காத்தான்குடியில் சிங்கள – முஸ்லிம் உறவுகள்

விமலதர்மசூரிய மன்னனின் தலைமைச் சிப்பாய் ஒரு முஸ்லிம்

0 1,295

சர­தி­யலும் மம்­மாலி மரிக்­காரும் உற்ற தோழர்கள்.. பிரித்­தா­னிய அர­சுக்­கெ­தி­ராகப் போரா­டிய அவர்கள் இரு­வரும் செல்­வந்­தர்­களின் சொத்­துக்­களைக் கொள்­ளை­யிட்டு ஏழை­க­ளுக்குப் பங்­கிட்டுக் கொடுத்து வந்­தனர். 1864 மார்ச் மாதம் 21 ஆம் திகதி இவர்கள் இரு­வரும் மறைந்­தி­ருந்த வீடு பிரித்­தா­னிய பொலி­சாரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு இரு­வரும் கைது­செய்­யப்­பட்­டனர்.

சர­தி­ய­லுக்கும் மம்­மாலி மரிக்­கா­ருக்கும் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டதன் பிர­காரம் 1864 மே மாதம் 07 ஆம் திகதி போகம்­பறை மைதா­னத்தில் இரு­வரும் பகி­ரங்­க­மாகத் தூக்­கி­லி­டப்­பட்டுக் கொல்­லப்­பட்­டனர். பின்னர் சர­தி­யலின் சடலம் கிறிஸ்­தவ பாதிரி ஒரு­வ­ரி­டமும் மம்­மாலி மரிக்­காரின் சடலம் முஸ்லிம் மத­போ­தகர் ஒரு­வ­ரி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டன.

இக்­கு­றிப்­புகள் காத்­தான்­கு­டியில் அமைந்­துள்ள மர­பு­ரிமைக் காட்­சி­ய­கத்தில் உள்ள குறிப்­பிட்ட கூடா­ரத்­தி­லி­ருந்து பெறப்­பட்­ட­வை­யாகும்.

இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் தனித்­து­வ­மான அடை­யா­ளங்­களைச் சித்­தி­ரிக்கும் மாதி­ரிகள் இக்­காட்­சி­ய­கத்தில் காணக் கிடைக்­கின்­றன.

சர­தி­யலும் மம்­மாலி மரிக்­காரும் தூக்­கி­லிட்டுக் கொல்­லப்­பட முன்னர் அவர்­க­ளுக்­கான இறுதி சமயச் சடங்­குகள் கிறிஸ்­தவப் பாதி­ரியார் மற்றும் முஸ்லிம் மத­போ­த­கரால் நிறை­வேற்­றப்­படும் காட்­சிகள் மிகவும் தத்­ரூ­ப­மாகக் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சர­தி­ய­லையும் மம்­மாலி மரிக்­கா­ரையும் கைது­செய்யச் சென்று துப்­பாக்கிச் சூடு­பட்டு இறந்த துவான் ஷாபானின் மாதிரி உரு­வொன்றும் இங்கே வைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் ஒரு­வ­ராக இருந்த துவான் ஷாபான் இலங்கை பொலிஸ் வர­லாற்றில் புகழ்ந்து குறிப்­பி­டப்­பட்­டுள்ளார். பொலிஸ் பணியில் உயிர்­து­றந்த முத­லா­வது வீர­ராக இவர் வர­லாற்றில் பதி­யப்­பட்­டுள்ளார். கண்டி பொலிஸ் நிலை­யத்தில் பணி­பு­ரிந்­து­வந்த ஷாபான் இவ்­வாறு கட­மை­யி­லி­ருந்­த­போது துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி மர­ண­ம­டைந்த நாள் 1864 மார்ச் மாதம் 21 ஆம் திக­தி­யாகும். இந்த வர­லாற்றின் அடிப்­ப­டை­யி­லேயே ஒவ்­வோ­ராண்டும் மார்ச் மாதம் 21 பொலிஸ் வீரர்கள் தின­மாக நினை­வு­ப­டுத்தப் படு­கின்­றது.

பாது­காப்புக் கட­மையின் போதும் தாய்­நாட்டின் இறை­மையைக் காப்­பாற்றும் பொருட்டும் தமது இன்­னு­யிர்­களை ஈந்த பல முஸ்லிம் வீரத் தியா­கி­களின் வர­லா­று­களை சித்­தி­ரிக்கும் அதி­க­மான காட்­சிகள் இங்கே வைக்­கப்­பட்­டுள்­ளன.
அவ்­வா­றான ஒரு வர­லாற்றுக் காட்­சி­யாக 1594 ஆம் ஆண்டு போர்த்­துக்­கே­ய­ருக்கு எதி­ராக இலங்­கையர் மேற்­கொண்ட போராட்­டமும் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் போராட்­டத்தைப் பற்றி 1687 இல் Fernao de Queroz எனும் புகழ்­பெற்ற போர்த்­துக்­கேய வர­லாற்­றா­சி­ரியர் எழு­திய The Temporal and Spiritual Conquest of Ceylon எனும் பெயரில் ஒரு நூலையே எழு­தி­யி­ருப்­ப­தாக இங்­குள்ள ஒரு பதி­வேட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் அந்த நூலில் தன்­துரே (Danthure) போராட்டம் பற்­றியும் சொல்­லப்­பட்­டுள்ள பகு­தியில்: ‘துணிச்சல் நிறைந்த ஒரு சிங்­கள வீரரைப் போலவே பிர­ப­ல­மான சோனகத் தலை­வ­ரு­மான கோபால முத­லி­யாரும் போர்த்­துக்­கே­யரால் கைது­செய்­யப்­பட்டார். கோபால முத­லி­யாரை விடு­விப்­ப­தற்­காக மக்கள் 5000 பெகோடா (அப்­போ­தைய போர்த்­துக்­கேய நாணய அலகு)க்களை மக்கள் செலுத்தத் தயா­ராக இருந்த போதிலும் அதனால் பய­னேதும் கிட்­ட­வில்லை. போர்த்­துக்­கேயர் கோபால முத­லி­யாரைக் கொன்­று­விட்­டனர்.

மேலும் கோபால முத­லி­யாரைப் பற்றி அந்த நூலில் கீழ்­வ­ரு­மாறு சொல்­லப்­பட்­டுள்­ளது:

விம­ல­தர்­ம­சூ­ரிய மன்­னனின் படைத்­த­ள­ப­தி­யாக இருந்­த­வரே கோபால முத­லியார். 1594 ஆம் ஆண்டு போர்த்­துக்­கேய ஆளு­ந­ரான Pedro Lopes de Sousa கண்­டியை ஆக்­கி­ர­மித்தான். அவ­னுக்கு எதி­ராகத் தொடுக்­கப்­பட்ட போராட்­டமே தன்­துரே போராட்­ட­மாகும். அதற்குத் தலைமை தாங்­கி­ய­வரே கோபால முத­லியார். அப்­போரில் பறங்­கியர் தோல்­வி­கண்டு பின்­வாங்­கினர். ஆயினும் கோபால முத­லி­யாரைப் பறங்­கியர் எப்­ப­டியோ பிடித்துக் கொண்­டனர். தாய்­நாட்­டுக்­காக இவ்­வாறு முத­லா­வது உயிர்­து­றந்த தேசப் பற்­றா­ளரே கோபால முத­லியார். இவ­ரது முழுப்­பெயர் ராஜ­க­ருணா வேக­மி­கோ­பல்ல தூவ­கொட முதி­யன்­சே­லாகே ஷெய்க் சல்தீன் பின் அத்தாஸ் துஸையில் உடையார் Rajakaruna Veygemi Gopalla Dhoowagoda Mudiyanselage Sheikh Saldeen Bin Aththas Thusaiyil Udayar) என்­ப­தாகும்’

இது­போன்ற இன்னோர் உயிர்­து­றந்த தேசப்­பற்­றா­ளரின் கதையும் இக்­காட்­சி­ய­கத்தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது.. அதுதான் தன் தாய்­நாட்­டுக்­காக உயிர்­து­றந்த ஒரு முஸ்லிம் வீரத் தாயின் கதை.

‘சிங்­கள மன்­னனின் உயிரைக் காப்­பாற்­று­வ­தற்­காகத் தன்­னுயிர் ஈந்த முஸ்லிம் வீரத் தாய்’ என்ற தலைப்பில் ஒரு கூடாரம் இங்கே உள்­ளது.
இரண்டாம் ராஜ­சிங்க மன்னன் (1636 – 1687) போர்த்­துக்­கே­யரால் தோற்­க­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அந்த மன்னன் தனது உயிரைக் காப்­பாற்றிக் கொள்ளும் பொருட்டு அப்­போது முஸ்­லிம்கள் வாழ்ந்­து­வந்த பங்­க­ர­கம்­மன எனும் ஊரின் ஊடாகத் தப்­பி­யோடிக் கொண்­டி­ருந்தான். மிகவும் களைப்­புற்­றி­ருந்த மன்னன் மறைந்­து­கொள்ள ஓர் இடத்தைத் தேடிச் சுற்­று­முற்றும் பார்த்­த­போது தனக்குப் பின்னால் பெரி­ய­தொரு பலா மரத்தின் பொந்து ஒன்றைக் கண்டு அதற்குள் மறைந்து கொண்டான். அப்­போது அவ்­வி­டத்­துக்கு அருகில் அவ்­வூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்­மணி தன் பசு­மாட்­டி­லி­ருந்து பால் கறந்து கொண்­டி­ருந்தார். மன்னன் இவ்­வாறு மரப் பொந்­துக்குள் மறை­வ­தையும் அப்­பெண்­மணி கண்­டு­கொண்டார்.

மன்­னனைப் பின்­தொ­டர்ந்து விரட்­டி­கொண்­டு­வந்த போர்த்­துக்­கேயர் சட்­டென மன்னன் மறைந்­து­வி­டவே மன்னன் எங்கே ஓடி­ம­றைந்தான் என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யாமல் தடு­மா­றிய போர்த்­துக்­கேய வீரர்கள் அங்கே பால் கறந்து கொண்­டி­ருந்த அப்­பெண்­ம­ணி­யிடம் மன்­னனைப் பற்றி விசா­ரித்­தார்கள். எவ்­வ­ளவு அதட்டி, கடு­மை­யாக அடித்து விசா­ரித்­த­போ­திலும் அப்­பெண்­மணி தனக்கு எதுவும் தெரி­யா­தென்றே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்­டி­ருந்தார். மன்னன் மறைந்­தி­ருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்­கவே இல்லை. இறு­தியில் கடும்­கோ­ப­முற்ற போர்த்­துக்­கேயர் அப்­பெண்­ம­ணியை வெட்டிக் கொன்­று­விட்­டனர்.

இதுதான் சிங்­கள மன்­னனின் உயிர்­காக்கத் தன்­னுயிர் ஈந்த முஸ்லிம் வீரத் தாயின் கதை. இந்த வர­லாற்று நிகழ்வும் இக்­காட்­சி­ய­கத்தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான வர­லாற்று நிகழ்­வு­களைக் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள மர­பு­ரிமைக் காட்­சி­ய­கத்­தினை அமைத்­தி­ருப்­பதன் நோக்கம் நம் எல்­லோ­ருக்கும் பொது­வான ஒரு வர­லாறு இருந்­துள்­ளது என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­வ­தாகவுள்ளது.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றையும் அவர்கள் நாட்­டுக்குச் செய்­துள்ள சேவை­களைத் தெளி­வு­ப­டுத்­து­வதும் இக்­காட்­சி­ய­கத்தின் நோக்­கங்­களுள் ஒன்­றா­கு­மென இங்­குள்ள தகவல் தருநர் எங்­க­ளிடம் எடுத்துச் சொன்னார்.
2013 ஆம் ஆண்டு ‘தேசத்­துக்கு மகுடம்’ நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் கலா­சார விவ­கார அமைச்சர் கலா­நிதி ஜகத் பால­சூ­ரி­யவின் ஈடு­பாட்­டோடும் பிராந்­தி­யத்தின் அப்­போ­தைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிரதி அமைச்­ச­ரு­மான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வினால் நிர்­மா­ணித்துத் திறந்­து­வைக்­கப்­பட்­டுள்ள இந்த மர­பு­ரிமை நூத­ன­சாலை, தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கீழ் இயங்கி வரு­கி­றது.

வர­லாற்றுத் தக­வல்கள் மட்­டு­மல்­லாமல் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தாரப் பங்­க­ளிப்­புகள் மற்றும் கலா­சாரப் பாரம்­ப­ரி­யங்கள் குறித்த ஏரா­ள­மான தக­வல்­களும் இங்கே காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

புடவைக் கைத்­தொ­ழி­லிலும் துணி­க­ளுக்கு நிற­மூட்டி அலங்­க­ரித்து அச்­சிடும் தொழில்­நுட்­பத்­திலும் முஸ்­லிம்கள் முன்­னோ­டி­க­ளாக இருந்­துள்­ளனர். கிழக்கே மரு­த­முனை, காத்­தான்­குடிப் பகு­தி­க­ளிலும் தெற்கே பல­பிட்­டிய பகு­தி­க­ளிலும் புடவைக் கைத்­தொழில் துறையின் வளர்ச்­சிக்குப் பாரிய பங்­க­ளிப்பைச் செய்­தி­ருப்போர் முஸ்­லிம்­களே!

இன்­று­கூடப் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் இக்­கைத்­தொழில் துறையின் வளர்ச்­சிக்குத் தொடர்ந்தும் முஸ்­லிம்கள் பங்­க­ளிப்புச் செய்து வரு­கின்­றனர்.

முஸ்­லிம்­களின் பாரம்­ப­ரிய தொழில்­நுட்ப மர­பு­ரி­மைகள் குறித்து இங்­குள்ள காட்­சிப்­ப­டுத்­தல்­களும் பார்­வை­யா­ளரைப் பெரிதும் ஈர்க்கச் செய்­கின்­றன.
அந்த வகையில் கிணறு நிர்­மா­ணிக்கும் அவர்­க­ளது பண்­டைய தொழில்­நுட்பம் மிகவும் விஷே­ட­மா­னது. இன்று போல் கொங்க்ரீட் தொழில்­நுட்­பங்கள் இல்­லாத அந்தப் பண்­டைய காலங்­களில், அதுவும் முற்­றிலும் மணற்­பாங்­கான இந்தப் பிர­தே­சங்­களில் கிண­று­களை அமைக்க அவர்கள் கையாண்­டுள்ள தொழில்­நுட்பம் மிகவும் ஆச்­ச­ரி­ய­மா­ன­தாகும். பாரிய மரக் குற்­றி­களின் நடுப்­ப­கு­தியைக் குடைந்து அகற்றி, நீண்ட சிலிண்டர் வடிவில் வடி­வமைத்துக் கொள்­கின்­றனர். பின்னர் மரத்தில் செய்­யப்­பட்ட அந்தச் சிலிண்டர் வடி­வத்தை மணல் பூமிக்குள் அடியில் நீர்­மட்டம் கிடைக்கும் வரை அழுத்திப் புதைக்­கின்­றனர். பூமிக்­க­டியில் நீர்­மட்­டத்தை அடைந்­த­வுடன் கிணறு போலப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இத்­த­கைய பண்­டைய கிண­றுகள் ‘கோட்டுக் கிணறு’ என அழைக்­கப்­பட்­டது.

இன்­னொரு கூடா­ரத்­திலே பிரித்­தா­னிய காலத்­தி­லேயே முஸ்லிம் செல்­வந்­தர்­களின் வீடு­களில் இருந்த வர­வேற்­பறை ஒன்றும் அங்கு காணப்­பட்ட தள­பா­டங்­களின் மாதி­ரி­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­த­கைய தள­பா­டங்­களுள் சாய்­மனை ஒன்றும் பல­வ­கை­யான வேறு தள­பா­டங்­களும் வைக்­கப்­பட்­டுள்­ளன. பண்­டைய சாய்வு நாற்­கா­லி, அலு­மாரி, மான் கொம்­பு­க­ளா­லான ஆடைக் கொழுக்­கிகள், புரா­தன வானொலிப் பெட்டி, 1857 இல் செய்­யப்­பட்­டி­ருந்த கதவு மற்றும் கதவுச் சட்­டகம், 150 ஆண்­டுகள் பழ­மை­யான சென். தோமஸ் ரகத்­தி­லான சுவர்க்­க­டி­காரம், ட்றெசிங் மேசை போன்ற ஏரா­ள­மான மிகப்­ப­ழங்­காலப் பொருள்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய பண்­டைய வீட்டுப் பொருட்கள் மற்றும் முஸ்­லிம்­களின் ஆடை அணி­க­லன்­களை நுணுக்­க­மாக அவ­தா­னித்துப் பார்க்­கும்­போது, முஸ்­லிம்கள் தலையில் அணியும் தொப்­பியைத் தவிர இடையில் அணியும் வார்ப்­பட்டி முத­லான மற்­றெல்லா ஆடை அணி­க­லன்­களும் பண்­டைய நாட்­டுப்­புறச் சிங்­கள மேல்­தட்டுப் பிர­புக்­களின் வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடை அணி­க­லன்­களைப் பெரிதும் ஒத்­த­ன­­வா­கவே இருந்­தி­ருப்­பதைக் கண்­டு­கொள்­ளலாம்.
இவை­த­விர, இந்­நாட்­களில் பெரும் சர்ச்­சை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள மத்­ரஸா பாட­சாலை ஒன்றின் மாதி­ரியும் இங்கே காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது. ‘முஸ்லிம் பிள்­ளைகள் புனித குர்­ஆ­னையும் மார்க்க அறி­வையும் அரபு மொழி­யையும் ஆலிம் (மார்க்க அறி­ஞர்கள்)களிடம் கற்றுக் கொள்ளும் இடமே மத்­ரஸா எனப்­ப­டு­கி­றது.’

இன்­னொரு கூடா­ரத்தில் பொல­ன்ன­று­வையில் மன்­ன­னாக இருந்த பராக்­கி­ர­ம­பா­குவின் அரச சபையில் சபை நிகழ்­வுகள் நிகழும் காட்சி ஒன்றும் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

‘மகா பராக்­கி­ர­ம­பாகு 1153 முதல் 1186 வரை இலங்­கையை ஆட்­சி­செய்த மன்­ன­னாவான். பொல­ன்ன­று­வையைத் தலை­ந­க­ராகக் கொண்டு தனது மூன்று இள­வ­ர­சர்கள் மூல­மாக முழு இலங்­கை­யையும் மூன்று ராஜ­தா­னி­க­ளாக ஒன்­றி­ணைத்து ஆண்டு வந்தான். இவ்­வாறு முழு இலங்­கை­யையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட வர­லாற்றின் கடைசி மன்னன் மகா பராக்­கி­ர­ம­பாகு மன்­னனே ஆவான். தனது ஆட்­சியை விஸ்­த­ரித்­த­தோடு மட்­டு­மல்­லாமல் நாட்டை அழகு படுத்­து­வ­திலும் பிர­தான நீர்ப்­பா­சன வசதிக் கட்­ட­மைப்­பு­க­ளையும் நிறுவி இருந்தான். அத்­துடன் நாட்டின் பாது­காப்­புக்­காகப் பல­மான ராணுவக் கட்­ட­மைப்­பையும் நிறுவி அதை பெளத்த நெறி­மு­றை­க­ளின்­படி வழி­ந­டாத்­தினான். கலை­களின் வளர்ச்­சிக்கும் அவன் பெரிதும் பங்­க­ளிப்புச் செய்தான்.

‘ஒரு துளி மழை நீரும் குடி­மக்­களின் பிர­யோ­ச­னத்­துக்குப் பயன்­ப­டாமல் வீணாகக் கடலில் சென்று கலக்க விட­மாட்டேன்’ என்று அவன் கூறிய கூற்று வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளது.

பராக்­கி­ர­ம­பாகு மன்­னனின் அமைச்­ச­ர­வையில் 16 அமைச்­சர்கள் இருந்­தனர். அவர்­களுள் நால்வர் முஸ்லிம் அமைச்­சர்கள் என்­பது விஷே­ட­மாகக் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.’

இவ்­வா­றான சகல மாதி­ரி­களும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­ப­த­னூ­டாக இவர்கள் சொல்ல வரும் பிர­தா­ன­மான ஒரு செய்தி உள்­ளது. ‘எங்­க­ளுக்­கென்று தனித்­து­வ­மான அடை­யா­ளங்கள் இருந்­துள்­ளன. அதே­வேளை, இலங்­கையர் என்ற வகையில் நம் எல்­லோ­ருக்­குமே சொந்­த­மான பொது­வான மர­பு­ரிமை அடை­யா­ளங்­களும் கடந்த காலங்­களில் இருந்­துள்­ளன. இவற்­றி­னூ­டாக நாமெல்­லோரும் எதிர்­கா­லத்தை நோக்கி ஐக்­கி­ய­மாகப் பய­ணிப்போம்’ என்­பதே அந்தச் செய்­தி­யாகும்.

வரி­சை­யாக நடப்­பட்­டுள்ள பேரீச்சை மரங்­களால் அழ­கூட்டப் பட்­டி­ருக்கும் காத்­தான்­கு­டியின் விசா­ல­மான வீதி­யி­லா­கட்டும், சனம் நிரம்பி வழியும் வாராந்தச் சந்­தை­யி­லா­கட்டும், எழி­லார்ந்த கடற்­க­ரை­யி­லா­கட்டும்… இவை­யெங்­குமே இந்தப் பொதுச் செய்­தியே வெளிப்­பட்டு நிற்­கின்­றது!

அதே­வேளை, இதற்கு மாறான எத்­த­னிப்­பு­களும் இல்­லா­ம­லில்லை. ஏனைய சமூ­கங்­களில் போலவே இங்கும் இத்­த­கைய பொது­வான சிந்­த­னையை, கனவைக் கலைக்­கும்­ப­டி­யான முயற்­சி­களும் இருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கலாம்..

காத்­தான்­குடிப் பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து கடற்­க­ரையை நோக்கிச் செல்லும் ஒரு கிளை வீதியில் அமைந்­துள்ள – தற்­போது பாழ­டைந்து வெறிச்­சோடிக் கிடக்கும் – ஸஹ்­ரானின் பள்­ளி­வாசல் அத்­த­கைய துர­திர்ஷ்­ட­வ­ச­மான முயற்­சி­யொன்றின் அடை­யா­ள­மாகும். ஆயினும் இன்­றெ­வ­ருமே அதனை ஏறெ­டுத்தும் பார்ப்­ப­தில்லை. அன்றும் பார்க்­க­வில்லை.

அத­னால்தான், அவன் தனது வாழ்க்­கையை விட்டும் பிரி­வ­தற்கு முன்­பாக இந்த நக­ரை­விட்டும் பிரிந்து செல்ல நேர்ந்­தது!

ஆயினும் இந்த நக­ரத்தின் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் பொதுக் கனவைக் கலைத்­துப்­போடப் பிறந்த ஒரே மனிதன் ஸஹ்ரான் மட்­டு­மே­யாக இருக்க முடி­யாது!

இற்­றைக்குப் பதி­னாறு ஆண்­டு­க­ளுக்கு முன் அதா­வது, 2003 ஆம் ஆண்டு செப்­டம்பர் முதல் பகுதி அல்­லது ஆகஸ்ட் இறுதிப் பகு­தியின் ஒரு நாள் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் அப்­போ­தைய முஸ்லிம் காங்­கிரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அன்வர் இஸ்­மாயில் அவர்­க­ளிடம் ஒரு கேள்­வியை எழுப்பி இருந்தார்:

‘கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் இளை­ஞர்கள் வன்­மு­றை­க­ளின்பால் சென்­று­கொண்­டி­ருப்­ப­தாக செய்­யப்­படும் பிர­சாரம் குறித்து நீங்கள் என்ன சொல்­கி­றீர்கள்?’

இந்தச் செவ்வி 2003 செப்­டம்பர் 07 ஆம் திகதி வெளி­யான ‘தின­கர’ (தின­கரன் அல்ல, இது அப்­போது வெளி­வந்த ஒரு சிங்­களப் பத்­தி­ரிகை) பத்­தி­ரி­கையில் வெளி­யாகி இருந்­தது. நான் அப்­போது அந்தப் பத்­தி­ரி­கையின் விஷேட பகு­தியின் ஆசி­ரி­ய­ராக இருந்தேன். அதற்கு அண்­மித்த ஒரு தினத்தில் நான் காத்­தான்­கு­டிக்கு சுற்­றுப்­ப­யணம் வந்­தி­ருந்தேன் என்று நினை­வி­ருக்­கி­றது. அப்­போதும் அங்கு இக் கேள்­வியை எழுப்­பி­யது நினை­வுக்கு வரு­கி­றது. அக்­கா­லப்­ப­கு­தியில் இக்­கேள்­வியை எழுப்­பு­வ­தற்­கான ஒரு கார­ண­மி­ருந்­தது. அதுதான் அப்­போது முஸ்லிம் மக்­களின் பாது­காப்பு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை. அதா­வது, பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கும் விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த காலப்­ப­குதி அது. வடக்கும் கிழக்கும் இணைந்­தி­ருக்க வேண்­டுமா பிரிந்­தி­ருக்க வேண்­டுமா எனும் விவாதம் மீண்டும் சூடு­பி­டித்­தி­ருந்த காலப்­ப­குதி அது. முஸ்­லிம்­களின் பாது­காப்பு பற்­றிய பிரச்­சினை மேலெ­ழுந்­தி­ருந்த காலப்­ப­குதி அது.

அந்த செவ்­விக்கு அன்று நாமிட்­டி­ருந்த தலைப்பு “பாது­காப்புத் தர முடி­யாத ஓர் அர­சாங்­கத்தில் நாம் தொடர்ந்தும் இருக்க முடி­யாது !” என்­ப­தாகும். மேலுள்ள கேள்­விக்கு முஸ்லிம் காங்­கிரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் அன்று கொடுத்­தி­ருந்த பதில்:

“தற்­போது முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பு இல்லை. அர­சாங்கம் கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்புத் தரா­விட்டால் எங்­க­ளது பாது­காப்­புக்­காக நாம் போரா­ட­வேண்டி வரும். அப்­ப­டி­யொரு நிலை ஏற்­ப­டு­மானால் ஜிஹாத், அல்­கைதா என்று பேசிக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை. (அப்­போது ISIS இருக்கவில்லை) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கும். வேறெந்த மாற்றுவழிகளும் இல்லாவிட்டால் செய்யவேண்டியிருப்பது அதுதான்.”

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் பதிலில் வெளிப்படுவது, அன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்த ஒடுக்குமுறைகளின் தன்மைதான்.

இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளன சூழலில் ஒடுக்குமுறையின் வடிவங்கள் சற்றுத் தணிந்து போயிருந்தாலும் அந்த ஒடுக்குமுறைகளின் அடிப்படை மூலங்கள் எவ்வளவு தூரம் தூர்ந்துபோயுள்ளன எனத் தெளிவாகச் சொல்லக்கூடியவர் எவருமிலர். அதுதவிர, இப்போது ஏராளமான புதுப்புதுப் பிரச்சினைகளும் வளர்ந்துகொண்டே செல்கின்றன. காணிப் பிரச்சினையிலிருந்து மத்ரஸாக்கள் ஊடாக காத்தான்குடி நகர மத்தியிலுள்ள பேரீச்சை மரங்கள் வரையிலும் பிரச்சினைகள் வியாபித்துப் பெரும் சிக்கலாகி விட்டுள்ளன. ஆயினும் இவை குறித்த பரந்துபட்ட உரையாடல்கள் இந்நாட்டின் ஊடகங்களிலோ புத்திஜீவிகள் மத்தியிலோ அரசியல் வட்டாரங்களிலோ போதிய முக்கியத்துவம் பெற்றிருப்பதாகத் தெரியவேயில்லை.

இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற அபாய எச்சரிக்கைத் தகவல்களின் அடிப்படையில் ஏன் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை? அதற்கான பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? என்றெல்லாம் ஆய்வுசெய்வதில்தான் இன்றுகூடப் பெரும்பாலானவர்களின் கவனமெல்லாம் குவிந்திருக்கின்றன. அதற்கப்பால் சென்று இப்பிரச்சினைகளின் உண்மையான ஆழ அகலங்களைத் தேடிப் பார்க்கும் ஆய்வுகளோ தேடல்களோ அதற்கான முயற்சிகளோ நடப்பதாக இல்லை. பொதுமக்களிடையேயும் இதுகுறித்த உரையாடல்கள் இல்லை. இவர்களில் அநேகரின் சிந்தனையெல்லாம் அடுத்த ஜனாதிபதி அபேட்சகரைப் பற்றியே அல்லாமல் அடுத்து நிகழவிருக்கும் ஆபத்தைப் பற்றியதல்ல !

நன்றி: அருண – 25.08.2019

Leave A Reply

Your email address will not be published.