ஐந்தாவது கடமையை நிறைவேற்றக் கிடைத்த அதிஷ்ட வாய்ப்பும் அழகான பயணமும்

அனுபவப் பகிர்வு

0 850

பண வச­தியும் உடல் பலமும் இருப்­ப­வர்­க­ளுக்­குத்தான் அல்லாஹ் ஐந்தாம் கட­மையை கட்­டா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறான். சாதா­ரண வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை ஒரு கன­வா­கத்தான் இருக்கும். எனினும், குறித்த கனவு எதிர்­பா­ராத நேரத்தில் நிறை­வே­று­வ­தா­னது ஓர் இன்ப அதிர்ச்­சி­யா­கவே இருக்கும். அப்­ப­டி­யா­ன­தொரு அனு­பவம் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி எனக்கு ஏற்­பட்­டது.

ஊட­க­வியல் கல்­லூ­ரியில் படித்த சக­மா­ண­வனும் எனது நண்­ப­னு­மான ரிப்தி அலி சில மாதங்­க­ளுக்கு முன்னர் என்னை தொடர்­பு­கொண்டு, “இம்­முறை ஹஜ் செய்­வ­தற்­கான வாய்ப்பு கிட்­டலாம், இருந்­தாலும் அதனை முழு­மை­யாக நம்­பி­யி­ருக்­காதே. அல்­லாஹ்வின் நாட்­டப்­படி நடக்கும்” என தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்­பாக பெரிதும் ஆவல் கொண்­டி­ரா­த­வ­னாக சாதா­ர­ண­மா­கவே இருந்தேன்.

இந்­நி­லையில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்­பி­லுள்ள சவூதி தூத­ர­கத்தின் அதி­கா­ரிகள் தொடர்­பு­கொண்டு அங்கு வரும்­படி அழைப்­பு­வி­டுத்­தனர். இதன்­படி நண்பன் ரிப்­தி­யுடன் அங்கு சென்­ற­போது, உலக முஸ்லிம் லீக்கின் விருந்­தி­ன­ராக இம்­முறை ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கும் உலக முஸ்லிம் லீக்கின் வரு­டாந்த ஹஜ் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­கு­மான அழைப்­பிதழ் கிடைத்­தி­ருக்­கின்­ற­மையை தெரி­யப்­ப­டுத்­தினர். மிகவும் சினே­கி­த­மாக பேசிய சவூதி தூத­ரக அதி­கா­ரிகள் இதற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெ­று­வதை குறிப்­பிட்­ட­துடன் வாழ்த்­துக்களும் தெரி­வித்து, டிக்­கெட்­டுக்­கான ஏற்­பா­டு­களை செய்­யு­மாறு வேண்­டிக்­கொண்­டனர்.

இதற்­க­மைய கடந்த 6 ஆம் திகதி கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இஹ்ராம் உடை­யுடன் எமது யாத்­திரை ஆரம்­ப­மா­னது. மேல்­மா­காண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், அவ­ரது பாரியார் பெரோஸா முஸம்மில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அலி­ஸாஹிர் மௌலானா, ஏ.ஆர். இஸாக் ஆகி­யோ­ருடன் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உப­செ­ய­லாளர் தாஸிம் மௌல­வியும் உலக முஸ்லிம் லீக்கின் அழைப்பில் மக்கா நோக்கி பய­ண­மா­னோம்.

ஜித்தா விமான நிலை­யத்தில்

ஜித்தா விமான நிலை­யத்தின் ஹஜ்­ஜா­ஜிகள் பயண தொகு­திக்குள் அலு­வல்­களை இல­கு­ப­டுத்­து­வ­தற்­கென அதி­க­மான அதி­கா­ரிகள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இது­த­விர உலக முஸ்லிம் லீக்கின் அதி­கா­ரி­களும் இன்­மு­கத்­துடன் தமது விருந்­தி­னரை வர­வேற்­றனர்.

அத்­துடன், இலங்­கை­யர்­களை வர­வேற்­ப­தற்கும், இலங்­கை­யர்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பார்ப்­ப­தற்கும் சவூதி தூதர­க அதி­கா­ரி­யொ­ரு­வரும் விமான நிலை­யத்­திற்கு வந்­தி­ருந்தார். அவர் அங்கு பய­ணி­களின் பொதிகள் மற்றும் இதர சிக்கல் ஏற்­ப­டும்­போது அதற்­கான உத­வி­களை செய்­து­கொ­டுத்தார்.
விமான நிலையம் முன்­னரை விட மிக வேக­மாக இயங்கக் கூடிய வகையில் இலத்­தி­ர­னியல் முறை­மைகள் அறி­மு­கப் ­ப­டுத்­தப்­பட்டு செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது.

அங்­கி­ருந்த சிற்­றூ­ழி­யர்கள் கூட ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு உத­வு­வதைக் காணக்­கி­டைத்­தது. இலங்­கையை சேர்ந்த தமிழ் சகோ­தரர் ஒருவர் அங்கு சிற்­றூ­ழி­ய­ராக பணி­யாற்­று­வ­துடன், இலங்கை யாத்­தி­ரி­கர்கள் வந்­த­வுடன் அந்த இடத்­திற்கு வந்து பல்­வேறு உத­வி­களைச் செய்­து­கொ­டுத்தார்.

கஃபாவை நோக்கி

விமான நிலை­யத்­தி­லி­ருந்து மினா நோக்கிப் பய­ண­மானோம். மினாவில் உலக முஸ்லிம் லீக்கின் விசேட அலு­வ­லகம் அமை­யப்­பெற்­றி­ருக்­கி­றது. அங்கு அழைத்துச் செல்­லப்­பட்டு எமது பதி­வு நட­வ­டிக்­கை­களின் பின்னர் உம்­ராவை நிறை­வேற்ற ஹர­முக்கு சென்றோம்.

“லப்பைக் அல்­லா­ஹும்ம லப்பைக்” என தொடங்கும் தல்பிய்யாவுடன் உம்ரா பயணம் தொடர்ந்­தது. இறை­யில்­லத்தில் எம் கால் தடங்கள் பதி­யப்­போகும் சந்­தோஷம் ஆழ் மனதை பூரிப்­ப­டை­யச்­செய்­தது. நம் பாவங்­களை கழுவும் இறை­வனின் புனித பூமியை தொட்­ட­வுடன் நமக்­கா­கவும் நம் உற­வுகள் சக­பா­டிகள் மற்றும் தேசத்­துக்­கான பிரார்த்­த­னை­க­ளோடு ஹரம் ஷரீ­புக்குள் உள்­நு­ழைந்தோம்.

ஏழு சுற்­றுக்கள் தவாப், சபா  மர்­வாக்­கி­டையே ஏழு ஸயீக்­களை முடித்­துக்­கொண்டும் ஹரமில் சுபஹ் தொழு­கையை நிறை­வேற்­றி­ய­வர்­க­ளாக மீண்டும் மினா­வுக்கு சென்றோம்.

மினாவில்

ஹஜ்ஜில் அதிக நாட்கள் தரித்து நிற்கும் ஓர் இடம்தான் மினா பள்­ளத்­தாக்கு. அங்கு ஹாஜிகள் தங்­கு­வ­தற்­கான கூடா­ரங்கள் அமையப் பெற்­றி­ருக்­கின்­றன. அத்­தோடு, அங்­குள்ள பிர­மாண்­ட­மான பள்­ளி­வா­ச­லான மஸ்­ஜிதுல் கைப், ஹஜ் பரு­வ­கால வணக்­கங்­க­ளுக்­காக திறக்­கப்­பட்­டி­ருந்­தது.

துல்ஹஜ் பிறை 9 இல் மினா­வி­லி­ருந்து இஹ்ராம் அணிந்து ஹாஜிகள் அர­பா­விற்கு பய­ண­மாகத் தயா­ராவர். ஆக நாம் அங்கு பிறை 6 இலேயே சென்­று­விட்டோம். மினா சன­ந­ட­மாட்­ட­மின்றி அமை­தி­யா­கவே இருந்­தது. பிறை 8 இன் இர­வி­லேயே மினாவை நோக்கி ஹாஜிகள் வர ஆரம்­பித்­து­விட்­டனர். அதற்கு முன்­ன­தாக பாது­காப்புத் தரப்­பி­னரும் சுத்தம் செய்யும் பணியில் ஈப­டு­ப­வர்­களும் மினாவில் முகா­மிட்­டி­ருந்­தனர்.

அத்­துடன், மினா­வி­லுள்ள அவ­சர சிகிச்சை வைத்­தி­ய­சாலை மற்றும் பொலிஸ் அவ­சர பிரி­வு­களும் தீயணைப்பு பிரிவு உள்­ளிட்ட சேவை­களை வழங்க தயார் நிலையிலிருந்தன. ஹெலி­கொப்­டர்­களும் பறந்­த­வண்ணம் இருந்­தன.

அரபா மைதானம்

பிறை 9 சுபஹ் தொழு­கை­யுடன் அரபா நோக்கி பய­ண­மானது முஸ்லிம் லீக்கின் வாகனத் தொடர். சூரிய உத­யத்­துடன் அர­பாவை அடைந்தோம். அங்கு மஸ்­ஜிதுந் நம்ர் உள்­ளது. அங்கு மக்கள் வெள்ளம் திரண்­டது. பள்­ளி­வா­ச­லுக்­க­ருகே ஒரு பகுதி உலக முஸ்லிம் லீக் விருந்­தி­னர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. லுஹர் வரை திக்­ரு­டனும் குர்ஆன் ஓது­வ­து­டனும் நேரம் கழிந்­தது.
லுஹர் தொழு­கையை தொடர்ந்து ஹஜ் பேருரை இடம்­பெற்­றது. ஹஜ்ஜின் மகத்­துவம் மற்றும் அதன் தாற்­ப­ரி­யங்கள் பற்றி எடுத்­து­ரைத்த இமாம் உலக சமா­தானம் அதில் நமது பங்­க­ளிப்பு குறித்தும் வலி­யு­றுத்­தினார்.

அர­பாவில் மழை

அரபா பேருரை நிறை­வ­டைந்து மக்கள் துஆக்­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கும்­போது அங்கு மழை பெய்ய ஆரம்­பித்­தது. கிட்­டத்­தட்ட ஒன்­றரை மணி நேரம் மழை தொடர்ந்­தது. இலங்­கையில் பெய்யும் அடை மழை போல் இல்­லை­யென்­றாலும் சவூதி பாலை நிலத்தில் மழை பெய்­வது வியப்­பா­ன­தொரு நிகழ்­வாக அமைந்­தி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. ஏனெனில் நாம் அடிக்­கடி மழை­யு­ட­னான பருவ காலத்தை சந்­திப்­ப­தாலோ என்­னவோ சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொண்டோம், எனினும் ஏனையோர் வெளியில் சென்று கொட்டும் மழையில் இரு­கரம் ஏந்தி இறை­வ­னுக்கு நன்றி தெரி­வித்து துஆப் பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டனர்.

முஸ்­த­லி­பாவில்

சூரியன் அஸ்­த­ம­ன­மாகும் போது அர­பாவிலிருந்து வெளி­யேறத் தொடங்­கினர் ஹாஜிகள். அங்­கி­ருந்து முஸ்­த­லிபா நோக்கி பயணம் தொடர்ந்­தது. அங்கு சென்ற பின்னர் மஃரிப் மற்றும் இஷா தொழு­கை­களை சேர்த்து தொழு­து­கொண்­டனர். எமக்கு பிரத்­தி­யே­க­மாக இட ஒதுக்­கீடு இருந்­த­போ­திலும் பெரும்­பா­லான ஹாஜிகள் வீதி­க­ளிலும் அங்கும் இங்­கு­மாக தரித்­தி­ருந்து அன்­றைய இரவைக் கழித்­தனர்.

தவாபுல் இபாழா

நள்­ளி­ரவு தாண்டும் போது முஸ்­த­லி­பா­வி­லி­ருந்து கற்­களை எடுத்­துக்­கொண்டு மினா நோக்­கிச்­சென்றோம். அங்கு ஷைத்­தா­னுக்கு கல்­லெ­றிந்­து­விட்டு கஃபா நோக்­கிச்­சென்று அங்கு தவாபுல் இபா­ழாவை நிறை­வேற்­றினோம். தொங்­கோட்டம் ஆரம்­ப­மா­ன­போது அன்னை ஹாஜரா நாய­கியின் கஷ்டத்தை உணர முடிந்­தாலும் நாம் குளி­ரூட்­டப்­பட்ட சபா மர்­வா­வுக்­கி­டை­யேதான் ஓடு­கின்றோம் என்ற குற்ற உணர்வு வரா­ம­லில்லை. தொங்­கோட்டம் நிறை­வ­டைய தலை முடியை சிரைத்­துக்­கொண்டு மீண்டும் மினா­வுக்கு வந்து இஹ்­ராம் உடையைக் களைந்தோம்.

ஹஜ்ஜின் இறுதித் தறு­வாயில்

பிறை 11,12,13 ஆகிய தினங்­களில் மினாவில் தரித்து மூன்று ஜம்­ரத்­து­க­ளுக்கு கல்­லெ­றிந்­த­துடன் நாடு­தி­ரும்பும் தின­மான 17 ஆம் திகதி இறுதி பிரி­யா­விடை தவா­பையும் முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பினோம். மினாவில் தரித்­தி­ருந்­த­போது அரை மணி நேரம் கடும் மழை பொழிந்­ததில் சாதா­ரண வெள்­ளப்­பெ­ருக்கும் ஏற்­பட்­டது.

மினா கூடா­ரங்­களில் தங்­கி­யி­ருக்கும் இலங்கை ஹாஜி­களை பார்ப்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்த பகு­திக்கு சென்­றி­ருந்தோம். மிகவும் சிறிய இடங்கள் தான் எல்­லோ­ருக்கும் பொது­வா­கவே ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன. எதிர்காலத்தில் இதனை விரி­வாக்க வேண்­டிய தேவைகள் இருக்­கின்­றன.

முஸ்லிம் லீக்கின் விருந்­தோம்பல்

இம்­முறை ஹஜ்­ஜிற்கு 2.5 மில்­லியன் மக்கள் வரை ஒன்­று­கூ­டினர். இதில் உலக முஸ்லிம் லீக்கின் விருந்­தி­னர்­க­ளாக 76 நாடு­க­ளி­லி­ருந்து 500 பேர் வரை வருகை தந்­தி­ருந்­தனர். எல்­லோ­ருக்கும் மிகவும் கண்­ணி­ய­ம­ளித்து இல­கு­வான முறையில் ஹஜ்ஜை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை உலக முஸ்லிம் லீக் மேற்­கொண்­டி­ருந்­தது. அத்­துடன் அவர்­க­ளுக்­காக உணவு வச­திகள், தங்­கு­மிடம் மற்றும் போக்­கு­வ­ரத்து தேவை­களை மிக இல­கு­ப­டுத்­திக்­கொ­டுத்­த­துடன், ஏற்பாடுகள் சொகு­சான முறை­யிலும் அமைத்­தி­ருந்­தது.

முஸ்லிம் லீக் வரு­டாந்த ஹஜ் மாநாடு

முஸ்லிம் லீக்கின் வரு­டாந்த ஹஜ், உம்ராஹ் மாநாடு 12 ஆம் திகதி மினா­வி­லுள்ள அவ்­வ­மைப்பின் விசேட அலு­வ­லக கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. அதன் செய­லாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் இஸ்ஸா தலை­மையில் இடம்­பெற்ற நிகழ்வில், முஸ்லிம் உலகில் நிகழ்ந்­து­கொண்­டி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்கத் தயா­ராதல், அதற்குத் தீர்­வைப்­பெற விஞ்­ஞான ரீதி­யிலும் அறி­வுசார் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் பாடு­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இஸ்­லாத்தின் தூண்­க­ளாக கருணை மற்றும் முற்­போக்­கான சிந்­தனை என்­ப­வற்றை முன்­னி­லைப்­ப­டுத்தி இம்­மா­நாடு இடம்­பெற்­றது. இதன் மூலம் நாம் பிற சமூ­கத்­துடன் வாழும்­போது இஸ்­லாத்தின் உண்­மை­யான செய்­தியை எடுத்­துக்­கூற முடியும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சார­ணி­யர்­களின் பங்­க­ளிப்பு

ஹஜ் காலத்தில் சார­ணியர் அமைப்­பி­னரின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­ய­தாக இருந்­தது. பல்­க­லைக்­க­ழகம், பாட­சாலை மற்றும் கல்வி நிறு­வ­னங்­களில் பயிலும் மாண­வர்கள் இந்த சார­ணியர் அமைப்பில் உள்­ளீர்க்­கப்­பட்டு ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு தொண்டு செய்ய பயிற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். விமான நிலையம் முதல் எல்லா பகு­தி­க­ளிலும் இவர்­களின் உத­வி­களை பெற முடி­யு­மாக இருந்­தது. பொது­வாக அர­பிகள் மற்றும் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு ஆங்­கிலம் தெரி­யாத கார­ணத்­தினால் சார­ணியர் அமைப்­பி­லுள்­ள­வர்­களின் உதவி அளப்­ப­ரி­ய­தாக அமைந்­தி­ருந்­தது. முதி­ய­வர்­க­ளுக்கு உத­வுதல், வழி தெரி­யாமல் தவிப்­ப­வர்­களை உரிய இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்லல் மற்றும் நீர் விநி­யோ­கித்தல் என எல்லா விட­யங்­க­ளிலும் இவர்கள் உத­வக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருந்­தனர்.

பாரிய அபி­வி­ருத்­திகள்

ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் உம்­ரா­வுக்­காக சென்­றி­ருந்­த­போது இருந்­த­தை­விட தற்­போது மக்கா பாரிய அபி­வி­ருத்­தி­களை கண்­டி­ருந்­தது. குறிப்­பாக நெடுஞ்­சாலை அபி­வி­ருத்­திகள், சுரங்­கப்­பாதை அமைத்தல் என நகரம் வளர்ச்சி கண்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் போக்­கு­வ­ரத்­து­களும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஒரு­வழிப் பாதை­களை அமைத்து நெருக்­க­டிகள் தவிர்க்­கப்­பட்­டி­ருந்­தன. ஹாஜி­க­ளுக்கு இல­வச பஸ் சேவை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.
ஹரம் ஷரீப் மற்றும் கல்லெறியும் பகுதிகள் நான்கு மாடிகளாக அமைக்கப்பட்டு, மின் உயர்த்திகள் என்பனவும் செயற்படுத்தப்பட்டிருந்தன. இது தவிர எல்லா இடங்களிலும் நீர் விசிறும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தன.

மருத்துவம்

மினா, அரபா மற்றும் ஏனைய எல்லா இடங்களிலும் ஹாஜிகளுக்கு வைத்திய சேவைகளை வழங்க வைத்தியர்களும் அம்பியுலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மினாவில் அவ­சர நோயா­ளிகள் வைத்­தி­ய­சா­லைக்கு ஹெலி­கொப்டர் மூலம் எடுத்­துச்­செல்­லப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

ஹஜ் ஏற்­பா­டு­களை சவூதி அர­சாங்கம் மிகவும் பிர­மாண்­ட­மா­கவே மேற்­கொண்­டி­ருந்­தது. எனினும் இங்கு சில விட­யங்­களை சுட்­டிக்­காட்­ட­வேண்­டி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக குப்பை ஒரு பிரச்­சி­னை­யாக கரு­தப்­பட வேண்டும். அதா­வது பொலித்தீன் பாவனை அங்கு அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதற்கு மாற்­று­வழியை சிந்­திக்க வேண்டும். அத்­துடன் மினா­விலும் அர­பா­விலும் இருக்கும் நெருக்­க­டி­க­ளுக்கு மேலும் தீர்வு வழங்க முயற்­சிக்­கலாம்.
எது எப்­ப­டியோ இம்­முறை ஹஜ் யாத்­திரை எவ்­வித குள­று­ப­டி­க­ளு­மின்றி முடி­வ­டைந்­தது, அல்­ஹம்­து­லில்லாஹ்.

அவ்­வாறே எனது இந்த புனித பயணத்திற்கு உதவிய சகல தரப்பினரையும் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக…!

vidivelli

Leave A Reply

Your email address will not be published.