஜனா­தி­பதி நீடித்து வந்தார். இந்­நி­லை­யிலே அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் தேசிய பாது­காப்பை கருத்­திற்­கொண்டு முழு­மை­யாக முகத்தை மூடி ஆடை அணி­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டது.

அவ­ச­ர­கால சட்டம் இம்­மாதம் 23 ஆம் திகதி முதல் நீக்­கப்­பட்­டுள்­ள­போதும் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஒவ்­வொரு மாவட்­டத்­திற்கும் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்க இரா­ணுவம் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பொது மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் 12 ஆவது சரத்­திற்கு அமைய ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­தியே ஜனா­தி­பதி இரா­ணு­வத்தை ஈடு­ப­டுத்­து­வற்­கான உத்­த­ர­வு­களை வழங்­கி­யுள்ளார்.

முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­யுள்­ளதா?

கடந்த நான்கு மாத கால­மாக நாட்டில் அமுலில் இருந்த அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் அச்­சட்­டத்தின் கீழ் விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் தடை செய்­யப்­பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரை­யான நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளதா? இல்­லையேல் தொடர்ந்தும் அமுலில் உள்­ளதா என்­பது தொடர்பில் இன்று தெளி­வற்ற நிலை காணப்­ப­டு­கி­றது. இத்தடை நீங்­கி­யுள்­ளதா? இல்­லையா? என்­பது தொடர்பில் பாது­காப்பு தரப்­பி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்புச் செய்­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர்

முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­திரை தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வான விளக்­கங்­களை வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மி­டமும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ள­ரி­டமும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் தடை­செய்­யப்­பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடை அச்­சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு நீங்­கி­யுள்­ளதா என்­பது தொடர்பில் மக்கள் தெளி­வற்ற நிலையில் இருக்­கி­றார்கள். எனவே இது தொடர்பில் மக்­களை அறி­வு­றுத்­து­மாறு வேண்­டு­கிறோம் என உலமா சபை கோரி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதி பொலிஸ் மா அதி­ப­ரிடம் விளக்­கங்­களைக் கோரி கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்தார்.

அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்த நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீக்­கப்­பட்­டு­விட்­டதா? இல்­லையா? என மக்­களைத் தெளி­வு­ப­டுத்­து­மாறு அமைச்சர் ஹலீம் அக்­க­டி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். முகத்­திரை அணி­வது தொடர்பில் முஸ்லிம் பெண்கள் தெளி­வற்ற நிலையில் இருக்­கி­றார்கள் என்­ப­தையும் அவர் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

மேலும் அமைச்சர் ஹலீம் ஊட­கங்­க­ளுக்கு இவ்­வா­றான கருத்­தி­னையும் கூறி­யி­ருந்தார்.

கடந்த 23 ஆம் திகதி முதல் நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் பாது­காப்­புக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளும் அதி­காரம் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான விஷேட வர்த்­த­மானி அறி­வித்­த­லையும் ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ளார். அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­ட­துடன் அச்­சட்­டத்தின் கீழ் அமு­லி­லி­ருந்த முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­திரை ஆடைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது. எனினும் நமது சூழ­லி­லுள்ள பெரும்­பான்மை சகோ­த­ரர்­களின் மனோ­பா­வமும், அச்­சமும் இன்னும் மாறி­ய­தாகத் தெரி­ய­வில்லை. இந்­நி­லையில் முஸ்லிம் பெண்கள் முகத்­தி­ரை­ய­ணிந்து வெளியில் செல்லும் போது அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆளாக இட­முண்டு. எனவே முகத்­தி­ரை­ய­ணிந்து பொது இடங்­க­ளுக்கு செல்­வதைத் தவிர்த்து கொள்­ளு­மாறும் கால­நேர சூழ்­நி­லை­களைக் கவ­னத்திற் கொண்டு செயற்­ப­டு­மாறும் வேண்டிக் கொள்­கிறோம்.
பாது­காப்பு, தரப்­பி­னரின் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது பூரண ஒத்­து­ழைப்­பினை வழ­மைபோல் வழங்­கு­மாறும் வேண்­டு­கிறோம். உல­மாக்­களின் வழி­காட்­டல்­க­ளின்­படி பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு ஒத்­து­ழைப்பு நல்கி எமது உரி­மை­களை எதிர்­கா­லத்தில் உறுதி செய்ய முன்­வ­ரு­மாறும் வேண்­டு­கிறேன். பொலிஸ்மா அதிபர் முகத்­திரை தொடர்­பான தெளி­வு­களை வழங்­கினால் மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வி­யாக இருக்கும் என்று தெரி­வித்­துள்ளார். அமைச்­சரின் அறி­வு­ரை­களை சமூகம் கவ­னத்­திற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஏனென்றால் முகத்­தி­ரைக்­கான தடை நீக்­கப்­பட்­டாலும் இன­வா­திகள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் முகத்­தி­ரை­ய­ணிந்து பொது இடங்­களில் செல்லும் எமது பெண்­களை நிந்­தனை செய்­யலாம். அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தலாம்.

கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர்

கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் நிகாப் மற்றும் புர்கா விவ­காரம் தொடர்பில் கருத்­து­களை வெளி­யிட்­டுள்ளார்.
அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழேயே வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை விதிக்­கப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் அத்­தடை நீங்­கி­யுள்­ளது. பொலிஸ் தரப்பை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது முகத்­தி­ரைக்கு தடை­யில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. என்­றாலும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை அறி­விப்பு செய்­யப்­ப­ட­வில்லை. இலங்­கையில் சிறிய தொகை­யி­னரே புர்கா அணி­கின்­றனர். நிகாப் அணியும் பெண்­களின் எண்­ணிக்­கையும் குறை­வா­னதே.

இன்­றைய சூழ்­நி­லையில் முகத்­திரை தடை நீங்­கி­யுள்ள நிலையில் எமது பெண்கள் கால அவ­காசம் எடுத்து முகத்­திரை அணி­வதை ஆரம்­பிப்­பது நன்மை பயக்கும். ஏனென்றால் ஏனைய சமூ­கத்­தினர், தடை நீக்­கி­னாலும் எதிர்ப்­பு­களைத் தெரி­வித்து எமது பெண்­களை அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தலாம் என்றார்.

முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு

முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பும் பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முஸ்லிம் பெண்­களின் கலா­சார ஆடை­யான முகத்­திரை விவ­காரம் தொடர்பில் கடி­த­மொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அமைப்பு இது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பினை வெளி­யி­டு­மாறு தனது கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது. முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் பொலிஸ் ஊடக பேச்­சா­ளரை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் மூன்று பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் தடை மாத்­தி­ரமே நீடிப்­ப­தாக தன்­னிடம் கூறி­ய­தாக தெரி­வித்தார்.

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நாட்டின் பல பகு­தி­களில் முஸ்லிம் பெண்கள் மீண்டும் நிகாப் அணிய ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பாது­காப்பு பிரி­வி­னரால் அதற்கு எந்­தத்­த­டையும் இது­வரை விதிக்­கப்­ப­ட­வில்லை எனவும் முகத்­திரை அணிந்த குற்­றத்­திற்­காக எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை எனவும் கூறினார். இதே­வேளை தனியார் நிறு­வ­னங்­களில் முகத்­தி­ரைக்குத் தடை தொடர்­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார். இந்­நி­லையில் பொலிஸ் மாஅ­திபர் முகத்­திரை தொடர்பில் தெளி­வு­களை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டு­விட்­டாலும் அச்­சட்­டத்தின் கீழ் தடை செய்­யப்­பட்ட முஸ்லிம் பெண்­களின் ஆடை­யான நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீக்­கப்­பட்டு விட்­டதா? என்­பது தெளி­வற்ற நிலையில் உள்­ளதால் முஸ்லிம் பெண்கள் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்புக் கிடைக்கும் வரை விழிப்­புடன் செயற்­ப­டு­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் சமூ­கத்தை வேண்­டி­யுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் இது தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார். அவ்­வ­றிக்­கையில் அவர், அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு சிலர் நிகாப் மற்றும் புர்கா தடையும் நீங்­கி­விட்­ட­தாக பிர­சாரம் செய்து வரு­கி­றார்கள். அவர்­க­ளது பிர­சா­ரங்­க­ளின்­படி செயற்­ப­டு­வதைத் தவிர்த்து அர­சாங்கம் வெளி­யிடும் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே முஸ்லிம் பெண்கள் செயற்­பட வேண்டும்.

அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கிடைக்கும் வரை முகத்­திரை அணியும் முஸ்லிம் பெண்கள் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்­த­போது பொறு­மை­யா­கவும் நிதா­ன­மா­கவும் எவ்­வாறு கவ­ன­மாக நடந்து கொண்­டார்­களோ அவ்­வாறு தொடர்ந்தும் செயற்­ப­டு­வது தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் பாது­காப்­பா­னது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கரு­து­கி­றது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­தோடு இது விட­யத்தில் நாட்டின் சூழலைக் கருத்­திற்­கொண்டு மிகவும் சாணக்­கி­ய­மாக முஸ்லிம் சமூ­கத்தை வழி­ந­டத்­து­மாறு முஸ்லிம் சமயத் தலை­மை­க­ளிடம் முஸ்லிம் கவுன்ஸில் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து ஏனைய சமூ­கங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மீது கொண்ட சந்­தேகம் இன்னும் முற்றும் முழு­தாகத் தீர­வில்லை. புர்கா மற்றும் நிகாப் அணியும் முஸ்லிம் பெண்­களை அவர்கள் தொடர்ந்தும் தீவி­ர­வா­தி­க­ளா­கவே நோக்­கு­கின்­ற­மையை காண முடி­கி­றது. முகத்­தி­ரைக்­கான தடை நீங்­கி­னாலும் அந்தக் கலா­சார உடையை ஏனைய சமூ­கங்கள் அங்­கீ­க­ரித்து ஏற்றுக் கொள்­வ­தற்கு கால அவ­காசம் தேவைப்­படும். எனவே, முஸ்லிம் கவுன்­ஸிலின் கருத்­துப்­படி அரசின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்புக் கிடைக்கும் வரை எமது முகத்­திரை அணியும் பெண்கள் சூழ்­நி­லைக்­கேற்ப செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

முகத்­தி­ரைக்கு நிரந்­தரத் தடை விதிக்­கப்­ப­டுமா?

முஸ்லிம் பெண்கள் மீண்டும் நிகாப், புர்கா அணிய முடி­யுமா என்று தெளி­வற்ற நிலையில் இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டு­விட்­டது. அச்­சட்­டத்தின் கீழ் தடை செய்­யப்­பட்ட முகத்­தி­ரைக்­கான தடையும் நிச்­சயம் நீங்­கி­யி­ருக்க வேண்டும். ஆனால் பாது­காப்பு தரப்போ பாது­காப்பு அமைச்சோ தடை நீக்­கத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்புச் செய்­ய­வில்லை. இத­னாலே எமது பெண்கள் தெளி­வற்று இருக்­கி­றார்கள். அர­சாங்கம் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை வெளி­யி­டாமை சந்­தே­கங்­களை ஏற்­பத்­தி­யுள்­ளது.

நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு சட்ட ரீதி­யாக நிரந்­தர தடை விதிக்­கப்­ப­தற்­கான முயற்­சி­களை அரசு மேற்­கொண்­டுள்­ள­மையே இந்த சந்­தேகம் ஏற்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாகும். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள நிகாப் மற்றும் புர்­காவை நிரந்­த­ர­மாகத் தடை செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார். அமைச்­ச­ர­வையில் அமைச்­சர்கள் இத்­த­டைக்கு ஆத­ரவும் வழங்­கி­னார்கள் என்­றாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட வேண்­டு­மென்றும் அதற்கு கால அவ­காசம் வழங்­கு­மாறு வேண்டிக் கொண்­ட­தற்­கி­ணங்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கு­வதைப் பிற்­போட்­டது.

இதே­வேளை, முகத்­திரை தடைக்கு துணை­போக வேண்டாமென உல­மாக்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள். சுமார் 6000 பேர் தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் மாநாடு ஒன்­றினை நடத்தி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்­துள்­ளனர். இம்­மா­நாட்டில் அமைச்­சர்­க­ளாக ரவூப் ஹக்­கீமும், ரிசாத் பதி­யு­தீனும் முகத்­திரை நிரந்­தர தடைக்கு துணை­போக மாட்டோம் என்று உறு­தி­ய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அச்­சு­றுத்தல் சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் தடை?

நிகாப் மற்றும் புர்கா ஆடை­க­ளுக்கு முற்­றாகத் தடை விதிக்­காது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் அதனைத் தடை செய்யும் வகையில் சட்­ட­மி­யற்­று­வது தொடர்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆலோ­சனை கோரி­யுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­வினால் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட முகத்­திரை நிரந்­தர தடைக்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலை­யிலே அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள சட்­டமா அதி­ப­ரிடம் ஆலோ­சனை கோரி­யுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு நிரந்­தர தடையை ஏற்­ப­டுத்தும் வகையில் சட்டம் இயற்­றாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனைத் தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் அமைச்சர்கள் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெஸியின் தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடி எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பின்பே பிரதமரிடம் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்கள். இதனை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சரவையில்மீண்டும் கலந்துரையாடப்படும்

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கான தீர்மானம் விரைவில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதியே முகத்திரைக்கான நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்பு மீண்டும் அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

சட்டரீதியாக முகத்திரைக்கு தடை விதிக்கப்படாவிட்டாலும், முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு நிலைமைகளின்போது பாதுகாப்பு தரப்பிருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது இடங்களிலும் சூழ்நிலைக்கேற்ப செயற்படுவதே இன்றைய நிலையில் நன்மை பயப்பதாக அமையும்.

நிகாப், புர்கா தொடர்பில் அரசு இறுதி தீர்மானம் எட்டும்வரை அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு முகத்திரை தொடர்பாக நிலவும் சந்தேகங்களுக்கு பாதுகாப்புத் தரப்பு தாமதமின்றி தெளிவுகளை வழங்க வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.