பொலிஸாரின் உத்தரவினால் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்

0 902

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அலை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் மே 13 ஆம் திகதி முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இந்த வன்­செ­யல்­க­ளின்­போது முஸ்­லிம்­களின் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்கள் இலக்கு வைக்­கப்­பட்­டன.

மே மாதம் 13 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் குருநாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் சேதங்­க­ளுக்­குள்­ளா­கின. பல பள்­ளி­வா­சல்கள் தீயிட்டு எரிக்­கப்­பட்­டன.
என்­றாலும் முஸ்லிம் சமூகம் தனது சமயக் கட­மை­களை நிறுத்­திக்­கொள்­ள­வில்லை. சில தினங்­களிலேயே பள்­ளி­வா­சல்­களில் சிறிய திருத்த வேலை­களை முன்­னெ­டுத்து தனது சமயக் கட­மை­களை மீண்டும் ஆரம்­பித்­தனர். ஜமா­அத்­தார்கள் தங்­க­ளது பள்­ளி­வா­சல்­களை மீளப் புன­ர­மைப்­பதில் அதிக அக்­கறை காட்­டி­னர்.

பள்­ளி­வா­சல்­களின் புனர்­நிர்­மாணப் பணி­க­ளுக்கு முதற்­கட்­ட­மாக வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சினால் ஒருதொகை நிதி­யு­த­வியும் வழங்­கப்­பட்­டது.

இந்நிலையில்தான் இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்று கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் உத்தரவின்பேரிலேயே இப் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் கொட்டாம்பிட்டியில் அமைந்துள்ள லுஃலு அம்மார் பள்ளிவாசலே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

லுஃலு அம்மார் பள்­ளி­வாசல்

ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டாம்­பிட்­டி­யிலே இந்த லுஃலு பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்­கி­றது. இதே­வேளை கொட்­டாம்­பிட்­டியில் மஸ்­ஜிதுல் ஹுதா என்ற பெயரில் பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­ச­லொன்றும் இயங்கி வரு­கி­றது. கொட்­டாம்­பிட்டி லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் செய­லாளர் முஹம்மத் ஷாபி வழங்­கிய தக­வல்­க­ளின்­படி லுஃலு பள்­ளி­வா­சலை மையப்படுத்தி சுமார் 50 குடும்­பங்கள் வாழ்­கின்­றன. சுமார் 200 பேர் 50 குடும்­பங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளனர். இதுவொரு தௌஹீத் பள்­ளி­வா­ச­லாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்ட இப்­பள்­ளி­வா­சலில் தொடர்ந்து தொழு­கைகள் நடத்­தப்­பட்டு வந்­தன. என்­றாலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் மே மாதம் 13 ஆம் திகதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­செ­யல்­க­ளின்­போது லுஃலு பள்­ளி­வாசல் இன­வா­தி­களால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டது. இப்­பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட சேதம் 13 இலட்சம் ரூபா­வென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கொண்ட சேத விபர ஆய்­வு­க­ளின்­போது கணிப்பிடப்­பட்­டுள்­ளது. பின்பு இப்­பள்­ளி­வாசல் ஊராரின் முயற்­சி­யினால் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு நிறப்­பூச்சு பூசப்­பட்டு தொழு­கைகள் மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

தொழு­கைகள் நடத்தத் தடை

இந்­நி­லை­யி­லேயே குளி­யாப்­பிட்டி, உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் அபே­ரத்­னவின் உத்­த­ர­வுக்­க­மைய கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் பள்­ளி­வா­சலில் தொழு­கை­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­ட­துடன் பள்­ளி­வா­சலும் மூடப்­பட்­டது.

இந்தப் பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடத்தி வந்­தவர் பக்­கத்து ஊரான அனுக்­க­னையைச் சேர்ந்­த­வ­ராவார். மௌலவி எம்.ஐ.எம். நசீர் எனும் பெய­ரு­டைய இவர் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பு கொண்­டி­ருந்­த­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இது தொடர்பில் லுஃலு பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைச் செய­லாளர் முஹம்மத் ஷாபி தெரிவிக்கையில், கடந்த மாதம் ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு எம்மை அழைத்து பள்­ளி­வாசல் தொடர்பில் விசா­ரித்­தார்கள். மறு­தினம் அதா­வது ஜூலை 18 ஆம் திகதி குளி­யாப்­பிட்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திடீ­ரென லுஃலு பள்­ளி­வா­சலில் தொழுகை நடத்த வேண்­டா­மெ­னவும் மூடி­வி­டு­மாறும் உத்­த­ர­விட்டார். எமக்கு வேறு­வழி தெரி­யாது மூடி விட்டோம் என்றார்.
பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சலை மூடும்­படி உத்­த­ர­வி­டப்­ப­டு­கின்­ற­மைக்­கான கார­ணத்தை பள்­ளி­வாசல் நிர்­வாகம் கோரி­யி­ருந்­த­போதும் அதற்­கான சரி­யான விளக்கம் அளிக்­கப்­ப­ட­வில்லை. சிங்­க­ள­வர்­களின் பாது­காப்­புக்­காக பள்­ளி­வா­சலின் தொழு­கை­களை தடை­செய்ய வேண்­டிய நிலை உரு­வா­ன­தாக இதன்போது காரணம் கூறப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மத உரி­மைகள் அர­சியல் யாப்­பினால் வழங்­கப்­பட்­டுள்­ளன. இது ஒவ்­வொ­ரு­வரின் சிவில் உரி­மை­யு­மாகும். பள்­ளி­வாசல் என்­பது பொது­வான இட­மாகும். தௌஹீத் பள்­ளி­வாசல் என்­றாலும் அங்கு மக்­களால் தொழு­கை­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அத்­தோடு இந்தப் பள்­ளி­வாசல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தில் சட்ட ரீதி­யாகப் பதிவு செய்­யப்­பட்­டதுமாகும்.

அர­சியல் யாப்­பினால் வழங்­கப்­பட்ட மத உரி­மையை பொலி­ஸா­ரினால் மாத்­தி­ர­மல்ல எவ­ராலும் மறுக்­க­மு­டி­யாது. தடை செய்­ய­மு­டி­யாது. தொழு­கைகள் தடை செய்­யப்­ப­டு­வ­தாயின் அதற்­கான கார­ணத்தை பொலிஸார் முன்­கூட்­டியே நிர்­வா­கத்­தி­ன­ருக்கு அறி­விக்­க­வேண்டும். ஏதும் கார­ணங்­க­ளினால் தொழுகை தடை செய்­யப்­ப­டு­வ­தென்றால் அந்தக் கார­ணங்கள் விசா­ர­ணையின் பின்பு நிரூ­பிக்­கப்­பட்­டு நீதிமன்றம் உத்தரவிட்டாலே அவ்­வா­றான தீர்­மா­ன­மொன்றை பொலி­ஸா­ரினால் மேற்­கொள்ள முடியும்.

பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடத்தி வந்­த மௌலவி 3 மாதங்­க­ளுக்கு முன்பு கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள போதிலும் அவரது கைதுக்கும் பள்­ளி­வா­சலில் தொழு­கைளைத் தடை செய்வதற்கும் தொடர்பு இருக்­கி­றது என்று கூற­மு­டி­யாது.

பிர­தேசத்திலுள்ள சிலரால் குளி­யாப்­பிட்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு கடிதம் அனுப்­பப்­பட்டே இப்­பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­கான தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என இறு­தி­யாக தமக்கு நம்பத் தகுந்த தக­வல்கள் கிடைத்­தி­ருக்­கின்­றன என இப் பள்ளிவாசலின் செயலாளர் முஹம்மத் ஷாபி தெரி­விக்­கிறார்.

லுஃலு பள்­ளி­வா­சலில் எவ­ரேனும் தொழுதால் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என குளி­யாப்­பிட்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் தெரி­வித்­தி­ருப்­பதால் அந்தப் பள்­ளி­வா­சலைப் பிர­தி­நி­தித்­துவப்படுத்­திய மக்கள் அச்­சத்தில் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடல்

பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு தடை விதித்­துள்­ளமை தொடர்பில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வாகம் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சில், அமைச்சின் அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யது. பள்­ளி­வா­ச­ல் விவகாரங்களுக்குப் பொறுப்­பான அமைச்சர் ஹலீமின் இணைச் செய­லாளர் மலிக், குரு­நாகல் பிரதி பொலிஸ் மா அதி­ப­ருடன் அன்றே தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு சம்­ப­வத்தை விளக்­கினார். பள்­ளி­வா­சலில் தொழுகை தடை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்­பான அனைத்து விப­ரங்­களும் பிரதி பொலிஸ் மா அதி­ப­ரினால் கோரப்­பட்­டுள்­ளன. இவ்­வி­வ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கு முறைப்­பா­டு­களைக் கைய­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ளது.

கொட்­டாம்­பிட்டி மஸ்­ஜிதுல் ஹுதா பள்­ளி­வாசல் தலைவர்

கொட்­டாம்­பிட்டி மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்­ளி­வாசல் லுஃலு பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து சுமார் 100 மீட்டர் தூரத்­திலே அமைந்­துள்­ளது. மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்­ளி­வா­சலில் தலைவர் எம்.ஆர்.எம். ஜெலீலைத் தொடர்பு கொண்டு இவ்­வி­வ­காரம் தொடர்பில் வின­வினோம்.

கொட்­டாம்­பிட்­டியில் ஒரு ஜமா­அத்தே இருந்­தது. அதில் ஒரு பிரி­வினர் 2000 ஆம் ஆண்டு சண்­டையிட்டு பிரிந்து சென்றே லுஃலு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொண்டு தொழு­கை­களை நடத்­தி­னார்கள். எவரும் அந்தப் பள்­ளி­வா­சலை பொலி­ஸா­ரிடம் காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை. அப்­பள்­ளியில் ஜும்ஆ நடத்த வேண்டாம் என்று கூறியும் ஜும்ஆ நடத்­தி­னார்கள். அப்­பள்­ளியின் புனர்­நிர்­மாணப் பணி­க­ளுக்கு மஸ்­ஜிதுல் ஹுதா­வுக்கு கிடைத்த நிதி­யி­லி­ருந்து 5 இலட்சம் ரூபா வழங்­கி­யு­முள்ளோம். நோன்புப் பெருநாள் தொழு­கையை அவர்கள் அப்­பள்­ளி­வா­ச­லிலே நடத்­தி­னார்கள். எங்­க­ளுக்குள் எந்தப் பிரி­வி­னையும் இல்லை. அந்தப் பள்­ளி­வா­சலின் உப தலைவர் தற்­போது மஸ்­ஜிதுல் ஹுதா­விலே தொழு­கிறார் என்றும் அவர் கூறினார்.

தவ­றான தக­வல்கள் வழங்­கப்­பட்­டதா?

எவ்­வித தக­வல்­களும் பெற்றுக் கொள்­ளாமல் பொலிஸார் தொழு­கை­க­ளுக்­கான தடையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கமாட்­டார்கள். அவ்­வா­றான தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தால் பொலிஸார் அத்­த­க­வல்­களின் உண்மைத் தன்­மையைக் கண்­ட­றிந்­தி­ருக்க வேண்டும்.

அப்­ப­கு­தியில் வாழும் பெரும்­பான்மை இன மக்­களை அமைதிப்படுத்­து­வ­தற்­கா­கவே பள்­ளி­வா­சலில் தொழுகைத் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச அர­சி­யல்­வாதி ஒருவர் தெரி­வித்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஒரு இனத்தின் வேண்­டு­தலின் பேரில் இன்­னொரு இனத்தின் மத நிலை­யங்­களை மூடி­வி­டு­வது ஒரு போதும் நன்­மை­யா­காது. அது வன்­செ­யல்­களை அதி­க­ரிப்­ப­தா­கவே அமையும். இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சல்­களை அதி­க­ரிக்கும். இவ்வாறு இலங்கையின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு மத்தலமும் இதுவரை மூடப்படவில்லை.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பண்­டு­வஸ்­நு­வர கிளையின் செய­லாளர் மௌலவி ஐ.எல்.எம்.ருவைஸ் மௌல­வியும் லுஃலு அம்மார் பள்­ளி­வாசல் தொடர்­பாக எவரும் தவ­றான தக­வல்­களை வழங்­க­வில்லை என தெரிவித்துள்ளார். எவரும் அந்தப் பள்­ளி­வா­சலைக் காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை. அது தௌஹீத் பள்­ளி­வாசல் என்­ப­த­னா­லேயே பொலிஸார் அங்கு தொழு­கைக்குத் தடை விதித்­துள்­ளார்கள் என்று தெரி­வித்­துள்ளார்.

இந்தப் பள்­ளி­வா­சலை மூடி­வி­ட­வேண்­டிய தேவை இங்­குள்ள எவ­ருக்கும் இல்லை. தற்­போது அங்கு தொழுகை தடை செய்­யப்­பட்­டி­ருப்­பதால் அப்­பள்­ளி­வாசல் ஜமா­அத்தைச் சேர்ந்த 10 பேர் மஸ்­ஜிதுல் ஹுதா­வுக்கே வந்து தொழு­கி­றார்கள். இப்­ப­கு­தியில் நாம் முரண்­பா­டு­க­ளின்றி ஒற்­று­மை­யாக வாழ­வேண்டும். மார்க்கக் கட­மை­களை நிறை­வேற்ற வேண்டும். என்றே நாம் கரு­து­கிறோம். மஸ்­ஜிதுல் ஹுதா­வுக்கு வந்து தொழ வேண்டாம் என நாம் எவ­ரி­டமும் கூற­வில்லை என்றும் தெரி­வித்­துள்ளார்.

50 குடும்­பங்­க­ளுக்கு அசௌ­க­ரியம்

கொட்­டாம்­பிட்டி லுஃலு பள்­ளி­வா­சலில் தொழு­கை­க­ளுக்கு தடை­செய்­யப்­பட்டு பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளதால் அப்­பள்­ளி­வா­சலின் நிர்­வா­கத்தின் கீழுள்ள சுமார் 50 குடும்­பங்கள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

அப்­பள்­ளி­வா­சலில் இயங்கி வந்த குர்ஆன் மத்­ரஸா மற்றும் தொழு­கைகள் முடங்கிப் போயுள்­ளன. அங்கு வாழும் மாண­வர்கள் வேறு குர்ஆன் மத்­ர­ஸாவில் தங்கள் கல்­வியைத் தொடர்­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. அப்­ப­குதி மக்கள் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழு­கைக்கு அரு­கி­லி­ருக்கும் பள்­ளி­வா­சல்­களை நாட வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. எனவே பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பள்­ளி­வா­சலை மீண்டும் திறப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வேண்டும்.

பள்­ளி­வாசல் தொடர்பில் தவ­றான தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தால் அவை தவ­றா­னவை என்­பதை நிரூபிப்பதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும்.
கொட்டாம்பிட்டியின் பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹுதா கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசலை மீண்டும் திறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

லுஃலு பள்ளிவாசல் நிர்வாக சபைச் செயலாளர் முஹம்மத் ஷாபி, கொட்டாம்பிட்டி ஹுதா பள்ளிவாசல் நிர்வாகம் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் சிபாரிசு செய்தால் பள்ளிவாசலை மீண்டும் திறக்கலாம் என்று ‘விடிவெள்ளி’ யிடம் தெரிவித்தார். நாம் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகச் சபைத் தலைவர் எம்.ஆர். ஜெலீலிடம் இது தொடர்பில் வினவினோம். ‘அவ்வாறு பொலிஸாருக்குச் சிபாரிசு செய்வதென்றால் என்னால் தனித்துத் தீர்மானம் மேற்கொள்ள முடியாது பொதுக் கூட்டத்தைக் கூட்டியே தீர்மானிக்கவேண்டும்’ என அவர் கூறினார்.

ஒன்றுபட்டுத் தீர்க்க வேண்டும்

லுஃலு பள்­ளி­வாசல் புன­ர­மைப்­புக்­காக வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சும் 5 இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கி­யுள்­ளது. பள்­ளி­வாசல் புன­ர­மைப்பு பணிகள் இடம்­பெற்­றுள்ள நிலையில் அங்கு தொழு­கைகள் தடை செய்­யப்­பட்­டி­ருப்­பது எந்த வகை­யிலும் நியா­ய­மா­காது. தௌஹீத் கொள்­கை­களைக் கொண்ட பள்­ளி­வாசல் என்று முத்­திரை குத்தி பொலிஸார் தொழு­கையை தடை செய்­வது மத உரிமை மீற­லாகும். முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இவ்­வி­வ­கா­ரத்தில் உட­ன­டி­யாகத் தலை­யிட வேண்டும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளது. சமூகத்துக்கு எதிரான சவால்களை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். பிரிந்து நிற்பது இனவாத சக்திகளுக்கு உரமூட்டுவதாக அமையும். எமக்கிடையில் விட்டுக் கொடுப்புகள் அவசியம். தௌஹீத் பள்ளியா? தப்லீக் பள்ளியா? என்று பார்த்து சண்டை பிடிக்கின்ற தருணம் இதுவல்ல. லுஃலு அம்மார் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அங்கு மீண்டும் தொழுகைகள் இடம்பெற வேண்டும். பிரிந்து நிற்கும் இரு தரப்பும் மசூராக்கள் மூலம் ஒன்றுபட வேண்டும். ஏனென்றால் சமூகத்துக்கு எதிரான எத்தனையோ சவால்களை நாம் முறியடிக்க வேண்டியுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.