பள்ளிவாசலில் தொழுகை தடை அரசியல் யாப்பை மீறும் செயல்

0 704

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது. ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மே மாதம் 13 ஆம் திகதி முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்கள் எமது பள்­ளி­வா­சல்­க­ளையும் விட்­டு­வைக்கவில்லை. வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு ஒரே தினத்தில் கடந்த மே மாதம் 13 ஆம் திக­தியே அதிக எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கின.

குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும், கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் வன்­செ­யல்­க­ளுக்கு இலக்­கா­கின. இவ்­வாறு சேதப்­ப­டுத்­தப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் சில தினங்­களில் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு சிறு திருத்த வேலைகள் மேற்­கொள்­ளப்­பட்டு மீண்டும் இயங்க ஆரம்­பித்­தன. தொழு­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பள்­ளி­வா­சல்­களின் புனர்­நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு முதற்­கட்­ட­மாக வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சினால் நிதி­யு­த­வியும் வழங்­கப்­பட்­டது.

வன்­செயல் தாக்­கு­தல்­களை மறந்து மக்கள் தங்­க­ளது பிர­தேச பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை நடாத்தி வந்த நிலையில் ஹெட்­டி­பொ­ல–­கொட்­டாம்­பிட்டி லுஃலு பள்­ளி­வாசல் எதிர்­பா­ராத வகையில் அதிர்ச்சி நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் குளி­யா­ப்பிட்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அந்தப் பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடத்த வேண்­டா­மெ­னவும் பள்­ளி­வா­சலை மூடி­வி­டு­மாறும் உத்­த­ர­விட்­டுள்ளார்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னரை ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் மூடப்­ப­டு­வ­தற்­கான கார­ணத்தை பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் கோரி­யி­ருந்­த­போதும் அதற்­கான சரி­யான விளக்கம் அளிக்கப்பட­வில்லை. சிங்­க­ள­வர்­களின் பாது­காப்­புக்­காக பள்­ளி­வா­சலின் தொழு­கை­களை தடை­செய்ய வேண்­டிய நிலை உரு­வா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எமது நாட்டில் மத உரி­மைகள் அர­சியல் யாப்­பினால் வழங்­கப்­பட்­டுள்­ளன. இது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் சிவில் உரி­மை­யு­மாகும். பள்­ளி­வாசல் என்­பது பொது­வான இட­மாகும். அத்­தோடு அந்­தப்­பள்­ளி­வாசல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் சட்ட ரீதி­யாக பதிவு செய்­யப்­பட்ட மத நிலை­ய­மாகும்.

மஸ்­ஜிதுல் லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் செய­லாளர் முஹம்மட் ஷாபி தொழு­கை­க­ளுக்­கான தடை குறித்து முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­முக்கு முறைப்­பாடு செய்தும் எவ்­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்ள வில்லை எனத் தெரி­வித்­துள்ளார். பள்­ளி­வாசல் நிர்­வாகம் அறி­வித்தும் அமைச்சர் உரிய நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ரா­தி­ருந்தால் அது தவ­றா­ன­தாகும்.

இதே­வேளை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இன்று புதன்­கி­ழமை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை அழைத்­தி­ருப்­ப­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபை செய­லாளர் தெரி­வித்­தார். இந்­நி­லையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் பள்­ளி­வா­சலில் தொழு­கைகள் நிறுத்­தப்­பட்ட மைக்­கான கார­ணத்தை எழுத்து மூலம் கேட்­ட­றிந்து மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும்.

குறிப்­பிட்ட பள்­ளி­வா­சலில் அயலூர் அனுக்­க­னையைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.நஸீர் என்­ப­வரே தொழு­கை­களை நடத்தி வந்­துள்ளார். அவர் கடந்த 3 மாதங்­க­ளுக்கு முன்பு கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அவ­ரது கைதுக்கும் பள்­ளி­வா­சலில் தொழு­கை­களின் தடைக்கும் சம்­பந்தம் இருக்க முடி­யாது. ஏனென்றால் ஒரு­வரை கைது செய்­த­தற்­காக அப்­பள்­ளியில் தொழு­கை­களை எவ­ராலும் தடை செய்ய முடி­யாது. அவ்­வாறு தொழு­கைகள் தடை­செய்­யப்­ப­டு­வ­தாயின் அதற்­கான கார­ணத்தை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் தெரி­விக்­க­வேண்­டி­யது பொலி­ஸாரின் கட­மை­யாகும். அத்­தோடு ஒரு இனத்தின் பாது­காப்­புக்­கென்று கூறி இன்னோர் இனத்தின் மத­நி­லை­யங்­களை எவ­ராலும் மூடி­விட முடி­யாது. இது அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும்.
வன்­செ­யல்­க­ளினால் பாதிப்­புற்ற பள்­ளி­வா­சல்­களை புனர் நிர்மாணம் செய்வதற்கு நிதியுதவி வழங்கி வரும் அரசு பள்ளிவாசலொன்றின் தொழுகைகளுக்கு தடை விதித்திருக்கின்றமை வியப்புக்குரியதாகும்.

பாதுகாப்பு அதிகாரிகள் தாம் நினைத்தவாறெல்லாம் சட்டத்தை அமுல் நடாத்துவதற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்படக்கூடாது. முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் இச்சம்பவத்தை பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளுக்கு தடைவிதிக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

vidivelli.lk

Leave A Reply

Your email address will not be published.