முஸ்லிம்களின் சிறுவயதுத் திருமணங்கள் ஓர் ஆட்டுக் குட்டி ஓநாய் கதைதான்

0 1,206

அடுத்­த­வர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அல்­லது அச்சம் பயம் கார­ண­மாக முஸ்­லிம்கள் தங்­க­ளது வாழ்க்கை முறையை மட்­டு­மல்ல, இஸ்­லாமிய அடையாளங்களையும்­ கூட மாற்றி யமைப்­ப­தற்குத் தங்­களைத் தயார் பண்ணிக் கொள்­வோமா என்று பேசு­கின்ற நமது நாட்டில் முஸ்­லிம்­களின் சிறு­வ­யது திரு­ம­ணங்கள் என்ற விட­யத்­தி­லுள்ள யதார்த்­தங்கள் என்னவென்று நாம் ஒரு­முறை பார்ப்போம்.

அந்­நிய சமூ­கத்­தி­லுள்ள கடும் போக்­கா­ளர்கள் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் அவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்து பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கதை­களைச் சந்­தைப்­ப­டுத்தி வரு­கின்­றார்கள்.
முஸ்லிம் சாப்­பாட்டுக் கடை­களில் துப்­பிப்­போட்­டுத்தான் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு உணவு பரி­மா­று­கின்­றார்கள். முஸ்லிம் கடை­களில் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற புட­வை­களில் பெண்­க­ளுக்கு மலட்­டுத்­தன்மை உண்டு பண்­ணக்­கூ­டிய திர­வங்கள் பூசப்­பட்­டி­ருக்­கின்­றன. அவர்­களின் கடை­களில் ஆடை மாற்­று­கின்ற இடங்­களில் நிர்­வா­ண­மான வீடி­யோக்கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்­றெல்லாம் தொடர்ந்த இந்தக் கதைகள் இப்­போது முஸ்லிம் வைத்­தி­யர்கள் பெரும்­பான்மை சமூ­கத்தின் இனப் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­கின்ற வேலை­களைப் பார்த்து வரு­கின்­றார்கள் என்று அந்தப் பட்­டியல் நீண்டு கொண்டே போகின்­றது. நீதி­மன்­றங்­களும் விஞ்­ஞான ரீதி­யி­லான கருத்­துக்­க­ளின்­படி அப்­ப­டி­யெல்லாம் நடக்­க­வில்லை – அதற்­கான வாய்ப்புகள் இல்லை என்று அந்த சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களின் வாயாலே சொன்­னாலும், புல­னாய்­வுத்­துறை, நீதி­மன்­றங்­களும் கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு சார்­பாகப் பேசு­கின்­றன என்று அந்தக் கடும் போக்கு இன­வா­திகள் தமது நிலைப்­பாட்டில் உண்­மைக்குப் புறம்­பாக தொடந்தும் வாதம் பண்ணி வரு­வதை இன்று உல­கமே பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றது. என­வேதான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஆட்டுக் குட்டி – ஓநாய் கதைகள் பற்றி நாம் சொல்லி வரு­கின்றோம். இதன் பின்­னரும் அப்­ப­டித்தான் நடக்கும் அதில் மாற்­றங்கள் இருக்­காது என்று நாம் கரு­து­கின்றோம்.

பெரும்­பான்மைக் கடும்­போக்­காளர் அப்­படிப் பேசு­வதில் ஓர் அடிப்­படை இருக்­கின்­றது – அதற்கு ஓர் இலக்கு இருக்­கின்­றது. இந்த நாட்டில் முஸ்­லிம்­களை ஒடுக்கி அடி­மைகள் போல் வைத்துக் கொள்­வதும் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை முடக்­கு­வதும் அதில் முக்­கி­ய­மா­னது.
மீண்டும் முஸ்­லிம்­களின் இள­வ­யதுத் திரு­மணம் என்ற விடயத்­திற்கு வருவோம். இதே நோக்­கில்தான் முஸ்­லிம்­க­ளு­டைய இந்த விவ­காரம் தொடர்­பாக அவர்கள் பேசி வரு­கின்­றார்கள். இது விட­யத்தில் உள்ள யதார்த்தம் என்­ன­வென்று இப்­போது பார்ப்போம். அதற்­காக கண்­களை மூடிக் கொண்டு வாய்க்கு வந்த தக­வல்­க­ளுடன் பேசு­வது எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்கள் என்ன என்று பார்ப்போம்.
இலங்­கையில் கடை­சி­யாக நடந்த குடித்­தொகைக் கணக்­கெ­டுப்­பின்­படி இந்த இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் பற்றி உத்­தி­யோ­க­பூர்­வ­மான தக­வல்கள் இப்­ப­டித்தான் பதி­வாகி இருக்­கின்­றன.

2012 ஆம் ஆண்டு 15 வய­துக்குக் கீழ்ப்­பட்ட திரு­ம­ணங்கள்

மொத்தம்: 3204
சிங்­க­ளவர்: 2200
தமிழர்: 511
முஸ்­லிம்கள்: 471
ஏனையோர்: 22

15 வய­துக்கும் 19 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள்

மொத்தம்: 87633
சிங்­க­ளவர்: 62630
தமிழர்: 12642
முஸ்­லி­ம்கள்: 11916
ஏனையோர்: 445

எனவே யதார்த்தம் இப்­படி இருக்­கும்­போது நம்­ம­வர்­கள்­கூட இது பற்றி இன்று பர­வ­லாக பேசி நமது பக்­கத்தில் பெரிய தவ­றுகள் நடக்­கின்­றன. இதில் மாற்­றங்கள் தேவை என்று வாதி­டு­கின்­றனர். இதில் மாற்­றங்கள் தேவை என்று கடும்­போக்குப் பேரி­ன­வா­திகள் ஒப்­பாரி வைப்­பது முஸ்­லிம்­களின் இனப் பெருக்கம் தொடர்­பி­லான அச்சத்தினாலேயே. நம்­ம­வர்கள் மாற்றம் கோரு­வது எதற்­காக என்று எமக்குப் புரி­ய­வில்லை.

ஏதோ முஸ்லிம் சமூ­கத்தில் மட்­டும்தான் இள­வ­யது திரு­ம­ணங்கள் என்று எல்­லோரும் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­ற­போது உண்மை இப்­ப­டித்தான் இருக்­கின்­றது என்று அரசு புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

முஸ்­லிம்­களின் இள­வ­யதுத் திரு­ம­ணங்கள் பற்றிப் பேசு­கின்ற ஒரு முக்­கிய பெண் செயற்­பாட்­டா­ள­ருடன் நாம் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு. இந்தப் புள்ளி விப­ரங்­களைச் சொல்­லாமல் நாம் பேச்சுக் கொடுத்து, என்ன இந்த இள­வ­யதுத் திரு­ம­ணங்கள். இது முஸ்லிம் சமூ­கத்தில் மட்­டுமா நடக்­கின்­றது என்று கேட்­ட­தற்கு ஆம்..! ஆம்..! சிங்­கள சமூ­கத்தில் அப்­படி எல்லாம் நடக்­காது. சட்­டப்­படி அவர்­க­ளுக்கு அதனை செய்­வ­தற்கு வாய்ப்­புக்கள் இல்லை. முஸ்லிம் சமூ­கத்தில் தான் இது 90 வீதம் நடக்­கின்­றது என்று அடித்துக் கூறினார் அவர்.

கதை அப்­ப­டியா இருக்­கின்­றது இது­பற்­றிய புள்ளி விப­ரங்கள் ஏதா­வது உங்­க­ளிடம் இருக்­கின்­றதா என்று நாம் கேட்­ட­தற்கு இல்லை. ஆனால் எங்­க­ளுக்குத் தெரியும் என்­பது அவர் பதி­லாக இருந்­தது.

அப்­போது இப்­படி ஒரு தகவல் இருக்­கின்­றது என்று நாம் புள்ளி விப­ரங்­களைச் சொன்னபோது அப்படியா? இதுவரை நாங்கள் அப்படி ஒரு தகவலைப் பார்க்கவில்லை என்றார் அவர். சகோதரர்களே நிலைமை புரிகின்றா?
சிங்கள சமூகத்தில் இப்படி இளவயதுத் திருமணங்கள் பெருமளவில் நடக்கின்றன என்று அவர்கள் சமூகத்தில் யாராவது பேசுகின்றார்களா? கவலைப்படுகின்றார்களா? என்றுதான் நாம் எல்லோரையும் கேட்க வேண்டியிருக்கின்றது.

தொடர்ந்தும் நாம் இது போன்ற ஆட்டுக் குட்டி – ஓநாய் கதைகளை சமூகத்திற்கு சொல்லலாமென எதிர்பார்க்கின்றோம்.

நஜீப் பின் கபூர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.